search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை - போட்டி ரத்தானால் ஆர்.சி.பி. நிலை என்ன?
    X

    பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை - போட்டி ரத்தானால் ஆர்.சி.பி. நிலை என்ன?

    • போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும்.
    • குஜராத் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெறும் 70-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தற்போது பெங்களூருவில் மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவது தாமதமாகும் என தெரிகிறது. மழை நிற்காவிட்டால் போட்டி ரத்தாகும் என தெரிகிறது.

    போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். குஜராத் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது. பெங்களூரு அணிக்கு ஒரு புள்ளி வழங்கினால் 15 புள்ளிகள் பெறும்.

    மும்பை, ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை வென்றால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று விடும். தோற்கும் பட்சத்தில் பெங்களூரு அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

    Next Story
    ×