என் மலர்
நீங்கள் தேடியது "பஞ்சம்"
- உணவு பெற வரும் மக்கள் கூட்டம் மீது துப்பாக்கிச்சூடு நடந்து நூற்றுக்கணக்கானோரை கடந்த வாரங்களில் கொன்று குவித்தது.
- நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மண்ணை சாப்பிடுகிறோம். கொஞ்சமாவது கருணை காட்டுங்கள்.
காசாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் சிறுவன் பேசும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 55,500 க்கும் அதிகாமாக பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாறினார். இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் முதல் காசாவுக்குள் எந்த விதமான உணவு மற்றும் உதவிப் பொருட்களை செல்ல விடாமல் இஸ்ரேல் தடுத்தது. இதனால் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் கடும் பட்டினியில் வாடுகின்றனர்.

கடந்த சில வாரங்களாக உதவி பொருட்களை அனுமதிக்கும் இஸ்ரேல், அந்த செயல்முறையை தங்கள் கட்டிபாட்டில் எடுத்துக்கொண்டு, உணவு பெற வரும் மக்கள் கூட்டம் மீது துப்பாக்கிச்சூடு நடந்து நூற்றுக்கணக்கானோரை கடந்த வாரங்களில் கொன்று குவித்தது.
அவ்வாறு உயிரை பணயம் வைத்து உதவிகளை பெற்றாலும், அது மிகவும் சொற்ப அளவே கிடைப்பதால் மருந்து மற்றும் உணவின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வைரலாகி வரும் வீடியோவில் பேசும் சிறுவன், "காசாவில் நாங்கள் சாப்பிட உணவு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் உணவு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய டிரக்குகள் காசாவுக்குள் வருகின்றன. ஆனால் அதில் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.
நாங்கள் உணவு இல்லாமல் மண்ணை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உணவு இல்லை. எங்குமே உணவு இல்லை. எங்களுக்கு உணவு சமைக்க மாவு தேவை. எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். தயவுசெய்து கருணை காட்டுங்கள். எங்களிடம் உணவு இல்லை. நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மண்ணை சாப்பிடுகிறோம். உணவு இல்லாமல் மண்ணை சாப்பிடுகிறோம்.. இரக்கம் காட்டுங்கள் - கலங்க வைக்கும் காசா சிறுவனின் வீடியோ
காசாவில் தற்போது ஒரு ரொட்டித் துண்டின் விலை 5.30 டாலர் (570 ரூபாய்). அந்த ஒரு ரொட்டித் துண்டும் மிகவும் சிறியது. அது எங்களுக்குப் போதவில்லை" என்று கூறுவது பதிவாகி உள்ளது.
- நாசர் மருத்துவ வளாகத்தின் மீது குண்டுவீசித் தாக்கியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
- வரவிருக்கும் வாரங்களில், அதிகமான குழந்தைகள் இறப்பதைக் காண்போம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.
போரினால் பாதிக்கப்பட்ட காசாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன கூட்டமைப்பான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு அமைப்பு (IPC) அதன் சமீபத்திய அறிக்கையில், காசாவில் உணவுப் பாதுகாப்பு நிலைமை அக்டோபர் 2024 இல் அதன் கடைசி மதிப்பீட்டிலிருந்து கணிசமாக மோசமடைந்துள்ளதாகவும், அங்கு வாழும் பாலஸ்தீனியர்கள் பஞ்சத்தின் கடுமையான அபாயத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
மக்கள் உயிர்வாழ்வதற்கான அத்தியாவசியப் பொருட்கள் ஏற்கனவே பெரும்பாலான இடங்களில் தீர்ந்து போயுள்ளன. சில இடங்களில், வரும் வாரங்களில் அது முடிந்துவிடும். அனைத்து மக்களும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். காசாவில் 50 லட்சம் மக்கள், அதாவது ஐந்தில் ஒருவர் கடுமையான பசியை எதிர்கொள்கிறார்கள் என்று IPC அறிக்கை கண்டறிந்துள்ளது.
ஐநாவின் உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ரிக் பெப்பர்கார்ன், மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தப் பஞ்சம், உணவு கிடைக்காத ஒரு முழு தலைமுறை குழந்தைகளையும் என்றென்றும் பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்.

காசாவில் உள்ள உதவிப் பணியாளர்கள், சமீபத்திய நாட்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், கிடங்குகள் காலியாக இருப்பதாகவும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் மனிதாபிமானக் குழுக்கள் இரண்டு நோயாளிகளுக்கு இடையே ஒரு ரேஷனைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு காசாவில் உள்ள யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கிரிக்ஸ் பேசுகையில், 'போர் நிறுத்த காலத்தில் நாங்கள் கொண்டு வந்த மருத்துவ உபகரணங்களின் அளவு மிகக் குறைவு. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 11,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நாங்கள் சிகிச்சை அளித்துள்ளோம். வரவிருக்கும் வாரங்களில், அதிகமான குழந்தைகள் இறப்பதைக் காண்போம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்" என்று கூறினார்.

