என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் ராணுவம்"

    • அவர்களை கீழே தள்ளி உதைத்த இஸ்ரேல் வீரர்கள் மீண்டும் அவர்களை கேரேஜுக்குள் தவழ்ந்தபடி நுழைய செய்தனர்.
    • அவர்களின் உடல்கள் அங்கே கிடக்க புல்டோசர் கேரேஜின் ஷட்டரை இடிக்கும் பணியை தொடர்ந்தது.

    இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகளால் நிராயுதபாணியான இரண்டு பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    வியாழக்கிழமை நடந்த சம்பவத்தின் வீடியோ மத்திய கிழக்கு ஊடங்களில் வெளியிடப்பட்டது.

    அந்த வீடியோவில், இஸ்ரேல் ராணுவம் ஒரு கேரேஜை புல்டோசரால் இடித்துக் கொண்டிருந்தது. அப்போது உள்ளிருந்து 2 ஆண்கள் கைகளை தூக்கியபடி வெளியே வந்தனர்.

    தங்களிடம் எந்த ஆயுதமும் இல்லை என்பதை காட்ட அவர்கள் அவ்வாறு செய்தனர். அவர்களை கீழே தள்ளி உதைத்த இஸ்ரேல் வீரர்கள் மீண்டும் அவர்களை கேரேஜுக்குள் தவழ்ந்தபடி நுழைய செய்தனர்.

    அப்போது மற்றொரு வீரர் அவர்களை சுட்டுக் கொன்றார். அவர்களின் உடல்கள் அங்கே கிடக்க புல்டோசர் கேரேஜின் ஷட்டரை இடிக்கும் பணியை தொடர்ந்தது.

    நிராயுதபாண்டியாக வந்தவர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றது போர் குற்றம் ஆகும்.

    இஸ்ரேலிய இராணுவம் இறந்தவர்களை தேடப்படும் போராளிகள் என்று விவரித்துள்ளது. அவர்கள் வீரர்கள் மீது வெடிபொருட்களை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் ராணுவம் கூறியது.

    இந்த செயலுக்காக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் ராணுவத்தைப் பாராட்டினார். பயங்கரவாதிகள் இறக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    இது சர்வதேச சட்டத்தை மீறி செய்யப்பட்ட கொலை என்பதை பாலஸ்தீன பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

    • வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • அவர்கள் இஸ்ரேலின் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

    இஸ்ரேலால் அக்கிரமிக்கப்ட்ட பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் வசிக்கும் இஸ்ரேலிய பொதுமக்கள் இஸ்ரேலிய ராணுவ வீரர்களைத் தாக்கியுள்ளனர்.

    பாலஸ்தீன கிராமமான காஃப்ர் மாலிக்கிற்குள் பொதுமக்கள் நுழைவதைத் தடுக்க முயன்றபோது இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் இராணுவ வாகனங்களுக்கும் தீ வைத்து அழித்தனர்.

    அவர்கள் கூட்டத்தை நெருங்கியபோது, அவர்கள் படையினரைத் தாக்கி பாதுகாப்பு வாகனங்களை அழித்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை கலைக்க வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலிய இராணுவத்தின் மீதான தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறினார்.

    இந்த மக்கள் ஒரு சிறிய சிறுபான்மையினர் என்றும், அவர்கள் இஸ்ரேலின் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் நேதன்யாகு மேலும் கூறினார்.

    • ஐநாவின் UNWRA சேர்ந்த ஊழியர் ஒருவர் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்.
    • டி இஸ்ரேல் வேண்டும் என்றே உதவிக்குழுவினர் 15 பேரை படுகொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

    காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்து வந்த ஊழியர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த மார்ச் 23 ஆம் தேதி காசாவில் உள்ள ராஃபா நகரத்தில் ஆம்புலன்களில் சென்றுகொண்டிருந்த உதவுக்குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.

    இதில் ரெட் கிரசண்ட் ஊழியர்கள் 8 பேர், பாதுகாப்பு அவசரப்பிரிவை சேர்ந்த 6 உறுப்பினர்கள் மற்றும் ஐநாவின் UNWRA சேர்ந்த ஊழியர் ஒருவர் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்.

