search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EB"

      சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சியையொட்டி உள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணமாக 1 யூனிட்டுக்கு ரூ. 8 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.

      கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 1 யூனிட்டிற்கு 8 ரூபாயில் இருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவான, மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு புதிய கட்டணம் பொருந்தும்.

      இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பயன்பாட்டுக்கான மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணம் நாளை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வரும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

      • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 28-ந் தேதி முதல் அனைத்து பிரிவு அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தபட்டு தீவிர மாக நடைபெற்று வருகிறது.
      • மேலும் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் பொதுமக்கள் எளிதாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

      நெல்லை:

      தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 28-ந் தேதி முதல் அனைத்து பிரிவு அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தபட்டு தீவிர மாக நடைபெற்று வருகிறது.

      மேலும் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் பொதுமக்கள் எளிதாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

      அதன்படி தியாகராஜ நகரில் உள்ள மத்திய அலுவலகத்திலும், தச்சநல்லூர் மாநகராட்சி வரி வசூல் மையத்திலும், பாளை மண்டல பல்துறை சேவை மையத்திலும், மேலப்பாளையம் பிரிவு இரண்டு மையத்திலும், நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் கீழ ரதி வீதியில் அம்மன் சன்னதி அருகிலும், கோடீஸ்வரன் நகர் ரேசன் கடையிலும், பழைய பேட்டை குற்றால ரோட்டில் கல்யாண மண்டபத்திலும் என 7 இடங்களில் கூடுதலாக சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

      ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்களை மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி இன்று மேலப்பாளையம் பிரிவு- 2 அலுவலகத்திற்கு உட்பட்ட சிறப்பு முகாமை ஆய்வு மேற்கொண்டார்.

      வருகிற 31-ந் தேதிக்குள் வீடு, கைத்தறி, விசைத்தறி, விவசாய, மின் இணைப்பு மின் நுகர்வோர்கள் அனைவரையும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கு தொடர்ந்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

      நெல்லை, தென்காசி மாவட்டத்தில் வீட்டு மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 10,57,163 கைத்தறி மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 862 விசைத்தறி மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 2,090, விவசாய மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 89,480, குடிசை மின் நுகர்வோர்கள் 7,867 என 11,57,465 மின்நுகர்வோரின் எண்ணிக்கை எண்ணிக்கை உள்ளது. இன்று காலை 9 மணி வரை சிறப்பு முகாம்கள் மூலமாகவும் இணைய வழி மூலமாகவும் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைத்த மொத்த மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 5,08,804 (சதவீதம் 43.95) ஆகும்.

      நெல்லை நகர்ப்புறக் கோட்டத்தில் மொத்த மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 2,11,159 ஆகும். இதில் அனைத்து பிரிவு அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் மூலமாகவும் இணைய வழி மூலமாகவும் இன்று காலை 9 மணி வரையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த மின் நுகர்வோர்கள் எண்ணிக்கை 1,00,929 ஆகும். இது 47.8 சதவீதம் ஆகும்.

      வருகிற 31-ந்தேதிக்குள் எஞ்சியுள்ள அனைத்து மின் நுகர்வோர்களையம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை விரைவு படுத்த ஆலோசனை வழங்கினார்.

      ஆய்வின் போது செயற்பொறியாளர் நெல்லை நகர்ப்புற கோட்டம் (பொறுப்பு) வெங்கடேஷ்மணி, உதவி செயற்பொறியாளர் தங்கமுருகன், உதவிமின் பொறியாளர்கள் கார்த்திக், ரத்தினவேணி மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

      • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது.
      • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

      சென்னை:

      தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் ஏராளமானோர் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

      இதற்கிடையே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 2,811 மின் வாரிய அலுவலகங்களில் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது

      இந்தச் சூழலில் இந்த அரசாணையை ரத்துசெய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

      இந்நிலையில், மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது.

      • கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட மேலக்கல்லூர் துணை மின்நிலைத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
      • எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

      கல்லிடைக்குறிச்சி:

      கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

      கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட மேலக்கல்லூர் துணை மின்நிலைத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மேலக்கல்லூர், சேரன்மகாதேவி,சுத்தமல்லி,சங்கன்திரடு, கொண்டாநகரம்,நடுக்கல்லூர், பழவூர்,கருங்காடு,திருப்பணிகரிசல்குளம்,துலக்கர்குளம்,வெள்ளாங்குளம் ,உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • மாமல்லபுரம் அருகே நள்ளிரவு புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
      • புயல் தாக்கும் மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

      சென்னை:

      தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று நள்ளிரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

      இன்று மாலை நிலவரப்படி சென்னையில் இருந்து தெற்கு, தென்கிழக்கு திசையில் 170 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து தென் கிழக்கே 135 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. புயலின் வேகம் 13 கிலோ மீட்டரிலிருந்து 14 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

      இதுதொடர்பாக தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி செய்தியாளர் கூறியதாவது:-

      மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும். மின் கம்பங்கள், ஜேசிபி இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் மட்டும் மின் தடை செய்ய வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

      • சங்கரன்கோவில் கோட்டத்தில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு‌ மின்சார வாரியம் இந்த ஏற்பாடை செய்துள்ளது.
      • வருங்காலத்தில் மின்சாரம் சம்பந்தமாக மின்சார வாரியத்திலிருந்து அனுப்பப்படும் அனைத்து குறுஞ்செய்திகளும் உங்களது தொலைபேசி எண்ணிற்கு வருவதற்கு இது வழிவகை செய்யும்.

      நெல்லை:

      நெல்லை மின் பகிர்மான கூட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

      தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் சங்கரன்கோவில் கோட்டத்தில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு‌ மின்சார வாரியம் சார்பில் பொது மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அவசரகால முகாமில் சங்கரன்கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் தொலைபேசி எண்ணை அவசரகால முகாமில் வைக்கப்பட்டுள்ள இந்த பரிசு பெட்டியில் செலுத்தினால் குலுக்கல் முறையில் முதல் 10 நபர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும்.

      மேலும் தங்களது தொலைபேசி எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக் கொள்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

      ஏனென்றால் தங்கள் இடம் மாறி இருந்தாலும் சொந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து இருந்தாலும் இதன் மூலம் வருங்காலத்தில் மின்சாரம் சம்பந்தமாக மின்சார வாரியத்திலிருந்து அனுப்பப்படும் அனைத்து குறுஞ்செய்திகளும் உங்களது தொலைபேசி எண்ணிற்கு வருவதற்கு இது வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • இந்தியாவிலேயே முதன்முறையாக மின் நுகர்வோர்கள் நேரடியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகமான சென்னையில் அமைக்கப்பட்ட மின் நுகர்வோர் சேவை மையம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
      • இதற்காக மின்னகம் என்ற பெயரில் தொலைபேசி எண் 94987 94987 அறிவிக்கப்பட்டது.

      நெல்லை:

      தமிழக மின்சார துறையின் சீரிய முயற்சியால் இந்தியாவிலேயே முதன்முறையாக மின் நுகர்வோர்கள் நேரடியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகமான சென்னையில் அமைக்கப்பட்ட மின் நுகர்வோர் சேவை மையம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

      இதற்காக மின்னகம் என்ற பெயரில் தொலைபேசி எண் 94987 94987 அறிவிக்கப்பட்டது.

      அதில் நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் மின்தடை குறை கேட்கும் மையத்தின் இளநிலை மின் பொறியாளராக பணிபுரியும் கோவிந்தராஜ் மின்னகத்திலிருந்து பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டு மின் நுகர்வோர்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்தமைக்காக மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் ராஜன்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

      இந்நிகழ்ச்சியில் நெல்லை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

      • அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
      • மின் நுகா்வோா் கலந்துகொண்டு மின் சம்பந்தமான தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

      தாராபுரம் :

      அவிநாசியில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை 13-ந்தேதி நடைபெற உள்ளது.

      இது குறித்து அவிநாசி கோட்ட செயற்பொறியாளா் விஜயஈஸ்வரன் கூறியதாவது:- அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

      இதில், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கலந்துகொண்டு மின் நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்ய உள்ளாா்.எனவே, இக்கூட்டத்தில் மின் நுகா்வோா் கலந்துகொண்டு மின் சம்பந்தமான தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்றாா்.

