என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Royal Challengers Bangalore"

    • நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
    • ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த வெற்றி, ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பையும், சந்தை மதிப்பையும் உயர்த்தியுள்ளது.

    முதல் வெற்றி, பிராண்ட் மதிப்பு உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆர்சிபி அணியின் உரிமையாளரான பிரிட்டிஷ் மதுபான நிறுவனமான டயாஜியோ பிஎல்சி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஐபிஎல் உரிமையை விற்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    டயாஜியோ நிர்வாகம் ஆர்சிபி அணியின் முழு அல்லது பகுதி உரிமையை விற்க திட்டமிடுவதாகவும், இதற்கு ஆர்சிபி அணியை 2 பில்லியன் டாலர் வரையில் மதிப்பீட்டை எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, மேலும் அணியை விற்காமல் வைத்திருக்கவும் வாய்ப்புள்ளது.

    18 வருடத்திற்கு பின்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின்பு இப்படியொரு முடிவு எடுத்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • பெங்களூரு அணி 19 ஆட்டத்திலும், டெல்லி அணி 11 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டெல்லி அணி தனது முதல் மூன்று ஆட்டங்களில் லக்னோ, ஐதராபாத், சென்னை அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்து 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்தது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு அணி 19 ஆட்டத்திலும், டெல்லி அணி 11 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    • மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின
    • இப்போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 222 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடே மைதானத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    • மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின.
    • இப்போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 222 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    இப்போட்டியின்போது தன்னை தானே Impact player ஆக ரோகித் சர்மா அறிவித்து கொண்டார். mpact player உள்ளே வரும்போது நடுவர் கொடுக்க வேண்டிய சிக்னலை ரோகித் கொடுத்தார். ரோஹித் ஷர்மாவின் ரியாக்ஷன் இணையத்தில் வைரலானது.

    • சூர்யகுமார் யாதவ் தூக்கி அடித்த பந்தை யாஷ் தயாள், ஜிதேஷ் சர்மா ஆகிய இருவரும் பிடிக்க முயன்றனர்.
    • 10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடே மைதானத்தில் மும்பையை அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியது.

    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 222 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    இப்போட்டியின் 12 ஆவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தூக்கி அடித்த பந்தை யாஷ் தயாள் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகிய இருவரும் பிடிக்க முயன்றனர். அப்போது இருவரும் மோதிக்கொண்டதால் கேட்சை தவறவிட்டனர்.

    இதனால் கடுப்பான விராட் கோலி தொப்பியை கீழே வீசி தனது கோவத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • கடைசியாக 2015 ஆம் ஆண்டில் தான் வான்கடே மைதானத்தில் மும்பையை ஆர்சிபி அணி வீழ்த்தியிருந்தது.
    • 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தியது

    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 222 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு இழந்து 209 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    இதன்மூலம் ஆர்சிபி அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு வான்கடே மைதானத்தில் மும்பை அணியை வீழ்த்தியுள்ளது. கடைசியாக 2015 ஆம் ஆண்டில் தான் வான்கடே மைதானத்தில் மும்பை அணியை ஆர்சிபி அணி வீழ்த்தியிருந்தது.

    இதேபோல் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - பில் சால்ட் களமிறங்கினர். இதில் சால்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் மற்றும் படிக்கல் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் அரை சதம் அடித்து அசத்தினார். 37 ரன்னில் படிக்கல் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விராட் 67 ரன்னில் பாண்ட்யா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

     இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 222 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் ரோகித் சர்மா 17 ரன்களும், ரியான் ரிக்கல்டன் 17 ரன்களும், வில் ஜாக்ஸ் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சூர்யகுமார் யாதவ் 28 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த வர்மா, ஹர்திக் சிறப்பாக ஆடினர்.

    வர்மா 29 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 56 ரன்களும், ஹர்திக் 15 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 42 ரன்களும், மிட்செல் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது. இதன்படி பெங்களூரு அணி ஐ.பி.எல். 2025 தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

    • விராட் கோலி, படித்தார் அரை சதம் விளாசினர்.
    • மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - பில் சால்ட் களமிறங்கினர். இதில் சால்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் மற்றும் படிக்கல் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் அரை சதம் அடித்து அசத்தினார். 37 ரன்னில் படிக்கல் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விராட் 67 ரன்னில் பாண்ட்யா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

    இதனையடுத்து கேப்டன் படித்தார் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். 25 பந்தில் படித்தார் அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜித்தேஷ் 40 ரன்களுடன் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

    இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • சென்னை- பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.
    • டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகளை அனைத்தும் தீர்ந்து விட்டது.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணியில் இருந்து ஆன்லைன் மூலம் தொடங்கியது.

    www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகளை அனைத்தும் தீர்ந்து விட்டது. ஆன்லைன் முன்பதிவு ஓபன் ஆன சில நொடிகளில் காத்திருப்பு வரிசை 3 லட்சத்தை கடந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    காத்திருப்பு வரிசை 3000 வரை சென்று கடைசி நேரத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது என மெசெஜ் ரசிகர்கள் வேதனையடைந்தனர்.

    • சேப்பாக்கத்தில் 28-ந் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
    • ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 28-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணியில் இருந்து ஆன்லைன் மூலம் இன்று தொடங்கியது.

    www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆஸ்திரேலியாவை சேர்ந்த பென் சாயரை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதாகவும் ஆர்சிபி அணி அறிவித்தது.
    • ஏடிபி துபாய் ஓபன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டி மும்பையில் அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இடம் பெற்றுள்ள ஆர்சிபி அணி ஆஸ்திரேலியாவை சேர்ந்த பென் சாயரை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதாகவும் அறிவித்தது.

    சாயர் நியூசிலாந்து பெண்களின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். மேலும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் மகளிர் உலகக் கோப்பை வென்ற அணியில் உதவி பயிற்சியாளராக இருந்தார்.

    இந்நிலையில் தொடக்கப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆலோசராக சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஏடிபி துபாய் ஓபன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரது கடைசி தொழில்முறை போட்டியாக இருக்கலாம். 36 வயதான மிர்சா, ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னதாக தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரும் அவரது கூட்டாளியான ரோஹன் போபண்ணாவும் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்மிருதி மந்தனா, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், சோஃபி டிவைன், டேன் வான் நீகெர்க் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ், தொடக்க ஏலத்தில் நட்சத்திர வீராங்கனைகளுடன் களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • மும்பை இந்தியன்ஸ் துவக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 28 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 23 ரன்கள் அடித்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 34 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. துவக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். மறுமுனையில் யஷ்திகா பாட்டில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹெய்லியுடன் நாட் ஷிவர் பிரண்ட் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த மும்பை அணி, 159 ரன்கள் சேர்த்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹெய்லி 77 ரன்களுடனும், நாட் ஷிவர் பிரண்ட் 55 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

    ×