search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rape Attempt"

    • பனியன் நிறுவனத்துக்கு பேக்கிங் வேலை செய்து வருகிறார்.
    • தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் வாயை பொத்தி கற்பழிக்க முயற்சி செய்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் ரோடு குறிஞ்சி நகர் காம்பவுண்டில் 5 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (27) என்பவர் தனது நண்பர்களுடன் குடியிருந்து பனியன் நிறுவனத்துக்கு பேக்கிங் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சதீஷ்குமார் பக்கத்து வீட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்தார். இந்த நிலையில் வீட்டுக்குள் புகுந்த சதீஷ்குமார் அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த 21 வயது இளம் பெண்ணின் வாயை பொத்தி கற்பழிக்க முயற்சி செய்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சதீஷ்குமாரை கீழே தள்ளி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சதீஷ்குமாரை பிடித்து தரும அடி கொடுத்தனர்.

    பின்னர் இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் வாயை பொத்தி கற்பழிக்க முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த பாலமுருகன், அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
    • இதை பற்றி யாரிடமும் கூறக்கூடாது என கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 45). இவர் சம்பவத்தன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு வாய் பேச முடியாத நிலையில் இருந்த ஒரு பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளாார்.

    அங்கு யாரும் இல்லாததை அறிந்த அவர், அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனை கண்ட ஒரு பெண், பாலமுருகனை கண்டித்துள்ளார்.

    அதற்கு பாலமுருகன் இதை பற்றி யாரிடமும் கூறக்கூடாது என கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

    ×