என் மலர்
நீங்கள் தேடியது "poverty"
- 2021 ஆம் ஆண்டு தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தபட்டது.
- மிகவும் ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் காணும் செயல்முறை தொடங்கியது.
இன்று நடைபெற்ற கேரள சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில், "கேரளா தீவிரமான வறுமையிலிருந்து விடுபட்ட மாநிலமாக மாறியுள்ளது" என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
சட்டமன்றத்தில் பேசிய பினராயி விஜயன், "2021 ஆம் ஆண்டு தீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மிகவும் ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் காணும் செயல்முறை தொடங்கியது. அடையாளம் காணப்பட்ட குடும்பங்கள் வார்டு குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டன. இது சூப்பர் செக்கிற்கு உட்படுத்தப்பட்டு வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியல் கிராம சபைகளுக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்து, 64,006 குடும்பங்களைச் சேர்ந்த 1,03,099 நபர்கள் மிகவும் ஏழ்மையானவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
உணவு, சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் வருமானம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.
முதல் கட்டமாக ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை போன்ற அடிப்படை ஆவணங்கள் கூட இல்லாமல் தவித்த 21,263 பேருக்கு அத்தியாவசிய ஆவணங்கள் வழங்கப்பட்டன.
20,648 மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு குடும்பஸ்ரீ திட்டத்தின் மூலம் வழக்கமான உணவு விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள், மருந்துகள், தடுப்பூசிகள், நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உறுதி செய்யப்பட்டன.
4,677 குடும்பங்களுக்கு வீடுகளும் 2,713 குடும்பங்களுக்கு வீடுகள் மற்றும் நிலங்களும் வழங்கப்பட்டன. 35,041 குடும்பங்கள் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (MGNREGS) கீழ் சேர்க்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசாங்கம் ரூ.1,000 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் விரைவில் வரப்போகிறது மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
- ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு விஷயத்தின் விபரம் முழுவதும் அறியும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத சட்டசபையாக மாற்றும் தேசிய இவிதான் செயலியை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:-
பிரதமர் மோடியின் 3-வது முறையான ஆட்சி 12-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஒரு பிரதமர் தொடர்ந்து 3 முறை இருந்ததில்லை. நரேந்திரமோடி 3-வது முறையாக பிரதமர் ஆகியுள்ளார். நாட்டின் வளர்ச்சி, வேகம் 11 ஆண்டில் எவ்வித தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 27 கோடி மக்களை 11 ஆண்டில் வறுமைக்கோட்டிற்கு மேல் உயர்த்தியுள்ளோம் என உலக வங்கி கூறியுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வந்தபோது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், படிப்பு விஷயம் தெரியாதவர்கள், அவர்கள் செல்போன் பயன்படுத்த தெரியாது, இதை எப்படி பயன்படுத்துவார்கள்? என கேள்வி கேட்டார். ஆனால் இன்று இந்தியா முழுவதும் பல கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.
சத்தியமங்கலம் காட்டில் வெள்ளரிக்காய் வாங்கியபோது, பணத்தை வங்கியில் செலுத்தும்படி கூறியது. முன்பு ஆட்சி செய்தவர்கள் திட்டங்களை தீட்டவோ, நிறைவேற்றவோ தைரியம் இல்லாமல் இருந்தனர். பிரதமராக மோடி வந்த பின் தைரியமான முடிவுகள் எடுக்கப்பட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வரப்பட்டது.
உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் 2-வது இடத்தை இந்தியா பெற்று சாதனை பெற்றுள்ளது. இந்திய பொருளாதாரம் உலகளவில் 4-ம் இடத்தை பிடித்துள்ளது. 2027-ல் 3-ம் இடம், 2047-ல் அப்துல்கலாம் கனவு கண்ட வல்லரசு நாடாக இந்தியா மாறியிருக்கும்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் பிரதமர் மோடி மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளார். இங்கிருந்தே தாக்குதல் நடத்தும் அளவுக்கு ராணுவ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. 2014-க்கு முன்பு ராணுவ தளவாடங்கள் முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டது.
ஆனால் பிரதமராக மோடி வந்த பின்பு தொழில்நுட்பம் வளர்ந்து, ரூ.50 ஆயிரம் கோடிக்கு தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளோம்.ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போகிறது.
தற்போது ஒரு நாடு, ஒரு செயலி என இப்போது இவிதான் செயலி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்மூலம் சட்டசபையில் கேள்விகளை உடனடியாக செயலகத்துக்கு அனுப்ப முடியும். சட்டசபை அலுவல் பட்டியலை பார்க்கலாம். சட்டசபை, பாராளுமன்றத்தில் நடப்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது இந்த இவிதான் செயலி மூலம் கொண்டுவரப்பட உள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு விஷயத்தின் விபரம் முழுவதும் அறியும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
நம் இந்திய நாடு 2027-ல் மிகச்சிறந்த வல்லரசு நாடாக, வளர்ச்சியடைந்த பாரதமாக, உலகின் விஸ்வகுருவாக திகழ வேண்டும் என பிரதமர் மோடி திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.
