டிஎன்பிஎல் 2018- சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிரான போட்டியில் லைகா கோவை கிங்ஸ் வெற்றி

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. #TNPL2018 #CSGvKK
டிஎன்பிஎல் 2018- சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிரான போட்டியில் லைகா கோவை கிங்ஸ் வெற்றி
Published on

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 16-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக கோவை கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

கோவை அணியின் ஷாருக் கான், அபிநவ் முகுந்த் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அபிநவ் முகுந்த் 34 ரன்களும், ஷாருக் கான் 59 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இறுதியில், அந்தோணி தாஸ் 28 ரன்கள் சேர்க்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில்  பி.அருண், ஹரிஸ் குமார் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களமிறங்கியது. சூப்பர் கில்லீஸ் அணியில் முருகன் அஷ்வின் அதிகமாக 34 ரன்கள் எடுத்தார். சசிதேவ் 23 ரன்கள் எடுத்தார்.

மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் சூப்பர் கில்லீஸ் அணி 18 ஓவரில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து 53 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஷாருக் கான் தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #CSGvKK

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com