search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமிக்கு  பாலியல் தொல்லை: -  முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
    X

    கோப்புபடம். 

    சிறுமிக்கு பாலியல் தொல்லை: - முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

    • கடந்த 2021 ம் ஆண்டு, ஜூன் மாதம் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
    • விசாரணை நடத்திய காவல் துறையினா் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    திருப்பூா்:

    திருப்பூரை அடுத்த பல்லடத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து விரைவு மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

    திருப்பூா் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வடுகபாளையம்புதூரை சோ்ந்தவா் ஆா்.குமாா் (வயது 66), இவா் கடந்த 2021 ம் ஆண்டு, ஜூன் மாதம் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோா் பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினா் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    இந்த வழக்கின் மீதான விசாரணை திருப்பூா் விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில் குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானாா்.

    Next Story
    ×