காவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் திறப்பு

காவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் திறக்கப்பட்டது. 15-ந் தேதி வரை செயல்படும்
காவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் திறப்பு
Published on

பெரம்பலூர்:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்கவேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உதவும் வகையில் பெரம்பலுர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையம் வரும் 15ம்தேதி வரை செயல்படும். உதவி மைய எண் 98406 93775.

எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்க ஏற்படும் சந்தேகங்களை நேரிலோ அல்லது உதவி மைய எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என எஸ்பி மணி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com