search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fisherman missing"

    • கடலுக்குள் விழுந்த மீனவரை 10க்கும் மேற்பட்ட படகுகளில் தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மீனவர் கடலில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் மாயமானார்.

    தவறி விழுந்து மீனவர் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ரத்தினசாமி (36) ஆவார்.

    கடலுக்குள் விழுந்த மீனவரை 10க்கும் மேற்பட்ட படகுகளில் தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீனவர் கடலில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 2-வது நாளாக மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 9 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சிலுவை தஸ் நேவிஸ் (வயது 55). மீனவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று காலை சிலுவை தஸ் நேவிஸ் உள்பட 7 பேர் அதே பகுதியை சேர்ந்த வெலிங்டன் (45) என்பவரது நாட்டுப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கரையில் இருந்து சுமார் 5 நாட்டிக்கல் தொலைவில் படகில் இருந்தபடி மீனவர்கள் கடலில் மீனுக்கு வீசிய வலையை இழுத்தபோது எதிர்பாராத விதமாக சிலுவை தஸ் நேவிஸ் தவறி கடலுக்குள் விழுந்தார்.

    அவரை உடனடியாக சக மீனவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கி விட்டார். அவரை சக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர், மீன்வளத் துறையினர் கடலுக்கு சென்று தீவிரமாக தேடிய நிலையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் அவரை தேடும் பணியில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், கூத்தங்குழி, உவரி, இடிந்தகரை உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    • கடலோர பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர், மீன்வளத் துறையினர் கடலுக்கு சென்று மீனவரை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சிலுவை தஸ் நேவிஸ் (வயது 50). மீனவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    இன்று காலை அதே பகுதியை சேர்ந்த வெலிங்டன் (45) என்பவரது நாட்டுப்படகில் சிலுவை தஸ் நேவிஸ் உள்பட 7 பேர் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

    கரையில் இருந்து சுமார் அரை நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனுக்கு வீசிய வலையை இழுத்த போது எதிர்பாராத விதமாக சிலுவை தஸ் தவறி கடலுக்குள் விழுந்தார். அவரை உடன் சென்றவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கி விட்டார்.

    இதுகுறித்து உடனடியாக கூடங்குளம் கடலோர பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர், மீன்வளத் துறையினர் கடலுக்கு சென்று மீனவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கரையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் பைபர் படகு சென்று கொண்டிருந்தபோது வேகமாக காற்று வீசியது.
    • திருவொற்றியூர் போலீசார் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலில் இளையராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (38). விடியற்காலை 2 மணிக்கு வேலு என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் இளையராஜாவுடன் பட்டு சுரேஷ் சின்னப்பிள்ளை மொத்தம் நான்கு பேர் கடலில் மீன் பிடிக்க புறப்பட்டனர்.

    கரையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் பைபர் படகு சென்று கொண்டிருந்தபோது வேகமாக காற்று வீசியது. இதில் பைபர் படகு நிலை தடுமாறியது. அப்போது எதிர்பாராத விதமாக இளையராஜா கடலுக்குள் தவறி விழுந்தார். உடனே சக மீனவர்கள் அவரை கடலில் இறங்கி தேடிப் பார்த்தனர். அவர் கிடைக்கவில்லை. இதை அடுத்து மூன்று பேரும் கரைக்கு திரும்பினர். தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலில் இளையராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    காயல்பட்டிணத்தில் 2 மீனவர்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆறுமுகநேரி:

    காயல்பட்டிணம் சிங்கித்துறை வடக்குகாலனியை சேர்ந்தவர் சகாயதேவன். இவரது மகன் ஹாலன்ராய் (வயது 16). இவன் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தந்தையுடன் மீன் தொழில் செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ் மகன் ஆகாஷ் (18). மீனவர். 

    நண்பர்கள் இருவரும் சம்பவத்தன்று கடற்கரைக்கு சென்று வருவதாக கூறி சென்றனர். ஆனால் அவர்கள் திரும்பிவரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் நண்பர், உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர்களை பற்றி எந்த தகவலும் இல்லை. 

    இது குறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் எங்கு சென்றார்கள்? அவர்களை யாரும் கடத்தி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன் பிடிக்க சென்ற மீனவர் எதிர்பாராதவிதமாக காணாமல் போன சம்பவம் குறித்து கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.
    சென்னை:

    புதுவண்ணாரப்பேட்டை பூண்டிதங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கடந்த 21-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த 4 மீனவர்களுடன் விசைப்படகில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றார்.

    கடந்த 22-ந் தேதி 15 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ராமலிங்கம் கடலில் தவறி விழுந்தார். படகில் இருந்த மற்ற மீனவர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.

    ராமலிங்கம் கிடைக்காததால் நேற்று இரவு அவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கரை திரும்பினர். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அப்பகுதி மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் உதவியுடன் கடலில் மாயமான ராமலிங்கத்தை தேடிவருகின்றனர். #tamilnews
    ×