search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை கடைவீதிகளில் பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்
    X

    தஞ்சை அண்ணாசிலை சாலையில் அலைமோதும் மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

    தஞ்சை கடைவீதிகளில் பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்

    • ஜவுளி, பட்டாசு, இனிப்பு வாங்குவதற்காக பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.
    • காந்திஜி சாலையில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளன. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஜவுளி, பட்டாசு, இனிப்பு முதல் அனைத்து வகையான பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.

    தஞ்சையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க தொடங்கி விட்டனர். மேலும் தற்போது தங்கள் வீட்டுக்கு, உறவினர்களுக்கு கொடுக்க தேவைப்படும் இனிப்பு வகைகளை வாங்குவதற்கு குவிய தொடங்கியுள்ளனர்.

    இதனால் தஞ்சையில் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் காணப்படுகிறது.

    இன்று பிற்பகல் வரை மழை இல்லாத காரணத்தினால் வியாபாரம் பாதிப்படையவில்லை.

    தஞ்சை காந்திஜி சாலை, கோர்ட் ரோடு, கீழவாசல், பழைய பஸ் நிலையம் ,புதிய பஸ் நிலையம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் தஞ்சை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தஞ்சைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் நகரில் சாலைகளில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்தது.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டுவதை தடுக்க காந்திஜி சாலையில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் போலீசார் பணியாற்றி வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க, போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    இனி வரக்கூடிய நாட்களில் இதை விட கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×