என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்கா வான்தாக்குதல்: ஏமனில் 7 பேர் உயிரிழப்பு
    X

    அமெரிக்கா வான்தாக்குதல்: ஏமனில் 7 பேர் உயிரிழப்பு

    • ஏமனில் உள்ள ஹவுதி குழுவை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
    • அமெரிக்காவின் டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி தெரிவித்துள்ளது.

    ஏமன் தலைநகரில் அமெரிக்க நடத்தியதாக சந்தேகிக்கப்படும் வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 29 பேர் காயம் அடைந்துள்ளதாக ஹவுதி குழு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் டிரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.

    மத்திய கிழக்கு கடற்பகுதியில் செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி குழுவிற்கு எதிராக அமெரிக்கா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையாக தாக்குதலை நடத்தி வருகிறது.

    வான்தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வீடியோவை ஹவுதி வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இது தொடர்பாக தகவல் எதுவும் வெளியிடவில்லை.

    கடந்த 2023ஆம் நவம்பர் மாதத்தில் இருந்து 100-க்கும் அதிகமான வணிக கப்பல்களை குறிவைத்து ஹவுதி தாக்கல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×