பாமக மாநாடு நடைபெறும் பூம்புகார் பகுதியில் கனமழை பெய்து வருவதால் தொண்டர்கள் அவதி

பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மனைவி சரஸ்வதியுடன் வந்தடைந்தார். மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது
பாமக மாநாடு நடைபெறும் பூம்புகார் பகுதியில் கனமழை பெய்து வருவதால் தொண்டர்கள் அவதி
Published on

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது

மாநாட்டிற்கு தலைமை தாங்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மனைவி சரஸ்வதியுடன் வந்தடைந்தார்.

இந்த மாநாட்டில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து ஜாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பிரதானமாக அமைய உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

இந்நிலையில், பாமக மாநாடு நடைபெறும் பூம்புகார் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பாமக தொண்டர்கள் அவதியடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com