search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயம்
    X

    மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயம்

    • கரையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் பைபர் படகு சென்று கொண்டிருந்தபோது வேகமாக காற்று வீசியது.
    • திருவொற்றியூர் போலீசார் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலில் இளையராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (38). விடியற்காலை 2 மணிக்கு வேலு என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் இளையராஜாவுடன் பட்டு சுரேஷ் சின்னப்பிள்ளை மொத்தம் நான்கு பேர் கடலில் மீன் பிடிக்க புறப்பட்டனர்.

    கரையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் பைபர் படகு சென்று கொண்டிருந்தபோது வேகமாக காற்று வீசியது. இதில் பைபர் படகு நிலை தடுமாறியது. அப்போது எதிர்பாராத விதமாக இளையராஜா கடலுக்குள் தவறி விழுந்தார். உடனே சக மீனவர்கள் அவரை கடலில் இறங்கி தேடிப் பார்த்தனர். அவர் கிடைக்கவில்லை. இதை அடுத்து மூன்று பேரும் கரைக்கு திரும்பினர். தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் மற்றும் மீனவர்கள் உதவியுடன் கடலில் இளையராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×