search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனையபுரத்தில் கிராம சபை கூட்டம்: அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு- கலெக்டர் பழனி உறுதி
    X

    பனையபுரத்தில் கிராம சபை கூட்டம்: அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு- கலெக்டர் பழனி உறுதி

    • கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி தீர்மானங்களை படித்தார்.
    • மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றியம் பனையபுரத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபா கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் சங்கீத அரசிரவி துரை முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவி காந்த ரூபி வரவேற்றார்.கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி தீர்மானங்களை படித்தார். மக்கள் குறைகளை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் பழனி பேசியதாவது,

    இக்கிராமத்தில் வசிக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு ,வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க ஆணை , கிராமத்தி்ல் பிளாஸ்டிக் முழுமையாக ஒழிக்கப்பட்டு ,பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் .இவ்வாறு கலெக்டர் பேசினார்

    இதில் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் ஜோதி , மாவட்ட ஊராட்சிகள் இயக்குனர் பொன்னம்பலம், நேர்முக உதவியாளர் லட்சாதிபதி, தாசில்தார் யுவராஜ் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி ,முபாரக் அலி பேக், வேளாண்மை உதவி இயக்குனர் கங்காகவுரி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், ஒன்றிய பொறியாளர் இளையராஜா, கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ், துணைத் தலைவர் கலா, ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி ராமராவ், கஸ்தூரி பாண்டியன், கண்காணிப்பு குழு எத்திராசன், கல்வி மேலாண்மை குழு ராஜசேகர்,கணேசன் புகழேந்தி ,வேல்முருகன், மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

    மேல்மலையனூர்

    மேல்மலையனூர் அருகே தேப்பிரம்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் கண்மணிநெடுஞ்செழியன் தலைமைக தாங்கி பேசினார். இதில் வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கன், சரவணக்குமார் மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன்,செல்வி ராம சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×