search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடங்குளத்தில் அணுமின் நிலைய  ஊழியர் திடீர் சாவு
    X

    கூடங்குளத்தில் அணுமின் நிலைய ஊழியர் திடீர் சாவு

    • திருச்சி மாவட்டம் பூவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சமயகண்ணன். இவரது மகன் ராஜேஷ்.
    • இன்று அதிகாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    நெல்லை:

    திருச்சி மாவட்டம் பூவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சமயகண்ணன். இவரது மகன் ராஜேஷ்(வயது 33).

    மயங்கி விழுந்தார்

    இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார்.இதற்காக கூடங்குளம் அருகே பரமேஸ்வரபுரத்தில் தனது சக நண்பர்களுடன் அவர் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார்.

    ஒப்பந்த பணியாளரான ராஜேஷ் நேற்று இரவு பணிக்கு சென்றுள்ளார். இன்று அதிகாலையில் வேலை பார்த்துக்கொண்டி ருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    சாவு

    உடனே அங்கு பணியில் இருந்தவர்கள் ராஜேசை மீட்டு ராதாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×