search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Contract Employees"

    • திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 40 மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள், கலெக்டரிடம் முறையிட்டனர்.
    • தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகத்தில், பணி நிரந்தரம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

    திருப்பூர் :

    மின்வாரியத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள், தொழிலாளர் சட்ட விதிகளின்படி, பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென போராட துவங்கி விட்டனர்.அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 40 மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள், கலெக்டரிடம் இதுகுறித்து முறையிட்டனர்.தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகத்திலும், பணி நிரந்தரம் கோரிவிண்ணப்பித்துள்ளனர்.

    இதையடுத்து தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராக வந்திருந்தனர்.தற்காலிக பணியாளர்கள் -உதவி கமிஷனர் மலர்க்கொடி வந்திருந்தனர். அடுத்த மாதம் 2-ந்தேதி தேதி மாலை 3 மணிக்கு, அசல் ஆவணங்களுடன் ஆஜரானால், பணிநிரந்தரம் கோருவது தொடர்பாக உத்தரவிடப்படும் என உதவி கமிஷனர் அவகாசம் வழங்கியுள்ளார்.

    ×