search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "help desk"

    • ஜவுளி, பட்டாசு, இனிப்பு வாங்குவதற்காக பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.
    • காந்திஜி சாலையில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளன. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஜவுளி, பட்டாசு, இனிப்பு முதல் அனைத்து வகையான பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.

    தஞ்சையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க தொடங்கி விட்டனர். மேலும் தற்போது தங்கள் வீட்டுக்கு, உறவினர்களுக்கு கொடுக்க தேவைப்படும் இனிப்பு வகைகளை வாங்குவதற்கு குவிய தொடங்கியுள்ளனர்.

    இதனால் தஞ்சையில் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் காணப்படுகிறது.

    இன்று பிற்பகல் வரை மழை இல்லாத காரணத்தினால் வியாபாரம் பாதிப்படையவில்லை.

    தஞ்சை காந்திஜி சாலை, கோர்ட் ரோடு, கீழவாசல், பழைய பஸ் நிலையம் ,புதிய பஸ் நிலையம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் தஞ்சை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தஞ்சைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் நகரில் சாலைகளில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்தது.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டுவதை தடுக்க காந்திஜி சாலையில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் போலீசார் பணியாற்றி வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க, போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    இனி வரக்கூடிய நாட்களில் இதை விட கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மகளிர் உரிமைத்தொகை நிலவரம் குறித்து அறிய ஏற்பாடு
    • நிராகரிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்

    கோவை,

    மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற முகாம்கள் மூலம் 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 விண்ணப் பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 2 லட்சத்து 81 ஆயிரத்து 942 விண்ணப்பங்கள் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ள்ளன. தற்போது, வரை வருவாய்த் துறை, மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட துறை அலுவ லர்கள், நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் கலந்தாய்வுக்கு அனுப்பப் பட்ட விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் திட்ட தொடக்க விழா நடக்கிறது. கோவையில் ஈச்சனாரியில் கற்பகம் கலை, அறிவியல் கல்லூரியில் இன்று பிற்பகலில் விழா நடக்கிறது. விழாவில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு திட்டத் தின் அட்டைகளை வழங்குகி றார். இவ்விழாவில் 2500 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத் தில் தேர்வு செய்யப்பட்ட குடும்பத் தலைவிகள் பலருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் முதல் கட்டமாக ரூ.1 செலுத்தி புதன் கிழமை சோதனை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, நேற்று காலை முதல் பயனா ளிகளின் கணக்கில் ரூ.1000 செலுத்தும் பணி தொடங்கி யுள்ளது. இதனால், இல்லத்த ரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த வர்கள் தங்களது விண்ணப் பத்தின் நிலையை அறிந்து கொள்ள அரசு அலுவல கங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண், விண்ணப்பத்துக்கு தாக்கல் செய்த கைப்பேசி எண் ஆகியவற்றுடன் நேரில் சென்றோ அல்லது பிரத்ய ேக எண்ணை தொடர்பு கொண்டோ தகவல்களை அறிந்து கொள்ளலாம். மேலும், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை இ-சேவை மையம் மூலம் நிராகரிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியருக்கு மேல் முறையீடு செய்து கொள்ள லாம் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் 90479 44155, பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகம் 89039 29890, கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் 90038 59054, ஆனைமலை 88079 77531, அன்னூர் 88387 18323, கோவை வடக்கு 90871 44755, கோவை தெற்கு 83001 22671, கிணத்துக்கடவு 89034 97949, மதுக்கரை 90422 67589, மேட்டுப்பா ளையம் 90435 18625, பேரூர் 88709 86906, பொள்ளாச்சி 88703 96625, சூலூர் 90034 96085, வால்பாறை 94862 11953.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2023-24-ம் கல்வியாண்டு இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு, மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
    • கல்லூரி வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சேவை மையத்தில் தங்களது சேர்க்கை விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

    நாமக்கல்:

    தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2023-24-ம் கல்வியாண்டு இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு, மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க, நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம், இன்று முதல் வருகிற 19-ந் தேதி வரை செயல்பட உள்ளது.

    பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவியர் பாஸ்போட் சைஸ் போட்டோ, 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, இ-மெயில் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றுடன் கல்லூரி வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சேவை மையத்தில் தங்களது சேர்க்கை விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

    பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ48, பதிவுக் கட்டணமாக ரூ.2 என மொத்தம் ரூ.50 (ஒவ்வொரு 5 கல்லூரிகளுக்கும்) செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு பதிவு கட்டணமாக ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும்.

    விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் இண்டர்நெட் வழியாக செலுத்தலாம். இண்டர்நெட் மூலம் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள், கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் பேங்க் டிராப்ட் மற்றும் நேரடியாக பணமாகவும் செலுத்தலாம்.

    நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை கலை பிரிவில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல் மற்றும் வர லாறு பாடப்பிரிவு களுக்கும், அறிவியல் பிரிவில் கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளுக்கும் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜா தெரிவித்துள்ளார்.

    • ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், சீருடையும் வழங்கப்பட்டது.
    • உதவி ஆளுநர் ஜெயக்குமார் புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்தார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பூக்கொல்லை ரோட்டில் அமைந்துள்ள மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை வளாகத்தில் மன்னை மிட்டவுன் ரோட்டரி 13-வது ஆண்டு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

    அதில் புதிய தலைவராக டி.ரெங்கைய்யன், செயலராக வி.கோபால–கிருஷ்ணன், பொருளாளராக டி.அன்பழகன் பதவி ஏற்றுக்கொண்டனர். சங்க இயக்குனர்களாக விக்டர் வீ.பாலகிருஷ்ணன், ஆர்.பாலமுருகன், எம்.நடராஜன், கே.திருநாவுக்கரசு, ஏ.கே.பாலகுணசேகரன்,ஜீ.சிவ க்கொழுந்து, ஜீ.மனோ கரன், என்.சாந்த–குமார், கே.மோகனசுந்தரம், பி.ரமேஷ், ஆர்.மாரியப்பன், சி.குருசாமி, டாக்டர்.என்.விஜயகுமார் ஆகியோர் பதவியேற்றனர்.

    இதில் முன்மைவிருந்தி னராக மாவட்ட ஆளுநர் (23-24) மேஜர் டோனார் ஜீ.செங்குட்டுவன் சிறப்புரையாற்றினார். உதவி ஆளுநர் டி.ஜெயக்குமார் புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்தார். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், சீருடையும் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். டி.ரெங்கையன் தலைமை தாங்கி பேசினர். சீ.குருசாமி வரவேற்றார். முடிவில் வீ.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். புதிய உறுப்பினர்களாக மதிவாணன், கனகராஜ், சுந்தர்ராசு, அருள்செல்வன், முருகானந்தம் ஆகியோர் மிட்டவுன் ரோட்டரியில் உறுப்பினராக இணை ந்தனர்.

    • ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 3,552 இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வுக்கான விண்ணப்பங்களை தகுதியுள்ள தேர்வர்கள் இணையதளம் மூலம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப உதவிடும் வகையில் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×