search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sign"

    • குழந்தையின் அழுகையை நிறுத்த பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வாங்கி கொடுத்தனர்.
    • அவரது பெற்றோர் இருந்ததை குழந்தை அடையாளம் காட்டியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் பஸ் நிலையத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அங்கிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்று குழந்தையை மீட்ட னர். குழந்தையின் அழுகை யை நிறுத்த பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வாங்கி கொடுத்தனர்.

    தொடர்ந்து குழந்தை யிடம் விசாரித்தபோது, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள டீ.நெடுஞ்சேரி கிராமத்தை சேர்ந்த குழந்தை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் காட்டுமன்னார்கோவில் கடை வீதியில் வலம் வந்தார். அங்கிருந்த பிள்ளையார் கோவில் தெருவில் ஒரு பாத்திர கடையில் அவரது பெற்றோர் இருந்ததை குழந்தை அடையாளம் காட்டியது. அங்கிருந்த பெற்றோரை அழைத்து அறிவுரை கூறிய சப்- இன்ஸ்பெக்டர், அவர்களி டம் குழந்தையை ஒப்படைத்தார்.

    ×