search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shop Street"

    • குழந்தையின் அழுகையை நிறுத்த பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வாங்கி கொடுத்தனர்.
    • அவரது பெற்றோர் இருந்ததை குழந்தை அடையாளம் காட்டியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் பஸ் நிலையத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அங்கிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்று குழந்தையை மீட்ட னர். குழந்தையின் அழுகை யை நிறுத்த பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வாங்கி கொடுத்தனர்.

    தொடர்ந்து குழந்தை யிடம் விசாரித்தபோது, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள டீ.நெடுஞ்சேரி கிராமத்தை சேர்ந்த குழந்தை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் காட்டுமன்னார்கோவில் கடை வீதியில் வலம் வந்தார். அங்கிருந்த பிள்ளையார் கோவில் தெருவில் ஒரு பாத்திர கடையில் அவரது பெற்றோர் இருந்ததை குழந்தை அடையாளம் காட்டியது. அங்கிருந்த பெற்றோரை அழைத்து அறிவுரை கூறிய சப்- இன்ஸ்பெக்டர், அவர்களி டம் குழந்தையை ஒப்படைத்தார்.

    • ஜவுளி, பட்டாசு, இனிப்பு வாங்குவதற்காக பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.
    • காந்திஜி சாலையில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளன. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஜவுளி, பட்டாசு, இனிப்பு முதல் அனைத்து வகையான பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.

    தஞ்சையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க தொடங்கி விட்டனர். மேலும் தற்போது தங்கள் வீட்டுக்கு, உறவினர்களுக்கு கொடுக்க தேவைப்படும் இனிப்பு வகைகளை வாங்குவதற்கு குவிய தொடங்கியுள்ளனர்.

    இதனால் தஞ்சையில் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் காணப்படுகிறது.

    இன்று பிற்பகல் வரை மழை இல்லாத காரணத்தினால் வியாபாரம் பாதிப்படையவில்லை.

    தஞ்சை காந்திஜி சாலை, கோர்ட் ரோடு, கீழவாசல், பழைய பஸ் நிலையம் ,புதிய பஸ் நிலையம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் தஞ்சை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தஞ்சைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் நகரில் சாலைகளில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்தது.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டுவதை தடுக்க காந்திஜி சாலையில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் போலீசார் பணியாற்றி வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க, போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    இனி வரக்கூடிய நாட்களில் இதை விட கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • காற்றுடன் கோடை மழை ஒரு மணி நேரம் பெய்தது.
    • மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

    பேராவூரணி:

    பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை பெய்தது. கடந்த வாரம் அனல் காற்று வீசி வந்தது. இதனால் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் நடமாட்டம் இன்றி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரம் மழை பெய்தது.

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர் பகுதி மற்றும் கொன்றைக்காடு, ஒட்டங்காடு, படப்ப னார்வயல், மணக்காடு, பூக்கொல்லை, ரெட்டவயல், பெருமகளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. பேராவூரணியில் பதிவான மழை விபரம்:பேராவூரணி 10 மி.மீ, ஈச்சன்விடுதி 26 மி.மீ, ஆயிங்குடி 34.2 மி.மீ, நாகுடி 26 மி.மீ.

    ×