என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வான்தாக்குதல்"

    • செவ்வாய்க்கிழமை இரவு அகதிகள் முகாம் மீது தாக்குதால் நடத்தப்பட்டது.
    • இன்று காலை கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.

    தெற்கு லெபனானில் உள்ள டிரி கிராமம் அருகே இன்று காலை இஸ்ரேல், கார்மீது வான்தாக்குதல் நடத்தியது. இதில் காரில் சென்ற ஒருவர் கொல்லப்பட்டார். அவர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. அந்த கார் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தும் இந்த தாக்குதலில் சேதமடைந்தது. இதில் மாணவர்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.

    செவ்வாய்க்கிழமை இரவு பாலஸ்தீன அகதிகள் முகாம் (ஐன்-எல்-ஹல்வே) மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

    இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே ஒரு வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்றது. காசாவுக்கு உதவி பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்ததால், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஹமாஸ் பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தினோம். இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த தயாராகி வந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

    அதேவேளையில் தாக்குதல் நடத்தப்பட்டது விளையாட்டு மைதானம், பயிற்சி மையம் இல்லை என ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • ஏமனில் உள்ள ஹவுதி குழுவை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
    • அமெரிக்காவின் டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி தெரிவித்துள்ளது.

    ஏமன் தலைநகரில் அமெரிக்க நடத்தியதாக சந்தேகிக்கப்படும் வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 29 பேர் காயம் அடைந்துள்ளதாக ஹவுதி குழு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் டிரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.

    மத்திய கிழக்கு கடற்பகுதியில் செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி குழுவிற்கு எதிராக அமெரிக்கா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையாக தாக்குதலை நடத்தி வருகிறது.

    வான்தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வீடியோவை ஹவுதி வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இது தொடர்பாக தகவல் எதுவும் வெளியிடவில்லை.

    கடந்த 2023ஆம் நவம்பர் மாதத்தில் இருந்து 100-க்கும் அதிகமான வணிக கப்பல்களை குறிவைத்து ஹவுதி தாக்கல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    • ஈராக், சிரியாவில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன.

    மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளது.

    அமெரிக்க வீரர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் ராணுவ நிலைகள் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதுபோன்று நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    அந்த வகையில் சிரியாவில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இரண்டு அமெரிக்க எஃப்-15 போர் விமானங்கள் சிரியாவில் குண்டுமழை பொழிந்ததாக, அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அதிகாரிகளின் பாதுகாப்பை விட உயர்ந்தது ஏதும் எல்லை என ஜோ பைடன் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவின் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கடந்த மாதம் 17-ந்தேதியில் இருந்து அமெரிக்க துருப்புகள் மீது குறைந்தது 40 முறையாவது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    ×