என் மலர்

    நீங்கள் தேடியது "Royal Challengers Bangalore"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது.
    • இவரின் ஒப்பந்தம் இந்த மாத இறுதியுடன் முடிவடைவதால், அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் பரிசீலித்து வந்தது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளுள் பெங்களூரு அணியும் ஒன்று. இந்த அணியின் பயிற்சியாளராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தவர் மைக் ஹெசன். இவரது தலைமையின் கீழ் ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 3 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. கடந்த முறை அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாததால் அந்த அணி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 16 ஆண்டுகளாக ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாதது, அந்த அணி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


    இதனை தொடர்ந்து ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. இவரின் ஒப்பந்தம் இந்த மாத இறுதியுடன் முடிவடைவதால், அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் பரிசீலித்து வந்தது.

    இந்த நிலையில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ப்ளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்சிபி அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது. இவருடன் மூன்று ஆண்டுகள் வரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் பெங்களூரு அணி தோல்வியடைய வேண்டும் என்ற நிலை இருந்தது.
    • குஜராத் அணி 19.1 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. நேற்றைய கடைசி லீக் போட்டியில் 2 போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின.

    இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் புள்ளி பட்டியலில் 16 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தது. ஆனால் ரன்ரேட் குறைவாக இருந்தது. இதனால் இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் பெங்களூரு அணி தோல்வியடைய வேண்டும் என்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் காத்திருந்தது.

    இதனையடுத்து இரவு நடைபெற்ற 2-வது போட்டியில் குஜராத் - பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி விராட் கோலியின் அசத்தல் சதத்தால் 197 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி 19.1 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    இந்த போட்டியை டிவியில் பார்த்து கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    முன்னதாக, மும்பை அணிக்காக கிரீன் மற்றும் சுப்மன் கில் சிறப்பாக ஆடினர் என மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.
    • வேறு எந்த ஒரு அணியும் ஐ.பி.எல் தொடரில் ஐந்து முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து தோல்வியடையவில்லை.

    ஐபிஎல் தொடரோட 15-வது லீக் போட்டியில் பெங்களூர் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி பாப், விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடியால் 212 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய லக்னோ அணியின் தொடக்கம் சுமாராகவே இருந்தது. பின்னர் அதிரடி காட்டிய ஸ்டோய்னிஸ் மற்றும் பூரன் ஆகியோரால் லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

    இந்நிலையில் 200-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து அதிகமுறை தோற்ற அணி என்ற மோசமான சாதனையை பெங்களூர் அணி படைத்துள்ளது. வேறு எந்த ஒரு அணியும் ஐ.பி.எல் தொடரில் ஐந்து முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து தோல்வியை சந்தித்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொல்கத்தா அணியுடன் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி 123 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அதிக பட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தடவை பட்டம் பெற்றுள்ளது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா 1 தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

    பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இந்நிலையில் கொல்கத்தா அணியுடன் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி 123 ரன்னில் ஆல் அவுட் ஆனதன் மூலம் மோசமான சாதனையை படைத்துள்ளது.

    ஐபிஎல் தொடரில் குறைந்த ரன்னில் அதிகமுறை ஆல் அவுட் ஆன டெல்லி அணியின் சாதனையை பெங்களூர் அணி சமன் செய்துள்ளது. 15 முறை 125 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்துள்ளது.

    மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் முதல்முறையாக 'ஆல் அவுட்' ஆன அணி என்ற மோசமான சாதனையையும் பெங்களூரு அணி படைத்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • மும்பை இந்தியன்ஸ் துவக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 28 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 23 ரன்கள் அடித்தனர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 34 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. துவக்க வீராங்கனை ஹெய்லி மேத்யூஸ் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். மறுமுனையில் யஷ்திகா பாட்டில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹெய்லியுடன் நாட் ஷிவர் பிரண்ட் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த மும்பை அணி, 159 ரன்கள் சேர்த்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹெய்லி 77 ரன்களுடனும், நாட் ஷிவர் பிரண்ட் 55 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலியாவை சேர்ந்த பென் சாயரை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதாகவும் ஆர்சிபி அணி அறிவித்தது.
    • ஏடிபி துபாய் ஓபன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டி மும்பையில் அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இடம் பெற்றுள்ள ஆர்சிபி அணி ஆஸ்திரேலியாவை சேர்ந்த பென் சாயரை தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதாகவும் அறிவித்தது.

    சாயர் நியூசிலாந்து பெண்களின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். மேலும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் மகளிர் உலகக் கோப்பை வென்ற அணியில் உதவி பயிற்சியாளராக இருந்தார்.

    இந்நிலையில் தொடக்கப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆலோசராக சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஏடிபி துபாய் ஓபன் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரது கடைசி தொழில்முறை போட்டியாக இருக்கலாம். 36 வயதான மிர்சா, ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னதாக தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரும் அவரது கூட்டாளியான ரோஹன் போபண்ணாவும் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்மிருதி மந்தனா, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், சோஃபி டிவைன், டேன் வான் நீகெர்க் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ், தொடக்க ஏலத்தில் நட்சத்திர வீராங்கனைகளுடன் களமிறங்குகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ் #IPL2019 #DCvRCB
    ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேப்பிட்டல்ஸ் தவான் (50), ஷ்ரேயாஸ் அய்யர் (52), ரூதர்போர்டு (13 பந்தில் 28 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

    பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் களம் இறங்கியது. விராட் கோலி நிதானமாக விளையாட பார்தீவ் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    அணியின் ஸ்கோர் 5.5 ஓவரில் 63 ரன்னாக இருக்கும்போது பார்தீவ் பட்டேல் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் விராட் கோலி 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த ஏபி டி வில்லியர்ஸ் 17 ரனனில் ஆட்டமிழந்தார்.



