search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்
    X

    கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. மகாத்மா தேசிய ஊரக வளர்ச்சித் திட்டம், பிரதமரின் குடியிருப்பு திட்டம், டெங்கு காய்ச்சல் தடுப்பு, தூய்மை பாரத இயக்கம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சி பொது செலவினம், ஜல் ஜீவன் இயக்கம், சாலை விரிவாக்கம் ஆகிய வளர்ச்சி பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார், ஊர் முக்கியஸ்தர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா, ஊராட்சி உறுப்பினர்கள் பொன்னையா, மகாலட்சுமி, சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×