என் மலர்
நீங்கள் தேடியது "பொதுநல மனு"
- நீதிமன்றத்திற்கு வரும்போது நடுநிலையான மனுவுடன் வாருங்கள்.
- நீதிமன்ற உத்தரவால் ஒருவரின் எண்ணங்களை மாற்றிவிட முடியுமா?
நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்கு எதிராக 12 பேர் இணைந்து தாக்கல் செய்த பொதுநல மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி நாகரத்னா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு நேற்று விசாரித்தது.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி, "நாட்டில் நிலவும் சூழல் மிகவும் நச்சுத்தன்மையுடன்மாறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே இதனை சரிசெய்ய முடியும்" என்று வாதிட்டார்.
இந்த மனுவில் பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்(உ.பி), ஹிமந்த விஸ்வ சர்மா(அசாம்), தேவேந்திர பட்னாவிஸ்(மகாராஷ்டிரா), புஷ்கர் சிங் தாமி(உத்ராகண்ட்) உள்ளிட்ட சில முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், "வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபடும் மற்றவர்களை விட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட தரப்பை மட்டும் இலக்கு வைப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்புனார்.
மேலும், நீதிமன்றத்திற்கு வரும்போது நடுநிலையான மனுவுடன் வாருங்கள். வெறுப்புப் பேச்சு என்பது அனைத்துத் தரப்பிலும் உள்ளது.
வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டுமானால், அவை அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
வெறுப்புப் பேச்சு என்பது ஒருவரின் எண்ணத்திலிருந்து உருவாகிறது. நீதிமன்ற உத்தரவால் ஒருவரின் எண்ணங்களை மாற்றிவிட முடியுமா?" என்று நீதிபதி நாகரத்னா கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றத்தின் விமர்சனத்தைத் தொடர்ந்து, மனுவில் உள்ள தனிநபர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, திருத்தப்பட்ட புதிய மனுவைத் தாக்கல் செய்ய வழக்கறிஞர் கபில் சிபல் ஒப்புக்கொண்டார். இதற்கு நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
- விளம்பரநோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
- அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை.
புதுடெல்லி:
நாட்டின் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய உத்தரவிட கோரி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை இன்று பரிசீலனை செய்த நீதிபதிகள், விளம்பர நோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், மனுவை திரும்ப பெற அனுமதியளித்து, மனுவை தள்ளுபடி செய்தனர். பொதுநல மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
- பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
- நாளையில் இருந்து வீடு வீடாக ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம்.
பொங்கல் பண்டிகையையொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேசன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன்கள் நாளை (ஜனவரி 3-ந்தேதி) முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வினியோகம் செய்ய டோக்கன் அச்சடிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. இப்போது அந்த பணிகள் முடிவடைந்து விட்டது.
இதைத் தொடர்ந்து நாளையில் இருந்து வீடு வீடாக ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்க தொகை வழங்க கோரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தேர்தல் நேரங்களில் மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படுகிறது.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுநல மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






