search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPL 2018"

    தமிழ்நாடு பிரீமியர் லீக் குவாலிபையர் 2-ல் மதுரை பாந்தர்ஸ்க்கு கோவை கிங்ஸ் 126 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #ENGvIND
    தமிழ்ந்நாடு பிரீமியர் லீக் தொடரின் 2-வது குவாலிபையர் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. மதுரை பாந்தர்ஸ்க்கு எதிராக டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர் ஷாருக்கான் 4 ரன்னிலும், அபிநவ் முகுந்த் 28 ரன்னிலும், அதன்பின் வந்த ரவி குமார் ரோஹித் 5 ரன்னிலும் வெளியேறினார்கள்.



    அதன்பின் வந்த அஸ்வின் வெங்கடராமன் 45 ரன்களும், பிரசாந்த் ராஜேஷ் 29 ரன்களும் அடிக்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது. மதுரை பாந்தர்ஸ் அணியின் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    இறுதிப் போட்டிக்குள் நுழையும் 2-வது அணி யார் என்பதை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியும் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றனர். #TNPL2018 #NammaOoruNammaGethu
    நத்தம்:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் 20 ஓவர் போட்டிதொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நேற்று மாலை நடந்த முதல் தகுதி சுற்று (குவாலிபையர் 1) ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 75 ரன் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இதே மைதானத்தில் இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) போட்டியில் கோவை கிங்ஸ் வெற்றி பெற்றது. அந்த அணி காரைக்குடி காளையை 24 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வெளியேற்றியது.

    இறுதிப் போட்டிக்குள் நுழையும் 2-வது அணி யார் என்பதை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர்-2) இன்று நத்தத்தில் நடக்கிறது. இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த மதுரை பாந்தர்ஸ் அணியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற கோவை கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மதுரை லீக் ஆட்டத்தில் 7 போட்டியில் 5 வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்தது. முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் நிர்ணயித்த 203 ரன் இலக்கை நோக்கி விளையாடிய மதுரை 128 ரன்னில் சுருண்டது.

    இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று முழு திறமையை வெளிபடுத்துவது அவசியம். அந்த அணியில் அருண் கார்த்திக், தலைவன் சற்குணம், ரோகித், காவுசிக், தன்வார், வருண் சக்ரவர்த்தி, ரகில்ஷா போன்ற வீரர்கள் உள்ளனர். மேலும் பந்து வீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியம். அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியில் ஷாருக்கான், ரோனித், அந்தோணிதாஸ், அகில்ஸ்ரீநாத் அஜித்ராம், அஸ்வின் வெங்கடராமன் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    வெளியேறுதல் சுற்றில் காரைக்குடியை வீழ்த்தி உள்ளதால் கோவை கிங்ஸ் நம்பிக்கையுடன் உள்ளது. அதே உத்வேகத்துடன் விளையாட முயற்சிக்கும்.

    இறுதிப் போட்டிக்கு நுழைய இரு அணிகளும் மல்லு கட்டும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் காரைக்குடி காளையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது லைகா கோவை கிங்ஸ். #TNPL2018 #LKKvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. கோவை கிங்ஸ் அணிக்கெதிராக காரைக்குடி காளை டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    கோவை கிங்ஸ் அணியின் ஷாருக்கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷாருக்கான 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அபிநவ் முகுந்த் 51 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற கோவை கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. காரைக்குடி காளை அணியின் ராஜ்குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



    இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை களமிறங்கியது. கோவை கிங்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கி திணறியது.

    அந்த அணியின் மான் பாவ்னா ஓரளவு தாக்குப்பிடித்து 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். கிஷன் குமார் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகி வெளியேறினர். இதனால் காரைக்குடி காளை 20 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    கோவை கிங்ஸ் அணி சார்பில் நடராஜன் 4 விக்கெட்டும், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் கோவை கிங்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன. #TNPL2018 #LKKvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் காரைக்கு காளைக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கோவை கிங்ஸ். #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்று திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. கோவை கிங்ஸ் அணிக்கெதிராக காரைக்குடி காளை டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி கோவை கிங்ஸ் அணியின் ஷாருக்கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷாருக்கான 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அபிநவ் முகுந்த் 51 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற கோவை கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. காரைக்குடி காளை அணியின் ராஜ்குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    தமிழ்நாடு பிரீமியர் லீக் குவாலிபையர் 1-ல் மதுரை பாந்தர்ஸை 75 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-1 திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிராக மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. ஹரி நிஷாந்த் 57 ரன்களும், என் ஜெகதீசன் 43 ரன்களும், ஆர் விவேக் 54 ரன்களும் சேர்த்தனர்.



    பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் களம் இறங்கியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சால் மதுரை பாந்தர்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் 19.3 ஓவரில் 128 ரன்னில் சுருண்டது. இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் குவாலிபையர் 1-ல் மதுரை பாந்தர்ஸ்க்கு 204 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ் #TNPL2018 #DindigulDragons #MaduraiPanthers
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் குவாலிபையர்-1 திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் களம் இறங்கியது.

    தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 9.1 ஓவரில் 90 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. ஹரி நிஷாந்த் 31 பந்தில் 57 ரன்களும், ஜெகதீசன் 34 பந்தில் 43 ரன்களும் குவித்தனர்.

    அதன்பின் வந்த ஆர் விவேக் 25 பந்தில் 54 ரன்கள் குவித்தார். இந்த மூவரின் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்துள்ளது. #TNPL2018 #DindigulDragons #MaduraiPanthers
    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானதால், இந்த போட்டி உடனடியாக ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNPL2018
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் நெல்லையில் நேற்று இரவு 7.15 மணிக்கு இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோத இருந்தன.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானதால், இந்த போட்டி உடனடியாக ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மறைவுக்கு அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் இன்று இரவு 7.15 மணிக்கு நத்தத்தில் (திண்டுக்கல்) நடக்க இருந்த கோவை கிங்ஸ்- காரைக்குடி காளை அணிகள் இடையிலான வெளியேற்றுதல் சுற்று ஆட்டமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

    ரத்து செய்யப்பட்ட இவ்விரு ஆட்டங்களும் மற்றொரு தேதியில் நடத்தப்படும், அதன் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 
    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் நெல்லையில் இன்று மோதுகின்றன. #TNPL2018
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஜூன் 11-ந் தேதி தொடங்கி நெல்லை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது. நேற்று முன்தினத்துடன் 28 லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன.

    லீக் ஆட்டங்கள் முடிவில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிகர ரன்-ரேட் (+0.992) அடிப்படையில் முதலிடம் பிடித்தது. மதுரை பாந்தர்ஸ் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றாலும், நிகர ரன்-ரேட் (+0.124) அடிப்படையில் 2-வது இடம் பெற்றது. கோவை கிங்ஸ் அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றதுடன், நிகர ரன்-ரேட் (+0.577) அடிப்படையில் 3-வது இடத்தை பிடித்தது. காரைக்குடி காளை அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றாலும், நிகர ரன்-ரேட் (+0.505) அடிப்படையில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 5-வது இடத்தையும், திருச்சி வாரியர்ஸ் 6-வது இடத்தையும், காஞ்சி வீரன்ஸ் 7-வது இடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கடைசி இடத்தையும் பிடித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதலாவது தகுதி சுற்று (பிளே-ஆப்) ஆட்டத்தில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 2-வது இடம் பெற்ற மதுரை பாந்தர்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 12-ந் தேதி சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். இதில் தோல்வி காணும் அணி நத்தத்தில் 10-ந் தேதி நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கடந்த ஆண்டில் 6-வது இடம் பிடித்து இருந்தது. இந்த சீசனில் அந்த அணியின் கேப்டன் ஆர்.அஸ்வின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருப்பதால் பெரும்பாலான ஆட்டங்களில் ஜெகதீசன் தான் அணியை வழிநடத்தினார். அவர் இதுவரை 3 அரைசதம் உள்பட 302 ரன்கள் குவித்துள்ளார். விவேக், ஹரி நிஷாந்த் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது, அபினவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 2 சீசனிலும் ஒரு வெற்றியை கூட பெறாத மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளர் மற்றும் வீரர்கள் மாற்றத்தால் புதுப்பொலிவு பெற்றுள்ளது. டி.ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை 2 ஆட்டத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. மதுரை பாந்தர்ஸ் அணியின் பேட்டிங்கில் அருண் கார்த்திக் (3 அரை சதம் உள்பட 307 ரன்கள்) முதுகெலும்பாக விளங்கி வருகிறார். தலைவன் சற்குணம், கவுசிக், ஷிஜித் சந்திரன் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை அளித்து வருகின்றனர். பந்து வீச்சில் ரஹில் ஷா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க மதுரை பாந்தர்ஸ் அணி முயற்சிக்கும். அதே நேரத்தில் இறுதிப்போட்டியை எட்ட திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தனது முழு பலத்தையும் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. 3 தடவையும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இந்த போட்டி குறித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பயிற்சியாளர் வெங்கட்ரமணா கருத்து தெரிவிக்கையில், ‘வீரர்கள் தேர்வு முறை காரணமாக இந்த சீசனில் புதிய சாம்பியன் உருவாக வாய்ப்பு கிடைத்துள்ளதாக நினைக்கிறேன். நாங்கள் சிறந்த வீரர்களை தக்க வைத்தோம். அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து காட்டினார்கள். சூழ்நிலைக்கு தகுந்தபடி தான் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்கிறோம். எங்கள் அணியில் வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. யார் குறிப்பிட்ட நேரத்தில் பொறுப்பேற்று கொள்கிறார்களோ? அவர்கள் அணியை முன்னெடுத்து செல்கிறார்கள்’என்றார். திண்டுக்கல் அணியின் கேப்டன் ஜெகதீசன் அளித்த பேட்டியில், ‘இந்த சீசனில் எங்கள் அணி நல்ல சமபலத்துடன் உள்ளது. எங்கள் வீரர்கள் அனைவரும் பொறுப்பை உணர்ந்து விளையாடுகிறார்கள். இது எங்களுக்கு சிறப்பான சீசன் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம். இருப்பினும் எங்கள் பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்’ என்று தெரிவித்தார்.