      பல்லடம் மின் பகிா்மான வட்டம், தாராபுரம் கோட்டத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை நடைபெறுகிறது.இது குறித்து தாராபுரம் மின் வாரிய செயற்பொறியாளா் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பல்லடம் மின் பகிா்மான வட்டம், தாராபுரம் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் தாராபுரம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.இக்கூட்டத்துக்கு பல்லடம் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தலைமை வகிக்கிறாா்.இதில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

      • திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 40 மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள், கலெக்டரிடம் முறையிட்டனர்.
      • தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகத்தில், பணி நிரந்தரம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

      திருப்பூர் :

      மின்வாரியத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள், தொழிலாளர் சட்ட விதிகளின்படி, பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென போராட துவங்கி விட்டனர்.அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 40 மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள், கலெக்டரிடம் இதுகுறித்து முறையிட்டனர்.தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகத்திலும், பணி நிரந்தரம் கோரிவிண்ணப்பித்துள்ளனர்.

      இதையடுத்து தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராக வந்திருந்தனர்.தற்காலிக பணியாளர்கள் -உதவி கமிஷனர் மலர்க்கொடி வந்திருந்தனர். அடுத்த மாதம் 2-ந்தேதி தேதி மாலை 3 மணிக்கு, அசல் ஆவணங்களுடன் ஆஜரானால், பணிநிரந்தரம் கோருவது தொடர்பாக உத்தரவிடப்படும் என உதவி கமிஷனர் அவகாசம் வழங்கியுள்ளார்.

      • விபத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது.
      • கார் மோதியதால் சேதமடைந்த மின்கம்பம் வளைந்து உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது.

      கயத்தாறு:

      நெல்லை டவுன் முத்தம்மாள் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி ( வயது 30 ). இவர் கோவில்பட்டியில் இருந்து நெல்லைக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

      கயத்தாறு அருகே நாற்கர சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனயில் சிகிச்கைக்காக சேர்த்தனர். கார் மோதியதால் சேதமடைந்த மின்கம்பம் வளைந்து உயர் மின்னழுத்த கம்பிகள் அருந்து சாலையில் விழுந்தது.

      விபத்துக்குறித்து தகவல் அறிந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, தனிப்பிரிவு ஏட்டு பிரித்தீவிராஜ் மற்றும் போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

      மின்வாரிய பணியாளர்களும் விபத்து பகுதிக்கு சென்று துரிதமாக பணிகளை மேற்கொண்டனர்.

      இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது. 

      • பழுடைந்த மின்கம்பங்களை முன்னுரிமை கொடுத்து மாற்றி அமைக்க வேண்டும்.
      • யூரியா 2 ஆயிரத்து 281 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 766 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3 ஆயிரத்து 736 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 460 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.

      திருப்பூர் :

      திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர். மொத்தம் 194 மனுக்கள் அளிக்கப்பட்டன.

      கூட்டத்தில் கலெக்டர் வினீத் பேசும்போது, நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 2 ஆயிரத்து 281 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 766 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3 ஆயிரத்து 736 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 460 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என்று கடந்த கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி கூறப்படடது. ஆனால் மின்கம்பங்களை மாற்றாமல் உள்ளனர். ஒதுக்கீடு செய்யப்படும் மின்கம்பங்களை வேறு பணிக்கு வழங்காமல் பழுடைந்த மின்கம்பங்களை முன்னுரிமை கொடுத்து மாற்றி அமைக்க வேண்டும். இதில் தீவிர கவனம் செலுத்தி அடுத்து வரும் கூட்டத்தில் அனைத்து விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றார்.

      கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸி, இணை இயக்குனர் (வேளாண்மை) சின்னசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனிக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

      • பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதயம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
      • கருவலூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

      திருப்பூர் :

      தெற்கு அவினாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழக்கு பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகர், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவினாசிபாளையம், வடக்கு அவினாசிபாளையம் ஒரு பகுதி, அலகுமலை ஒரு பகுதி மற்றும் உகாயனூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

      இதுபோல் அவினாசியை அடுத்த கருவலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை இந்த துைண மின்நிலையத்தில் மின்சாரம் நிறுததம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாைளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

      இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

      ×