நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக பாதுகாப்பு போலீசாருக்கு தனி அறை ஒதுக்கீடு

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்களது உடமைகளை வைப்பதற்கு இடவசதி இல்லாமல் இருந்தது.
தனி அறையில் அமர்ந்திருக்கும் பெண் போலீசார்.
தனி அறையில் அமர்ந்திருக்கும் பெண் போலீசார்.
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

இதையடுத்து மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானார் வந்து மனு கொடுத்து செல்கி றார்கள். மற்ற நாட்களிலும் பொது மக்களும், அரசியல் கட்சியினரும் மனு அளிக்க வருகிறார்கள்.

மனு அளிக்க வரும் பொது மக்கள் சிலர் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் நடந்து வரு வதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அலுவலகத்தின் முன் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வரு பவர்களை சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்து வருகிறார்கள். பாதுகாப்பு பணியில் பெண் போலீ சாரும் ஈடுபட்டு உள்ளனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்க ளது உடமைகளை வைப்பதற்கு இடவசதி இல்லாமல் இருந்தது. மேலும் உணவு அருந்துவதற்கும் அவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .

இந்த நிலையில் போலீ சாருக்கு கலெக்டர் அலுவல கத்தின் முன் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதி யில் காலியாக இருந்த அறை ஒன்று போலீசாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடு படும் போலீசார் அந்த அறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இன்று காலை முதல் அந்த அறை யில் போலீசார் தங்களது உடமைகளையும், பொருட்களையும் வைத்தி ருந்தனர். மழை மற்றும் வெயில் நேரங்களில் இந்த அறை எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com