    மதுரை பாந்தர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் தலைவன் சற்குணம் அளித்த பேட்டியில், ‘மிகவும் நேர்மறையான மனநிலையுடன் இந்த ஆட்டத்தை நாங்கள் அணுக வேண்டும். எதிரணியை வீழ்த்தி எங்களது மன உறுதியை நிரூபித்து காட்ட இது நல்ல வாய்ப்பாகும். அணியில் எல்லா பேட்ஸ்மேன்களும் நல்ல நிலையில் உள்ளனர். இதனால் என்னால் நெருக்கடி இன்றி விளையாடுவதுடன் இயல்பான ஷாட்களை விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. கடந்த முறை நான் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஆடினாலும், பொதுவான ஆட்டங்களில் மதுரை அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவேன். இந்த முறை மதுரை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பது எனது சவாலாக இருந்தது. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது. தற்போது நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

    இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

    திண்டுக்கல் டிராகன்ஸ்: ஜெகதீசன் (கேப்டன்), ஹரி நிஷாந்த், விவேக், சதுர்வேத், அனிருத், முகமது, அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாத், யாழ் அருண்மொழி, தோதாத்ரி.

    மதுரை பாந்தர்ஸ்: டி.ரோகித் (கேப்டன்), அருண் கார்த்திக், தலைவன் சற்குணம், கார்த்திகேயன், நாதன், கவுசிக், ஷிஜித் சந்திரன், அபிஷேக் தன்வார், கிரண் ஆகாஷ், வருண் சக்ரவர்த்தி, ரஹில் ஷா. #TNPL2018
    3-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் குவாலிபையர் 1-ல் திண்டுக்கல் - மதுரை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #TNPL2018 #DDvMP
    3-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் ‘லீக்’ ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. கடைசி ‘லீக்’ ஆட்டங்களில் திருச்சி வாரியர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸையும், முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ் 4 விக்கெட்டில் காரைக்குடி காளையையும் தோற்கடித்தன.

    திருச்சி, தூத்துக்குடி அணிகள் பெற்ற வெற்றி எந்த பலனையும் தரவில்லை. ரன்ரேட்டில் அந்த அணிகள் ‘பிளேஆஃப்’ வாய்ப்பை இழந்தன. கோவை கிங்ஸ், காரைக்குடி காளை அணிகள் ‘பிளேஆஃப்’ சுற்றுக்கு நுழைந்தன.

    திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்றன. ரன்ரேட்டில் முன்னிலையில் இருந்ததால் திண்டுக்கல் முதல் இடத்தையும், மதுரை 2-வது இடத்தையும் பிடித்தன.

    கோவை கிங்ஸ், காரைக்குடி காளை, டூட்டி பேட்ரியாட்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 4 அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்றன. இதில் கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ரன்ரேட்டில் முன்னிலை பெற்று முறையே 3-வது, 4-வது இடங்களை பிடித்து ‘பிளேஆஃப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன

    இன்று ஓய்வு நாளாகும். ‘பிளேஆஃப்’ சுற்று நாளை (7-ந்தேதி) தொடங்குகிறது. நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நாளை இரவு 7.15 மணிக்கு ‘குவாலிபையர் 1’ ஆட்டம் தொடங்குகிறது. இதில் முதல் இடத்தை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ்- இரண்டாவது இடத்தை பிடித்த மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். திண்டுக்கல் அணி ஏற்கனவே ‘லீக்’ ஆட்டத்தில் மதுரையை வீழ்த்தி இருந்தது. தோற்கும் அணி வெளியேறாது ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் விளையாடும்.