    அவர்கள் உதவிக்குழுவைச் சேர்த்தவர்கள் என்று தெரிந்தே இஸ்ரேல் வேண்டுமென்றே அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கள் வீரர்களை நெருங்கி வந்த வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

    இந்நிலையில் அன்றைய தினம் நடந்த தாக்குதல் தொடர்பான, உயிரிழந்த உதவிக்குழுவில் இருந்த பாலஸ்தீனிய ஊழியர் ஒருவரின் செல்போனில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

    நியூயார்க் டைம்ஸ் தற்போது வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஊழியர்கள் பயணம் செய்த ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களில் அவசரநிலையை உணர்த்தும் விளக்குகள் எரிந்த நிலையில் இருப்பதும், இஸ்ரேலிய ராணுவத்தினர் வாகனங்களை நோக்கியும் உதவிக்குழுவினரை நோக்கியும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பதிவாகி உள்ளது.

    இதன்படி இஸ்ரேல் வேண்டும் என்றே உதவிக்குழுவினர் 15 பேரை படுகொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கண்டங்கள் எழுந்து வருகின்றன. இந்த காணொளி குறித்து இஸ்ரேல் இன்னும் எனது விளக்கமும் அளிக்கவில்லை. 

    • ஹம்தான் பல்லால் இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் கடுமையாக தாக்கப்பட்டார்.
    • பின்னர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டபோது, இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது.

    'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்றவர் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால். இவர் இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்துள்ள பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் (west bank) இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். தற்போது இஸ்ரேல் ராணுவம் இவரை விடுதலை செய்துள்ளது.

    இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்ட நிலையில், ஹம்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இஸ்ரேல் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழும்பின.

    இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம், "நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொண்டிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.

    பயங்கரவாதிகள் (பாலஸ்தீனியர்கள்) இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பாலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்" எனத் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் ஹம்தான் பல்லால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேற்கு கரையில் உள்ள கிர்யாத் அர்பா காவல் நிலையத்தில் இருந்து வெளியேறியதை பத்திரிகையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

    அவருடன் மேலும் இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பல்லால் முகத்தில் கடுமையான காயமும், அவர் அணிந்திருந்த ஆடையில் ரத்தக்கறை படிந்திருந்ததாகவும் பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

    • வீடுகளின் மேற்கூரையில் இருந்து மர்ம நபர்கள் சிலர் இஸ்ரேல் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
    • சிறுமியின் மரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட் வருத்தம் தெரிவித்ததோடு, அவளது குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் இருக்கும் பாலஸ்தீன அகதிகள் முகாமில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி அவர்களை கைது செய்ய இஸ்ரேல் ராணுவம் அங்கு தேடுல் வேட்டையில் ஈடுபட்டது.

    அப்போது அங்குள்ள வீடுகளின் மேற்கூரையில் இருந்து மர்ம நபர்கள் சிலர் இஸ்ரேல் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இஸ்ரேல் வீரர்கள் அவர்களை குறிவைத்து பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

    அப்போது இஸ்ரேல் வீரர்கள் சுட்டதில் ஒரு வீட்டில் இருந்த 16 வயது பாலஸ்தீன சிறுமியின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அவள் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தாள். இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீன சிறுமி உயிரிழந்தது அங்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே சிறுமியின் மரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட் வருத்தம் தெரிவித்ததோடு, அவளது குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் தொடர்ந்து விசாரணை நடத்தும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

    • கடந்த ஏப்ரல் மாதம் லெபனான் பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது
    • இஸ்ரேலும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியது

    இஸ்ரேல்- லெபனான் எல்லையில் கடந்த புதன்கிழமை இஸ்ரேல் ராணுவம் புல்டோசர் கொண்டு பள்ளம் தோண்டி கொண்டிருந்தது. அப்போது ஒரு முதியவர் எதிர்ப்பு தெரிவித்தபோது, புல்டோசர் தோண்டிய மண்ணில் அவரது கால் சிக்கிக் கொண்டது. புல்டோசரை கொண்டு முதியவரை ஏற்ற முயற்சி செய்தனர். அப்போது ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்த வீரர் இடைமறித்து அந்த முதியவரை காப்பாற்றினார்.

    இந்த நிலையில் இன்று அந்தப்பகுதியில் போராட்டக்காரர்கள் திடீரென ஒன்று கூடி இஸ்ரேல் ராணுவம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதற்காக இஸ்ரேல் ராணுவம் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்துள்ளனர். இதனால் லெபனான் போராட்டக்காரர்கள் மற்றும் வீரர்கள் மூச்சு விட முடியாமல் திணறியுள்ளனர்.

