மக்களவையில் நிறைவேற்றப்பட்ட விபி-ஜி ராம் ஜி மசோதாவிற்கு சோனியா காந்தி கண்டனம்

ஏழைகளின் உயிர் நாடியாக இருந்த திட்டத்தை மாற்றி அவர்கள் மீது மத்திய பாஜக அரசு தாக்குதல்.பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 100 நாள் வேலை திட்டத்தை பலவீனப்படுத்த முயற்சி.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட விபி-ஜி ராம் ஜி மசோதாவிற்கு சோனியா காந்தி கண்டனம்
Published on

100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கப்பட்டதுடன் திட்டத்தின் அம்சங்களும் மாற்றப்பட்டதற்கு சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏழைகளின் உயிர் நாடியாக இருந்த திட்டத்தை மாற்றி அவர்கள் மீது மத்திய பாஜக அரசு தாக்குதல் நடத்தி உள்ளதாக சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மீது பாஜக அரசு தாக்குதல் தொடுத்துள்ளது. 11 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 100 நாள் வேலை திட்டத்தை பலவீனப்படுத்த முயற்சித்ததாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

20 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த அந்த நேரத்தில் MGNREGA பாராளுமன்றத்தில் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டது. இது ஏழைகளுக்கு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்கியது மற்றும் அதன் மூலம் கிராம பஞ்சாயத்துகளை வலுப்படுத்தியது.

MGNREGA மூலம், மகாத்மா காந்தியின் கனவுகளை நோக்கி ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏழைகளின் நலன்களை பலவீனப்படுத்த மோடி அரசு முயன்றது.

சமீபத்தில், MGNREGA மீது அரசாங்கம் புல்டோசரை விட்டு ஏற்றியுள்ளது. MGNREGA-வை கொண்டு வந்து செயல்படுத்துவதில் காங்கிரஸ் பெரும் பங்களிப்பைச் செய்தது. இது நாட்டின் மற்றும் மக்களின் நலனுடன் இணைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இதன் மூலம் மோடி அரசு ஏழைகளின் நலன்களைத் தாக்கியுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com