    மதுரை பாந்தர்ஸ்

    எலிமினேட்டர் ஆட்டம் 8-ந்தேதி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இதில் 3-வது இடத்தை பிடித்த கோவை கிங்ஸ்- நான்காவது இடத்தை பிடித்த காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குவாலிபையர் 1-ல் தோல்வியடைந்த அணியுடன் விளையாடும். தோற்கும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

    கோவை அணி ‘லீக்’ ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் காரைக்குடி காளையை வீழ்த்தி இருந்தது. ‘குவாலிபையர் 2’ ஆட்டம் நத்தத்தில் வருகிற 10-ந்தேதியும், இறுதிப் போட்டி சென்னையில் 12-ந்தேதியும் நடக்கிறது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் டூட்டி பேட்ரியாஸ்க்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது காரைக்குடி காளை. #TNPL2018 #KKvTP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 28-வது மற்றும் கடைசி லீக் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. காரைக்குடி காளைக்கு எதிராக டூட்டி பேட்ரியாட்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி காரைக்குடி காளை அணியின் வி ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆதித்யா 31 பந்தில் 37 ரன்னும், அனிருதா 23 பந்தில் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அதன்பின் வந்த ஷாஜஹான் 17 பந்தில் 20 ரன்களும், ராஜ்குமார் 10 ரன்களில் வெளியேறினாலும், ராஜாமணி ஸ்ரீனிவாசன் அவுட்டாகாமல் 29 பந்தில் 46 ரன்கள் அடிக்க காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

    பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டூட்டி பேட்ரியாட்ஸ் விளையாடி வருகிறது.
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் காஞ்சி வீரன்ஸை வீழ்த்தி 8 புள்ளிகள் பெற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப் சுற்றை இழந்தது திருச்சி வாரியர்ஸ் #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 27- வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திருச்சி வாரியர்ஸ் - காஞ்சி வீரன்ஸ் பலப்பரீட்டை நடத்தின. டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய காஞ்சி வீரன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுகள் எடுத்தது. பிரான்சிஸ் ரோகின்ஸ் அதிகபட்சமாக அவுட்டாகாமல் 29 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார். திருச்சி வாரியர்ஸ் அணி சார்பில் கண்ணன் விக்னேஷ், சோனு யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    பின்னர் 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. பரத் ஷங்கர், மணி பாரதி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணி பாரதி 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பாபா இந்ரஸித் 26 ரன்னிலும், சுரேஷ் குமார் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் பரத் ஷங்கர் 43 பந்தில் 69 ரன்கள் குவித்தார்.



    சத்தியமூர்த்தி சரவணன் அவுட்டாகாமல் 16 பந்தில் 23 ரன்கள் அடிக்க திருச்சி வாரியர்ஸ் 17.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் நான்கு வெற்றிகள் திருச்சி வாரியம் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால் காரைக்குடி காளை, கோவை கிங்ஸ் 8 புள்ளிகளுடன் அதிக ரன்ரேட் வைத்திருப்பதால் பிளேஆஃப் சுற்றை இழந்தது. #TNPL2018 # RTWvVKV
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ் அணி. #TNPL2018 # RTWvVKV
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 27 - வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி வாரியர்ஸ் அணியும், காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதையடுத்து, அந்த அணியின் சித்தார்த், பாபா அபராஜித் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆனால், திருச்சி வாரியர்ஸ் அணி சிறப்பாக பந்து வீசினர். இதனால் காஞ்சி வீரன்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    காஞ்சி வீரன்ஸ் அணியில் பிரான்சிஸ் ரோகின்ஸ் மட்டும் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    விஷால் 25 ரன்னிலும், சித்தார்த் மற்றும் மோகித் ஹரிஹரன் ஆகியோர் தலா 17 ரன்களும் எடுத்தனர். இறுதியில், காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

    திருச்சி வாரியர்ஸ் அணி சார்பில் கண்ணன் விக்னேஷ், சோனு யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் அணி விளையாடி வருகிறது. #TNPL2018 # RTWvVKV 
    ×