உலகின் முதல் ஜனாப் பாலத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். புல்லட் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. அனைத்து துறையிலும் நாடு முன்னேறி வருகிறது. ஜனநாயகத்தின் அடிப்படையான சட்டத்தை இயற்றும் பணியில் இந்த செயலி உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 27.1% ஆக இருந்த தீவிர வறுமை, 2022-23ல் 5.3% ஆகக் குறைந்துள்ளது.
- நகர்ப்புறங்களில் 10.7%ல் இருந்து 1.1% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் தீவிர வறுமை வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. 2011-12ல் 27.1% ஆக இருந்த தீவிர வறுமை, 2022-23ல் 5.3% ஆகக் குறைந்துள்ளது.
சுமார் 11 ஆண்டுகளில், 26.9 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 2011-12ல் 34.4 கோடி பேர் தீவிர வறுமையில் இருந்த நிலையில், 2022-23ல் இந்த எண்ணிக்கை 7.5 கோடியாக சரிந்துள்ளது.
கிராமப்புறங்களில் தீவிர வறுமை 18.4%ல் இருந்து 2.8% ஆகவும், நகர்ப்புறங்களில் 10.7%ல் இருந்து 1.1% ஆகவும் குறைந்துள்ளது.
பல்திறன் வறுமை குறியீடு (MPI) 2005-06ல் 53.8%ல் இருந்து 2022-23ல் 15.5% ஆகக் குறைந்துள்ளது.
- மீனவ குடும்பத்தில் பிறந்த மாணவி வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
- குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பு தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி சோபனா சமீபத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வில் 600க்கு 562 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த சோபனா வீட்டின் நிலையை உணர்ந்து நன்று படித்து நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
மீனவ குடும்பத்தில் பிறந்த மாணவி வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
ஆனால், குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பு தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாணவிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
சூழலால் படிப்பை தொடரமுடியாமல், தவித்த ராமநாதபுரம் மாணவி சோபனாவிற்கு உயர்கல்விக்கான உதவிகளைச் கமல்ஹாசன் செய்துள்ளார்.
மேலும், மாணவியின் கனவை எட்ட, குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராவதற்கான ஏற்பாடுகளையும் கமல்ஹாசன் செய்து கொடுத்துள்ளார்.
- வறுமையை வெல்ல படிப்புதான் பேராயுதம் என பொன்.மாணிக்கவேல் பேசினார்.
- நாடு நன்றாக இருந்தால்தான் வீடு நன்றாக இருக்க முடியும்.
மதுரை
மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. இதில் முன்னாள் போலீஸ் அதிகாரி பொன். மாணிக்க வேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், நாடு நன்றாக இருந்தால்தான் வீடு நன்றாக இருக்க முடியும். கல்லூரி பருவம் என்பது வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து வைக்கும் முக்கியமான முதல் படி.
வறுமையை வெல்லும் வகையில் உங்களின் கற்றல் திறன் அமைய வேண்டும். அதற்கு படிப்புதான் பேராயுதம். கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலையைப் பெற்றுக் கொண்டு அதில் திறமை களை வெளிப்படுத்தி வாழ்க்கையில் முன்னே றுங்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் நாக ரத்தினம், செயலாளர் ஜெக தீசன், முதல்வர் ராஜேஷ் குமார், துணை முதல்வர் சித்ராதேவி மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 33 மாநிலங்களில் எய்ட்ஸ் குறித்து மக்களிடம் சைக்கிளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார்.
- கின்னஸ் சாதனையாளரான ரவி, சமீபகாலமாக வேலை எதுவும் இல்லாமல் வறுமையில் வாடி வந்தார்.
பெங்களூரு :
பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்து வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில் திருட்டுப்போய் இருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வி.வி.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர்.
மேலும் கோவில், அதை சுற்றி இருக்கும் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கேமராவில் சிக்கிய காட்சிகள் மூலமாக ஒரு நபரை வி.வி.புரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு மற்றும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது.
அந்த நபர் பெயர் ரவி ஆகும். இவர், எய்ட்ஸ் (எச்.ஐ.வி) நோய்க்கு எதிராக மக்களிடையே தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவர் ஆவார். அதாவது கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு வரை கர்நாடகம் உள்பட 33 மாநிலங்களில் எய்ட்ஸ் குறித்து மக்களிடம் சைக்கிளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார். 6 ஆண்டுகளில் 33 மாநிலங்களுக்கு சைக்கிளில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்ததால், ரவியின் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.
எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக ரவிக்கு மகாராஷ்டிரா மாநில அரசு மோட்டார் சைக்கிளை பரிசாகவும் வழங்கி கவுரவப்படுத்தி இருந்தது. கின்னஸ் சாதனையாளரான ரவி, சமீபகாலமாக வேலை எதுவும் இல்லாமல் வறுமையில் வாடி வந்தார். அந்த வறுமை தான் அவரை திருடனாகவும் மாற்றி இருக்கிறது. இதனால் அவர், வி.வி.புரத்தில் உள்ள வாசவி அம்மன் கோவிலுக்கு சென்று வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்களை திருடியது தெரியவந்தது. அந்த சாமி சிலையை போலீசார் மீட்டுள்ளனர். கைதான ரவி மீது வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 23 கோடியாக குறைந்திருக்கிறது.
- 25 நாடுகள் 15 வருட காலக்கெடுவுக்குள் வறுமைக் குறியீட்டு மதிப்புகளை பாதியாக குறைத்துள்ளன.
ஐ.நா. மேம்பாட்டு திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் இணைந்து புதிய வறுமை குறியீட்டு எண் பட்டியலை வெளியிட்டன. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
இந்தியாவில், 2005-2006 நிதிஆண்டில் இருந்து 2020-2021 நிதிஆண்டுக்குள் 41 கோடியே 50 லட்சம் பேர், வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர். 2005/2006-ல் 55.1 சதவீதமாக இருந்த வறுமை 2019/2021-ல் 16.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன்மூலம் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் வறுமையை குறைத்துள்ளது.
2005/2006ல், இந்தியாவில் சுமார் 64.5 கோடி பேர் வறுமையில் இருந்தனர். இந்த எண்ணிக்கை 2015/2016இல் சுமார் 37 கோடியாகவும், 2019/2021இல் 23 கோடியாகவும் கணிசமாக குறைந்திருக்கிறது.
இந்தியா உட்பட 25 நாடுகள், இந்த 15 வருட காலக்கெடுவுக்குள் உலகளாவிய வறுமைக் குறியீட்டு மதிப்புகளை பாதியாக குறைத்துள்ளன. இது விரைவான முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை விளக்குகிறது. கம்போடியா, சீனா, காங்கோ, ஹோண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, மொராக்கோ, செர்பியா, வியட்நாம் ஆகிய நாடுகள் இந்த சாதனையை எட்டி உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அழுகிய நிலையில் வாசுகி, உமாதேவி, கோதண்டபாணி ஆகியோர் பிணமாக கிடந்தனர்.
- 3 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை:
மதுரை அண்ணாநகர் அருகே உள்ள கோமதிபுரம் மருதுபாண்டியர் நகர், ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மதுரையில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு உமாதேவி (45) என்ற மகளும், கோதண்டபாணி (42) என்ற மகனும் இருந்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாண்டியன் குடும்பத்தை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோதண்டபாணியும், உமாதேவியும் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தனர். அவர்களுடன் தாய் வாசுகியும் வசித்து வந்தார்.
கடந்த 3 நாட்களாக அவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் கவனிக்கவில்லை. இதற்கிடையே இன்று காலை வாசுகி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் இதுகுறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு அழுகிய நிலையில் வாசுகி, உமாதேவி, கோதண்டபாணி ஆகியோர் பிணமாக கிடந்தனர். 3 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளார்களா? என போலீசார் சோதனை செய்தனர்.
இறந்த 3 பேரும் வறுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் ஒரே குடும்பத்தில் தாய், மகன், மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- கணவனை இழந்த மகள்-பேரனை தவிக்க விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை பாப்பா பட்டியை சேர்ந்தவர் நீலாமணி (வயது 50). இவருடைய கணவர் ராஜேந்திரன் கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக பிரிந்து சென்று விட்டார். இவரது மகள் ராஜேஸ்வரி (31), பேரன் சதாசிவத்துடன் வசித்து வந்தார். ராஜேஸ்வரியின் கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தாயுடன் வசித்து வந்த அவர், அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நீலாமணி கடந்த சில ஆண்டுகளாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லை. வருமானம் இல்லாமல் மருந்து மாத்திரைகளுக்கு செலவழித்து கொண்டே இருந்ததால் மனவிரக்தியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை இழந்த மகள்-பேரனை தவிக்க விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 37 வயதான பழங்குடியினப் பெண், வறுமையின் காரணமாக பிறந்த பெண் குழந்தையை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஏற்கனவே 4 குழந்தைகளுக்கு தாயான மோர்மதியின் கணவர் 5 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் கடுமையான வறுமையில் குடும்பம் இருந்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 37 வயதான பழங்குடியினப் பெண், வறுமையின் காரணமாக பிறந்த பெண் குழந்தையை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவின் கந்தசேராவில் உள்ள தாராபன் காலனியைச் சேர்ந்த மோர்மதி திரிபுரா (39) என்ற பழங்குடியின பெண்ணுக்கு கடந்த மே 22 ஆம் தேதி வீட்டில் வைத்து நடந்த பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
ஏற்கனவே 4 குழந்தைகளுக்கு தாயான மோர்மதியின் கணவர் 5 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் கடுமையான வறுமையில் குடும்பம் இருந்துள்ளது. ரேஷன் கார்டை அடைமானம் வைத்து குழந்தைகளைப் பராமரித்து வந்த மோர்மதி, தற்போது பிறந்த குழந்தையை ஹெஜமாராவில் உள்ள ஒரு தம்பதிக்கு ரூ. 5,000-க்கு விற்றுள்ளார்.