காசா பஞ்சத்தின் உடனடி ஆபத்தை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பும் எச்சரித்துள்ளது.
மீதமுள்ள 59 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு அழுத்தம் கொடுப்பதே இந்த முற்றுகையின் நோக்கம் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவ வளாகத்தின் மீது குண்டுவீசித் தாக்கியது. இதில் பத்திரிகையாளர் ஹசன் இஸ்லா உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் காயமடைந்தனர்.
- காசா பகுதி தாக்குதலில் சுமார் 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்
- போர் தொடங்கி 100 நாட்கள் கடந்தும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று தொடங்கிய ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் பாலஸ்தீன காசா பகுதியில் தொடுத்துள்ள போர், 100 நாட்களை கடந்தும் தீவிரமடந்து வருகிறது.
பாலஸ்தீன காசா பகுதியில் தற்போது வரை 24,285 பேர் உயிரிழந்ததாகவும், 61,154 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார துறை அறிவித்துள்ளது.
தற்போதைய பாலஸ்தீன நிலவரம் குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியிருப்பதாவது:
காசா பகுதியில் உள்ள ஒவ்வொரு மனிதரும் பசியுடன் உள்ளனர். அங்குள்ள மக்கள் தொகையில் 25 சதவீதத்திற்கும் மேல் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் திண்டாடி வருகின்றனர். உணவுக்கும், நீருக்கும் அங்கே கடும் பஞ்சம் நிலவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவோ, மருத்துவ வசதியோ கிடைக்கவில்லை. 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 3,35,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் தவிக்கின்றனர். ஒரு தலைமுறையை சேர்ந்தவர்கள் வளர்ச்சி குன்றியவர்களாக உருவாக போகின்றனர். காசாவில் எந்த இடமும் பாதுகப்பானதாக இல்லை எனும் நிலை அங்கு தோன்றி விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் பலவந்தமாக பிடித்து சென்ற பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுள்ள அமெரிக்கா, ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் கத்தார் நாட்டுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.
- மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே உள்நாட்டு போர் வெடித்தது. இந்த போர் தற்போது வரை குறைய வில்லை . இதனால் மக்கள் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர்.
சூடானில் தற்போது சுமார் 49 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 18 மில்லியன் மக்கள் உணவு தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்,

உள்நாட்டு போரில் காயம் அடைந்த 160- க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 60 - க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சூடானில் ஏற்பட்ட சண்டையால் விவசாய பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது இதனால் மக்கள் உணவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மக்கள் இடம் பெயர்வால் அங்கு மலேரியா மற்றும் பிற நோய்கள் பரவுகின்றன.

மேலும் சூடானுக்கு வரும் சர்வதேச உதவிகள் பட்டினியால் வாடும் பகுதிகளில் உள்ள மக்களை சென்றடைவதை ராணுவம் தடுத்து வருகிறது. சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.

உணவு பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதால், விவசாயிகள் நடவுக்காக வாங்கிய விதை தானியங்களை சாப்பிட்டுள்ளனர். மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.
- பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட மோசமான இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது
- தீவிரமான பசி- பட்டினி பிரச்சனைகள் கொண்ட நாடாக இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான உலக பட்டினி குறியீடு அறிக்கையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட மோசமான இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்டுவைட் மற்றும் ஜெர்மனியின் வேர்ல்ட் ஹங்கர் லைஃப் ஆகிய அமைப்புகள் இணைந்து வருடந்தோறும் பட்டினிக் குறியீடு அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் 127 நாடுகளில் நடத்திய ஆய்வின்படி 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 19 வது உலக பட்டினி குறியீட்டு அறிக்கையான இதில் இந்தியா 105 ஆவது இடத்தில் உள்ளது. அதன்படி தீவிரமான பசி- பட்டினி பிரச்சனைகள் கொண்ட நாடாக இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் மூலம் இந்தியாவில் குழந்தைகளிடையே, ஊட்டச்சத்துக் குறைபாடு பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. குழந்தை வளர்ச்சி குன்றிய விகிதம் 35.5 சதவீதமாகவும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாகவும் உள்ளது.
மேலும் ஊட்டச்சத்து குறைபாடு 13.7 சதவீதமாக உள்ளது. இதற்கு முன்னர் வெளிவந்த பட்டினி குறீயிட்டு அறிக்கைகளை மத்திய அரசு நிராகித்தது குறிப்பிடத்தக்கது.
- ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர்
- தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட உடைகள் மற்றும் உணவைப் பெற 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வளர்கின்றனர்.
இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர். சனிக்கிழமையன்று, தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் 22 பேர் இறந்தனர், தலைநகர் அபுஜாவில் 10 பேர் இறந்தனர், அபுஜாவில் தேவாலயத்தில் வைத்து வழங்கப்பட்ட உடைகள் மற்றும் உணவைப் பெற 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.


இந்த சம்பங்கள் குறித்த முழுமையான விசாரணைக்கு நைஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜனாதிபதி போலா டினுபு, வரவிருக்கும் அனைத்து கொண்டாட்டங்களையும் ரத்து செய்துள்ளார்.
இந்த துயரங்களுக்கு நாட்டில் நிலவும் அதிகப்படியான வறுமை, அதிக உணவு விலைகள் மற்றும் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளே காரணம் என்று தொழிலாளர் கட்சித் தலைவர் பீட்டர் ஓபி குற்றம் சாட்டியுள்ளார்.






