என் மலர்
இந்தியா

ஆபரேசன் சிந்தூர் குறித்து சர்ச்சை கருத்து- அரியானா பேராசிரியருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
- இந்த தாக்குதலுக்கு ஆபரேசன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டது.
அரியானாவின் அசோகா பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருபவர் அலிகான் முகமது மக்முதா பாத்.
இவர் இந்திய ராணுவத்தின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டார்.
அவரது கருத்து இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி போலீசார் அவரை மே 18 அன்று கைது செய்தனர்.
இந்நிலையில், கைது நடவடிக்கையை எதிர்த்து அரியானா பல்கலைக்ககழக பேராசிரியர் அலிகான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலிகானுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து சோனேபட் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 27 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Next Story