முன்னதாக தனது கருவைக் கலைக்குமாறு மருத்துவரை மோர்மதி அணுகியுள்ளார்.ஆனால் மருத்துவர் அதற்கு மறுப்பு தெரிவித்து மோர்மதிக்கு தேவையான மருந்துகளை இலவசமாக வழங்கி வந்துள்ளார். இருப்பினும், குழந்தை பிறந்த பிறகு, வறுமை காரணமாகக் குழந்தையை விற்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு செயலாளருமான ஜிதேந்திர சவுத்ரி அரசுக்குக் கொடுத்த அழுத்தத்தால் குழந்தையை வாங்கிய தம்பதியரிடம் இருந்து பெண் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. வறுமை காரணமாக அப்பகுதியில் குழந்தைகளை விற்கும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜிதேந்திர சவுத்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

- தனது 4 வயது குழந்தையையும் 5 வயது குழந்தையையும் ஆற்றில் மூழ்கடித்து தாய் பிரியங்கா கொன்றுள்ளார்.
- காணாமல் போன ஒன்றரை வயதாகும் நான்காவது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றார்.
உத்தரப் பிரதேசத்தில் பசியால் அழுத தனது குழந்தைகளை தாய் ஆற்றில் மூழ்கடித்து கொன்ற நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள பராவுயா கிராமத்தில் பிரியங்கா என்று பெண் தனது நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் 4 குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் வாழ்வாதாரத்துக்கு மிகுந்த சிரமப்பட்டுள்ளார் பிரியங்கா.

இந்நிலையில்தான் நேற்று [ஜூன் 27] வியாழக்கிழமை காலை கிராமத்தின் அருகில் உள்ள கேசம்பூர் காட் நதிக்கு குழந்தைகளை குளிக்க அழைத்துச்சென்று தனது 4 வயது குழந்தையையும் 5 வயது குழந்தையையும் ஆற்றில் மூழ்கடித்து தாய் பிரியங்கா கொன்றுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இரண்டு குழந்தைகளின் உடலை மீட்டனர். மொத்தம் உள்ள 4 குழந்தைகளில் இரண்டு உயிரிழந்த நிலையில் மற்ற இரண்டு குழந்தைகளில் 6 வயது சிறுவன் ஆற்றில் அருகில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். மேலும் காணாமல் போன ஒன்றரை வயதாகும் நான்காவது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றார்.

இதற்கிடையில் தாய் பிரியங்காவை போலீசார் கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் காரணம் வெளியாகியுள்ளது. அதாவது, தனது குழந்தைகள் சதா பசியால் அழுவதைக் கண்டு மனம் பொறுக்காமல் அவரகள் படும் கஷ்டத்தைப் போக்கவே அவர்களை கொன்றதாக பிரியங்கா வாக்குமூலம் அளித்துள்ளார்.
- மருத்துவ செலவுக்கு பணம் இல்லததால், பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் குழிதோண்டி புதைத்துள்ளார்.
- மற்றொரு சம்பவத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களின் வீட்டில் வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை தொடர்ச்சியாக பலமுறை நிர்வவணப்படுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளனர்
செலவழித்து மருத்துவம் பார்க்க வசதி இல்லாததால் பிறந்து 15 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை தந்தை உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நவுசாகர் பெரோஸ் நகரத்தில் வாழ்ந்து வந்த தாயாப் என்ற நபரின் மனைவி கடந்த 15 நாட்கள் முன் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில் குழந்தையின் ஆரோக்கியம் குன்றியதால் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்து வந்த தாயாபிடம் மருத்துவ செலவுக்கு பணம் இல்லததால், பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் குழிதோண்டி புதைத்துள்ளார். இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் தந்தை தாயாபை கைது செய்துள்ளனர். மருத்துவ செலவுக்கு பணம் இல்லத்ததால் குழந்தையை புதைத்தாக தாயாப் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் லாகூர் மாகாணத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களின் வீட்டில் வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை தொடர்ச்சியாக பலமுறை நிர்வவணப்படுத்தி அடித்து துன்புறுத்திய சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.