    2000-ம் ஆண்டு மே மாதம் இஸ்ரேல் ராணுவம் லெபனானின் தெற்கு பகுதியில் ஆக்கிரமித்து இருந்த பகுதியில் இருந்து வெளியேறியது. தற்போது பிரச்சினை நடைபெற்ற பகுதி லெபனானின் கேஃபர் சௌபா மலைப்பகுதியாகும். இந்த பகுதியுடன் அருகில் உள்ள செபா பண்ணையையும் இஸ்ரேல் 1976 மத்திய கிழக்கு போரின் போது ஆக்கிரமித்து வைத்துள்ளதாக லெபனான் குற்றம்சாட்டி வருகிறது.

    இன்று சில போராட்டக்காரர்கள் இரு நாட்டு எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலிகளை இஸ்ரேல் ராணுவம் இல்லாத பகுதியில் அகற்ற முயன்றுள்ளனர். அப்போது இஸ்ரேல் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பின்னர் ஐ.நா. பாதுகாப்புப்படையினர், லெபனான் வீரர்கள் போராட்டக்காரர்களை தங்கள் எல்லைக்குள் திரும்பச் செய்ய வைத்தனர்.

    2000-க்குப் பிற DO NOT CROSS BLUE LINE என்ற வாசகம் ஐ.நா. அமைதிப்படையால் அரேபிக், ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளில் வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இஸ்ரேல் வீரர்கள், ஏராளமான வாகனங்கள் அந்த இடத்தில் காணப்பட்டு வருகின்றன.

    2006-ம் ஆண்டு நடைபெற்ற 34 நாள் சண்டைக்குப்பின் பெரும்பாலும் எல்லை பிரச்சினை வந்தது. கிடையாது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.

    • போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலி.
    • காசாவின் தெற்கு பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    அதன்பின் இரண்டு நாட்கள், ஒரு நாள் என மூன்று நாட்கள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. இந்திய நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி மீண்டும் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.

    காசாவில் 23 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் வடக்கு காசாவில் உள்ள பெரும்பாலானோர் தெற்கு காசாவிற்கும், முகாம்களுக்கும் சென்றுவிட்டனர். வடக்கு காசாவின் பெரும்பகுதி வாழத்தகுதியற்ற பகுதி போன்ற காணப்படுவதாக வீடுகள், குடும்பங்களை இழந்த பாலஸ்தீனர்கள் குமுறி வருகின்றனர்.

    இந்த நிலையில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை மேலும்மேலும் அதிகரித்து வருகிறது. வடக்கு காசாவை ஒட்டியுள்ள தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், தாக்குதலை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் எகிப்து எல்லையை ஒட்டியுள்ள தெற்கு காசாவிற்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தி வருகிறது.

    இதனால் இருப்பதற்கு இடமில்லாம் பாலஸ்தீன மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தான பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்கதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    எகிப்து அகதிகளை அனுமதிக்கவில்லை. இதனால் போர்க்களத்தில் தவித்து வரும் நிலை நீடித்து வருகிறது.

    இஸ்ரேல் ராணுவத்தினர் துண்டு பிரசுரங்கள் மூலம் இந்த இடத்தை விட்டு வெளியெறுமாறு தெரிவித்துவிட்டு, இரவு முழுவதும் தாக்குதல் நடத்தினர். குண்டுகள் சத்தம் கேட்டதாக கான் யூனிஸ் நகர வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    இஸ்ரேல் ராணுவம் இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள். குண்டு வீசப்போகிறோம் என்று போனில் தனக்கு தெரிவித்தார்கள். விதவையும், நான்கு குழந்தைகளின் தாயுமான பெண்மணி ஒருவர் கடந்த 7-ந்தேதி வடக்கு காசாவில் இருந்து கான் யூனிஸ் நகரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தேன். இதுபோன்ற உத்தரவுகளை காது கொடுத்து கேட்பதில்லை.

    உண்மை என்னவென்றால், காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. வடக்கு பகுதியிலும் மக்களை கொல்கிறார்கள். தெற்கு பகுதியிலும் மக்களை கொல்கிறார் என விரக்தியோடு தெரிவித்தார்.

    இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் ஹமாஸை அதிகாரத்தில் இருந்து ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த பதுங்கு குழிகளை தேடிப்பிடித்து இஸ்ரேல் ராணுவம் அழித்து வருகிறது.

    • ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த வருகின்றனர்.

    இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் பிரகடன் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவின் வடக்குப்பகுதி சீர்குலைந்துள்ளது. தற்போது தெற்கு பகுதியிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் பாலஸ்தீன மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தங்குவதற்கு இடமின்றி அல்லாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியபோது, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு முனைகளில் இருந்து வரும் தாக்குதலை எதிர்கொண்டு இஸ்ரேல் காசாவை துவம்சம் செய்தது.

    இதனால் ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் பிராந்திய போராக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் எகிப்து, ஈரான் மற்றும் அரபு நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை.

    இருந்த போதிலும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஹிஸ்புல்லாவிற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் "ஹிஸ்புல்லா முழு அளவில் போரை தொடங்க முடிவு செய்தால், அதன் சொந்த கைகளால் பெய்ரூட்டை காசாவாகவும், தெற்கு லெபனானை கான் யூனிஸ் நகராகவும் மாற்றும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் மோதலை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. நேற்று அதிபர் ஜோ பைடன் நேதன்யாகு மற்றும் ஜோர்டான் அதிபர் அப்துல்லா ஆகியோரிடம் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    நேதன்யாகுவிடம் ஜோ பைடன் பேசும்போது, காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் மற்றும் மேற்கு கரையில் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேதன்யாகு ஹிஸ்புல்லாவிற்கு எச்சரிக்கை விடுத்தது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.

    • காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 18 ஆயிரம் பேர் உயிரிழப்பு.
    • பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவின் வடக்குப் பகுதிகளை அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைத்துவிட்டது. தற்போது தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், சண்டை முடிவுக்கு வருவதாகவும், ஹமாஸ் அமைப்பினர் இனிமேல் சரணடைவதுதான்... என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நேதன்யாகு கூறுகையில் "சண்டை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஹமாஸ் முடிவுக்கு வருவது தொடங்கிவிட்டது. சண்டை முடிகிறது.

    எஹ்யா சின்வருக்காக உயிர் இழக்காதீர்கள். ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். கடந்த சில தினங்களாக பல ஹமாஸ் பயங்கரவாதிகள் எங்களது படைகளிடம் சரண் அடைந்துள்ளனர்" என்றார்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் சரண் அடைந்ததாக நேதன்யாகு கூறியபோதிலும், அதற்கான ஆதாரத்தை இஸ்ரேல் ராணுவம் வெளியிடவில்லை. ஹமாஸ் அமைப்பும் நேதன்யாகு கருத்தை புறக்கணித்துள்ளது.

    சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி காசாவில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    முன்னதாக,

    ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதோடு, எல்லைக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக இஸ்ரேல் நாட்டில் 1200 பேர் உயிரிழந்தனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதனால் ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியது. இதுவரை காசாவில் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகிறார்கள்.

    பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • பாலஸ்தீன கைதிகள்- பிணைக்கைதிகள் விடுவிப்பு பரிமாற்றம்.
    • பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு இல்லாமல் பிடித்து வைக்கப்பட்டவர்கள் உயிருடன் திரும்பமாட்டார்கள்.

    இஸ்ரேல் படை- ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தொடங்கி 2 மாதத்தை கடந்து விட்டது. ஆனாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இடையில் 7 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    ஆனால் மீண்டும் போர் தொடங்கி இருப்பதால் தற்போது இஸ்ரேல் ராணுவத்தினர் காசா முழுவதும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தரை வழியாகவும், வான்வெளி வழியாகவும் இடைவிடாமல் குண்டுகளை வீசி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

    தொடர் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள காசா நகரம் இனி மேம்படுத்த முடியாத அளவில் கடும் பேரழிவை சந்தித்து இருக்கிறது. அந்த நகரமே சின்னாபின்னமாகி விட்டது.

    இந்த போரில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்பாவி பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதுவரை 17,997 பேர் சண்டையில் இறந்து விட்டதாக காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் போரை நிறுத்தும்படி இஸ்ரேலை வலியுறுத்தி வந்த போதிலும் அந்நாடு தனது முடிவில் பிடிவாதமாக இருந்து வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    கடந்த மாதம் தற்காலிக போர் நிறுத்தத்தின் போது பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்த 240 பேரில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 105 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் இருந்த பாலஸ்தீன கைதிகளை அந்நாடு விடுதலை செய்தது.

