செல்வபெருந்தகையுடன் கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை ஆய்வு செய்த விஜய் வசந்த்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக் கூட்டம்.தேங்காபட்டணம் துறைமுகம் சென்று பார்வையிட்ட விஜய்வசந்த்
செல்வபெருந்தகையுடன் கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை ஆய்வு செய்த விஜய் வசந்த்
Published on

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தந்தார். அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இணைந்து கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையில் கட்டப்பட்டு வரும் கண்ணாடி பாலத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் தேங்காபட்டணம் துறைமுகத்திற்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளையும் மேற்பார்வையிட்டனர்.

இதில் மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி தலைவர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கத்தில் செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்றது. அதிலும் விஜய்வசந்த் எம்பி கலந்துகொண்டார்.

ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஈ.சுந்தரவதனம் , மாநகர மேயர்மகேஷ், பொதுக்கணக்குகுழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், சேகர், முகமது ஷாநவாஸ், ஐயப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், Dr. தாரகைகத்பட், தளவாய்சுந்தரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், மாவட்ட வன அலுவலர், மாநகர ஆணையாளர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com