என் மலர்
நீங்கள் தேடியது "VBKV"
- ஏழைகளின் உயிர் நாடியாக இருந்த திட்டத்தை மாற்றி அவர்கள் மீது மத்திய பாஜக அரசு தாக்குதல்.
- பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 100 நாள் வேலை திட்டத்தை பலவீனப்படுத்த முயற்சி.
100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கப்பட்டதுடன் திட்டத்தின் அம்சங்களும் மாற்றப்பட்டதற்கு சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏழைகளின் உயிர் நாடியாக இருந்த திட்டத்தை மாற்றி அவர்கள் மீது மத்திய பாஜக அரசு தாக்குதல் நடத்தி உள்ளதாக சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மீது பாஜக அரசு தாக்குதல் தொடுத்துள்ளது. 11 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 100 நாள் வேலை திட்டத்தை பலவீனப்படுத்த முயற்சித்ததாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
20 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த அந்த நேரத்தில் MGNREGA பாராளுமன்றத்தில் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டது. இது ஏழைகளுக்கு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்கியது மற்றும் அதன் மூலம் கிராம பஞ்சாயத்துகளை வலுப்படுத்தியது.
MGNREGA மூலம், மகாத்மா காந்தியின் கனவுகளை நோக்கி ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏழைகளின் நலன்களை பலவீனப்படுத்த மோடி அரசு முயன்றது.
சமீபத்தில், MGNREGA மீது அரசாங்கம் புல்டோசரை விட்டு ஏற்றியுள்ளது. MGNREGA-வை கொண்டு வந்து செயல்படுத்துவதில் காங்கிரஸ் பெரும் பங்களிப்பைச் செய்தது. இது நாட்டின் மற்றும் மக்களின் நலனுடன் இணைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இதன் மூலம் மோடி அரசு ஏழைகளின் நலன்களைத் தாக்கியுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
டாஸ் வென்ற டூட்டி பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் எஸ் தினேஷ், கேப்டன் கவுசிக் காந்தி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தினேஷ் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்து சுப்ரமணியன் ஆனந்த் 27 பந்தில் பந்தில் 37 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ராஜகோபால் சதிஷ் 9 பந்தில் 17 ரன்கள் சேர்த்தார்.
ஆனால் தொடக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் கவுசிக் காந்தி தொடக்கம் முதல் முடிவு வரை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 68 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் 111 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க டூட்டி பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.

பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விபி காஞ்சி வீரன்ஸ் அணியினர் களம் இறங்கினர். தொடக்க வீரர் கே விஷால் வைத்யா 33 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீரர் சித்தார்த் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
கேப்டன் பாபா அபரஜித் 29 ரன்களும், வி சுப்ரமணிய சிவா 33 ரன்களும் எடுக்க விபி காஞ்சி வீரன்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டூட்டி பேட்ரியாட்ஸ் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