    இந்த சூழ்நிலையில் தற்போது இஸ்ரேல் படையினர் மூர்க்கத்தனமாக நடத்தி வரும் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் இரு படையினரும் நேருக்கு நேர் சண்டையிட்டு வருகின்றனர்.

    ஹமாசிடம் இன்னும் பலர் பிணைக்கைதிகளாக உள்ளனர். அவர்களை மீட்க இஸ்ரேல் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை எந்த பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தங்கள் பிணைக்கைதிகளை அவர்கள் உயிருடன் பிடிக்க முடியாது என ஹமாசின் ஆயுதப்பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் காசாவில் புதிய போர் நிறுத்தம் கொண்டு வரவும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சியில் கத்தார் நாடு ஈடுபட்டு வருகிறது.

    ஆனால் ஹமாஸ் எச்சரிக்கையை புறந்தள்ளிவிட்டு காசா மீது இன்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    இதற்கிடையே ஹமாஸ் தலைவருக்காக உயிரை இழக்காதீர்கள். சரணடையுங்கள் என ஹமாஸ் அமைப்பினருக்கு நேதன்யாகு எச்சரித்துள்ளார்.

    • காசாவின் வடக்கு முனையில் ஹமாஸின் ஜபாலியா, ஷெஜையா பட்டாலியன் அகற்றப்படும் தருவாயில் உள்ளது.
    • நாங்கள் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து நெருக்கடி கொடுத்தால், அங்கிருந்து பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் அழைப்பு விடுக்கப்படும்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் பிரகடனம் செய்து காசா மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தேவை என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த போர் எப்போதுதான் முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் காலன்ட் கூறியதாவது:-

    காசாவில் ஹமாஸ்க்கு எதிரான போர், எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் முடிவுக்கு வரும். காசாவின் வடக்கு முனையில் ஹமாஸின் ஜபாலியா, ஷெஜையா பட்டாலியன் அகற்றப்படும் தருவாயில் உள்ளது.

    அமெரிக்கா கேட்கும் மற்றும் சொல்லும் அனைத்தையும் நான் கருத்தில் கொள்கிறேன். மேலும் அமெரிக்கா செய்து கொண்டிருப்பதை அனைத்து கேபினட் மந்திரிகளுடன் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். அமெரிக்கா எங்களுக்கு உதவுவதற்கான அனைத்து வழிகளையும் காண்போம்.

    நாங்கள் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து நெருக்கடி கொடுத்தால், அங்கிருந்து பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்புகிறேன். அப்படி அவர்கள் தெரிவித்தால், அதுகுறித்து நாங்கள் யோசிப்போம்.

    கடந்த சில நாட்களாக ஹமாஸ் அமைப்பினர் சரண் அடைந்துள்ளனர். இது பயங்கரவாத குழுவிற்கு என்ன நடக்கிறது என்பதை காட்டுகிறது. யாரெல்லாம் சரண் அடைகிறார்களோ அவர்கள் உயிர்கள் காக்கப்படும். ஹமாஸின் சீனியர் கமாண்டர்கள், பயங்கரவாதிகள் ஆகியோர் நிலைமை சரணடைய வேண்டும் அல்லது சாக வேண்டும். 3-வது வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.

    • உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.
    • நிபந்தனைகளின்றி பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலில் தாக்குதலில் வடக்கு காசா முற்றிலும் சீர்குலைந்ததுள்ளது.

    பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைகாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும். பிணைக்கைதிகள் விடுவிக்க வேண்டும் என ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான உலக நாடுகளும் இதை வலியுறுத்துகின்றன.

    அரபு நாடுகள் ஏற்கனவே இது தொடர்பான தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. அப்போது அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லைஎன பெரும்பாலான நாடுகள் விமர்சனம் செய்திருந்தன.

    இந்த நிலையில்தான் தற்போது ஐ.நா.வில் உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் தேவை என மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் உடனடியாக நிபந்தனையின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. அர்ஜென்டினா, உக்ரைன், ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

    ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்படும் அளவிற்கு சட்டப்பூர்வமாக எடுத்துக் கொள்ளப்படாது. உலக மக்களுக்கு ஒரு சம்பவத்தில் உலக நாடுகள் எடுக்கும் முடிவை இதன் மூலமாக வலியுறுத்த மட்டுமே செய்ய முடியும்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×