என் மலர்
நீங்கள் தேடியது "கன்னியாகுமரி மீனவர்கள்"
- காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
- மார்த்தாண்டம் JCI சார்பில் இன்று ஆற்றூரில் நடைபெற்ற ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தேன்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தூத்தூர் சின்னதுறை புனித ஜூட் விளையாட்டு குழு சார்பில் நடைபெற்ற மாநில மின்னொளி கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அணிகளை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்கினேன்.

திருவட்டார் கிழக்கு வட்டார ஆற்றூர் பஞ்சாயத்து காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.

குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு புது நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்தினேன்.
முன்னதாக ஊர்வலமாக சென்று காங்கிரஸ் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று காலை என்னை மரியாதை நிமித்தம் சந்தித்தனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

ஈரான் இஸ்ரேல் போர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஈரானில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குமரி மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளேன்.
மார்த்தாண்டம் JCI சார்பில் இன்று ஆற்றூரில் நடைபெற்ற ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தேன்.

சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்ற குமரி கிழக்கு மற்றும் நாகர்கோவில் மாநகர நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டினை தெரிவித்து கொண்டேன்.

நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கட்சியின் பெருமையை விளக்கியும், பாஜக வின் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்தும் நடக்க இருக்கும் தொடர் பரப்புரை பிரச்சார கூட்டத்தை தொடங்கி வைத்தேன்.

மாநகர மாவட்ட தலைவர் திரு.நவீன் குமார் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- விபத்தில், 11 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.
- மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
கோவா கடற்பகுதியில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல், மீனவர்கள் படகின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
13 மீனவர்களுடன் வந்த மர்தோமா [Marthoma] படகின் மீது ஸ்கார்பீன்- கிளாஸ் [Scorpene-class] கடற்படை நீர்மூழ்கியானது மோதியது.
இந்த விபத்தில், 11 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.
இதில், மாயமான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தபோது படகு கவிழ்ந்து கடலில் காணாமல் போன கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த ஜெனிஸ்மோன் என்ற மீனவ சகோதரரை மீட்க கோரி இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் இந்திய கப்பற்படை உயரதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மேலும், கப்பற்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்க ஆவன செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளேன்.
ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலுடன் ஏற்பட்ட விபத்தில் படகு கவிழ்ந்து மீன்பிடி படத்திற்குள் இருந்த இரண்டு மீனவர்களை காப்பாற்ற முடியாமல் போனது. இவர்கள் படகுக்குள் சிக்கி மூழ்கி இருப்பார்கள் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய கப்பற்படையின் பயிற்சி பெற்ற வீரர்களால் இவர்களை கடலின் அடி தளத்திற்கு சென்று தேட முடியும். ஆகவே இந்திய கப்பற்படை சிறப்பு வீரர்களை இதற்காக அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