    ஏபி டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்ததும் ஆர்சிபி-யின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது. அதன்பின் வந்த டுபே 16 பந்தில் 24 ரன்கள் அடித்தார். இவரையும், கிளாசனையும் அமித் மிஸ்ரா ஒரே ஓவரில் வீழ்த்தினார். அத்துடன் ஆர்சிபி தோல்வி உறுதியானது.

    கடைசி 7 ஓவரில் 77 ரன்கள் வேண்டும் நிலையில் குர்கீரத் சிங் மான், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அணியின் வெற்றிக்காக போரடினார்கள். இசாந்த சர்மா வீசிய 17-வது ஓவரில் 16 ரன்கள் அடித்தனர். இதனால் சற்று நம்பிக்கை இருந்தது. ஆனால் ரபாடா 18-வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி இரண்டு ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது.



    இசாந்த் சர்மா வீசிய 19-வது ஓவரில் குர்கீரத் மான் சிங் 19 பந்தில் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் இசாந்த் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    ரபாடா வீசிய கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்த ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களே எடுத்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 வெற்றிகளுடன் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வேடிக்கையாக விளையாடிதான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியதாக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #KXIP #RCB #ViratKohli
    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி பஞ்சாபை மீண்டும் வீழ்த்தியது.

    பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது.

    டிவில்லியர்ஸ் 44 பந்தில் 82 ரன்னும் (3 பவுண்டரி, 7 சிக்சர்), ஸ்டோனிஸ் 34 பந்தில் 46 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), பார்த்தீவ் படேல் 24 பந்தில் 43 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். முகமது சமி, விஜோயன்ஸ், கேப்டன் அஸ்வின், முருகன் அஸ்வின் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 17 ரன்னில் வெற்றி பெற்றது.

    நிக்கோலஸ் பூரன் 28 பந்தில் 46 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்), ராகுல் 27 பந்தில் 42 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, ஸ்டோன்ஸ், மொய்ன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.



    பெங்களூர் அணி பெற்ற 4-வது வெற்றியாகும். தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்று அந்த அணி வாய்ப்பில் நீடித்து வருகிறது. வெற்றி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

    எங்களது ஒரே நோக்கம் அணிக்காக சிறப்பாக விளையாடுவது தான். தொடர்ச்சியாக 6 ஆட்டத்தில் தோற்றது உண்மையிலேயே காயத்தை ஏற்படுத்தி விட்டது. இது எங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பே. வேறு எந்த அணியும் இதே மாதிரி 6 ஆட்டங்களில் தொடர்ந்து தோற்றது இல்லை. கடைசியாக ஆடிய 5 ஆட்டத்தில் நான்கில் வென்றுள்ளோம். 5 ஆட்டத்திலும் வென்று இருந்தால் மகிழ்ச்சியுடன் இருந்து இருப்போம். வேடிக்கையாக விளையாடிதான் இந்த ஆட்டத்தில் வென்றோம். நாங்கள் எந்தவித நெருக்கடியிலும் ஆடவில்லை. எப்படி ஆட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KXIP #RCB #ViratKohli
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. #IPL2019 #RCBvsKXIP

    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் 42-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் அணி 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க அந்த அணிவெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. தோற்றால் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும்.

    பஞ்சாப் அணியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்ததால் பெங்களூர் அணி நம்பிக்கையுடன் இருக்கிறது. அந்த அணி பஞ்சாப்பை மீண்டும் தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    பெங்களூர் அணியில் கேப்டன் விராட்கோலி (387 ரன்), டிவில்லியர்ஸ் (332 ரன்), பார்த்தீவ் படேல் (283 ரன்), மொய்ன் அலி (216 ரன்), யசுவேந்திர சாஹல் (14 விக்கெட்) ஸ்டெய்ன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி ராஜஸ்தான் ராயல்சை 2 முறையும் (14 ரன், 12 ரன்) மும்பை (8 விக்கெட்), டெல்லி (14 ரன்), ஐதராபாத் (6 விக்கெட்) ஆகியவற்றை ஒரு முறையும் வீழ்த்தியது. கொல்கத்தா (28 ரன்), சென்னை (22 ரன்), மும்பை (3 விக்கெட்), பெங்களூர் (8 விக்கெட்), டெல்லி (5 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.

    பெங்களூர் அணியிடம் ஏற்கனவே தோற்றதற்கு பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் பஞ்சாப் அணி இருக்கிறது.

    பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் கிறிஸ் கெய்ல் (423 ரன்), லோகேஷ் ராகுல் (399 ரன்), அகர்வால் (227 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் முகமது ‌ஷமி (13 விக்கெட்), கேப்டன் அஸ்வின் (11 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IPL2019 #RCBvsKXIP

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் டோனி பயத்தை காட்டி விட்டார் என விராட் கோலி கூறியுள்ளார். #IPL2019 #RCBvsCSK
    பெங்களூரு:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது.

    சேப்பாக்கத்தில் ஏற்கனவே தோற்றதற்கு அந்த அணி பதிலடி கொடுத்தது. பெங்களூரு அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.

    வெற்றி குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    இந்த போட்டி முழுவதும் உணர்ச்சிகளால் நிரம்பி இருந்தது. 19-வது ஓவர் வரை பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்.

    கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். அதுபோல் நடந்துவிட்டது. ஒரு ரன் வித்தியாசத்தில் போட்டியில் வென்றாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    கடைசி ஓவரில் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியுமோ அதை டோனி செய்துவிட்டார். அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்கள் ஒட்டு மொத்த அணிக்கும் மிகப்பெரிய பயத்தை காட்டி விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார். #IPL2019 #RCBvsCSK
    • Whatsapp
    • Telegram
    • Linkedin