என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் வகுப்பறைகள்"

    • தமிழக முதலமைச்சர் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • விஜய் வசந்த் விழாவை குத்து விளக்கேற்றி வைத்து அடிக்கல் நாட்டினார்.

    தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இதை தொடர்ந்து பால்குளம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் விழாவை குத்து விளக்கேற்றி வைத்து அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் மதியழகன், அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவி ஜானகி இளங்கோ, மாநில காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சாம் சுரேஷ், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் செயலாளர் கிங்ஸ்லி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்யராஜன், கல்லூரி முதல்வர் சரோஜா உட்பட பல அரசு அதிகாரிகள், ஆசிரியை, ஆசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கூடுதல் வகுப்பறைகளை திறந்துவைத்தாா்.
    • சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் பங்கேற்று வகுப்பறைகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் : 

    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வகுப்பறைகளை திறந்துவைத்தாா்.

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் சுமாா் 11 ஆயிரம் சதுர அடியில் 3 தளங்களை கொண்ட 10 வகுப்பறைகளும், எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.3 கோடியே 74 லட்சம் மதிப்பில் சுமாா் 24 ஆயிரம் சதுர அடியில் 5 தளங்களை கொண்ட 18 வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட்டன.முன்னதாக திருப்பூா் சிக்கண்ணா மற்றும் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக்கல்லூரிகளில் நடைபெற்ற திறப்பு விழாவில் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் பங்கேற்று வகுப்பறைகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    • 58 அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி தொடங்கியது.
    • ராஜ சேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் திருப்பாச்சேத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-முதல்-அமைச்சரால் 2022-23-ம் நிதியாண்டில் ஊரகப் பகுதிகளிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளுக்கு தேவையான புதிய வகுப்பறை கட்டிட பணிகளை மேற்கொள்ள ஆணை வெளியிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் 58 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் 120 வகுப்ப றைகள் எண்ணிக்கையில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ரூ.17.25 கோடி மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த பணிகள் அனைத்தும் வருகிற கல்வி யாண்டு தொடங்குவதற்கு முன்னதாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தர விட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயங்கண்ணி, ராஜ சேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ×