என் மலர்
நீங்கள் தேடியது "young man arrested"
- கள்ளக்காதலியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வாலிபரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள மாலப்பட்டி அன்னை காமாட்சி நகரைச் சேர்ந்த முருகேசன் மனைவி செல்வராணி (வயது 45). கணவர் இறந்து விட்டதால் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவருக்கு தனபால் (25), சண்முகசுந்தரம் (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தனபாலுக்கு திருமணமாகி கோவையில் தனியாக வசித்து வருகிறார். சண்முக சுந்தரம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் செல்வ ராணிக்கும் குமரன் திருநகரைச் சேர்ந்த பிரபு (44) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் ஒன்றாகவே வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபரம் செல்வராணியின் மகன்களுக்கு தெரிய வரவே அவர்கள் கண்டித்துள்ளனர்.
இதனால் பிரபுவின் தொடர்பை செல்வராணி துண்டிக்க நினைத்தார். அதன்படி அவருடன் பேசுவதை குறைத்து வந்துள்ளார். கடந்த 2-ந் தேதி இருவரும் ஒரே இடத்துக்கு வேலைக்கு சென்றனர். அப்போது பிரபு தனது காதலிக்கு உணவு வாங்கி வந்துள்ளார். அதனை செல்வராணி சாப்பிட மறுத்தார். ஏன் என்று கேட்டபோது இனிமேல் எனக்கு எதுவும் வாங்கித் தர வேண்டாம். என்னுடன் பேசவும் வேண்டாம் என்று உறுதியாக கூறியுள்ளார்.
இதனால் வேதனை யடைந்த பிரபு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது செல்வராணி அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் தனது வீட்டுக்கு வந்து விட்டார். இதனால் பிரபுவும் வீட்டுக்கு வந்து நீ என்னுடன் பேசாவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
அதற்கு செல்வராணி அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. இனிமேல் என் மகன்கள் சொல்வதை த்தான் நான் கேட்பேன் என்று கூறியுள்ளார். இத னால் ஆத்திரமடைந்த பிரபு நானே சாகப்போகிறேன். நீ மட்டும் எதற்காக உயிரோடு இருக்க வேண்டும் எனக்கூறி அருகில் இருந்த குளவிக் கல்லை அவரது தலையில் போட்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே செல்வராணி பரிதாபமாக உயிரிழந்தார். விஷம் குடித்து ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பிரபு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெ க்டர் அருள்நாராயணன் தலைமையிலான போலீசார் பிரபுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வாலிபர் ஒருவர் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா, போதைக்காளான் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
- வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை நடைபெற்று வருகிறது. போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து இவற்றை கண்காணித்தபோதும் விற்பனையை தடுக்க முடியவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை காளான் தேடி சென்ற வாலிபர்கள் 3 நாட்களாக வனப்பகுதியில் மயங்கி கிடந்தனர். மேலும் கஞ்சா, போதை காளான் விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து சென்று வியாபாரிகளை கைது செய்தனர்.
இந்த நிலையில் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற நாகராஜ் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா, போதைக்காளான் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் இவர் மீது எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார்.
குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். அதன்படி சதீஷ் என்ற நாகராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பெண் தர மறுத்ததால் வாலிபர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
- புகாரின் பேரில் போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி முனிசிபல் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி ஜோதி. இவரது மகளை அதேபகுதியை சேர்ந்த கருப்பையா மகன் கண்ணன்(19) என்பவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டார். அதற்கு ஜோதி பெண் தர மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் சம்பவத்தன்று அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஜோதியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஜோதி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குபதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தார்.
போடி குலாலர்பாளையத்தை சேர்ந்த மணிமாறன் மனைவி பெண்ணிலா(44). இவருக்கும் போடி புதுக்காலனியை சேர்ந்த இளந்தமிழன் என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று அவரது வீட்டிற்கு சென்ற இளந்தமிழன் எங்கே உனது கணவர் என பெண்ணிலாவிடம் கேட்டார்.
அவர் தனக்கு தெரியாது என கூறவே அவரை காலால் உதைத்து தாக்கி கணவரை கொலை செய்யாமல் விடமாட்டேன் என மிரட்டிச்சென்றார். இதுகுறித்து போடி டவுன்போலீசில் கொடுத்த புகாரின்ேபரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தக்காளி வியாபாரம் செய்து வருகிறார்
- வியாபாரியிடம் பணத்தை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
திருச்சி:
திருச்சி கீழ தேவதானம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 50) இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று தக்காளி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் செல்வத்திடம் ரூ. 500 பணத்தை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார். இது குறித்து செல்வம் கோட்டை போலீஸ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்துக்கிடமான ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் பெயர் மோகன்ராஜ் (வயது 23)அதே பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர்தான் செல்வத்திடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றார் என தெரியவந்தது. இதை யடுத்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜ்யை கைது செய்துள்ளனர்.
- தம்பதியை தாக்கி மிரட்டிய வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- புகாரின் பேரில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம்:
கம்பம் அருகே உள்ள 11-வது வார்டு உதயம் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 35). இவரது மனைவி நித்யா (28). இவர்கள் கேரளாவில் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். அவ்வப்போது தங்கள் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.
அந்த சமயங்களில் தாத்தப்பன் குளத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஹரிஹரன் (23) என்பவர் நித்யாவிடம் தவறான முறையில் பேசி வந்துள்ளார். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே அவர்கள் ஹரிஹரனை எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் நித்யாவிடம் ஹரிஹரன் தவறான முறையில் பேசினார். இதனை தட்டிக் கேட்ட அவரது கணவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.
மேலும் பீர் பாட்டிலை உடைத்து அவர்களை குத்த வந்தார். இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே போலீசார் ஹரிஹரனை கைது செய்தனர்.
- குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி பணம் கேட்டு தனது தாயிடம் தகராறு செய்து வந்தார்.
- கோடாரியை எடுத்து எனக்கு பணம் தராத நீ உயிருடன் இருக்க வேண்டாம் எனக்கூறி சரமாரியாக வெட்டினார்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதிலட்சுமி. மகன்கள் விருமாண்டி, மருதுபாண்டி, சிவபாண்டி.
இதில் 2-வது மகனான மருதுபாண்டி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி பணம் கேட்டு தனது தாயிடம் தகராறு செய்து வந்தார். நேற்று காலை மருதுபாண்டி குடிபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஜோதிலட்சுமி மதுகுடிக்காமல் வேலைக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருதுபாண்டி தனது தாயிடம் மேலும் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் தர மறுத்ததுடன் குடிபோதையில் வந்ததையும் கண்டித்துள்ளார். அருகில் இருந்த கோடாரியை எடுத்து எனக்கு பணம் தராத நீ உயிருடன் இருக்க வேண்டாம் எனக்கூறி சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ஜோதிலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்றுதிரண்டு அவரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மருதுபாண்டியை கைது செய்தனர்.
- திருமணத்திற்கு மறுத்த காதலியின் அண்ணனை வெட்டி கொன்றதாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
- போலீசார் அவரை கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஜோதி(27). வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர் தனது தங்கை திருமணத்திற்காக சொந்த ஊர் வந்தார். அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது ஜோதி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். இந்தநிலையில் அதேபகுதியை சேர்ந்த பிரபாகரன்(30) என்பவர் ஜோதியை கொலை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் பிரபாகரனை மடக்கிபிடித்து கைது செய்தனர். போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
ஜோதியின் தங்கையும், தேங்காய் வெட்டும் தொழிலாளியான நானும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனைதொடர்ந்து ஜோதி தனது தங்கைக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வருகிற 5-ந்தேதி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது.
இந்த நிலையில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த ஜோதியை சந்தித்து பேசினேன். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்து வெட்டி கொலை செய்தேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவத்தால் திருமணம் நின்றுவிட்டது. இதனால் இருவீட்டாரும் கடும் சோகத்தில் உள்ளனர்.
- 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி கற்பழித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- பாதிக்கப்பட்ட சிறுமியை காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டிையச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 24). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.
பின்னர் அவரை தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். இந்த விபரம் அவரது பெற்றோருக்கு தெரியவரவே மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகார் தெரிவித்தனர்.
குழந்தை பாதுகாப்பு அதிகாரி ஷியாமளா இது குறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கருப்பையா மீது போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியை காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- படியில் நின்று இடையூறு ஏற்படுத்தியவரை தட்டி கேட்டதால் கண்டக்டரை வாலிபர் சரமாரியாக தாக்கினார்.
- கம்பம் வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தேனி அரசு போக்குவரத்து கழக கிளையில் கண்டக்ட ராக வேலைபார்த்து வருகிறார். நேற்று குமுளி யில் இருந்து திண்டுக்கல் செல்லும் பஸ்சில் பணியில் இருந்தார். கம்பம் சிக்னல் அருகே பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தார்.
அப்போது கூடலூர் சுக்காங்கல்பட்டியை சேர்ந்த வசந்த்(25) என்பவர் படியில் நின்று இடையூறு ஏற்படுத்தி கொண்டிருந்தார். அவரை பஸ்சுக்குள் வருமாறு கண்டக்டர் அழைத்துள்ளார். ஆனால் வரமறுத்ததுடன் ஆத்திரமடைந்த வசந்த், கிருஷ்ணமூர்த்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வசந்தை கைது செய்தனர்.
- வெளிமாநிலங்களில் இருந்து மது மொத்தமாக வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கஞ்சா, ரேசன் அரிசி ஆகியவற்றை கடத்தி வருகின்றனர்.
- கர்நாடகா மாநிலத்தில் இருந்து மது கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
குள்ளனம்பட்டி:
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மது பிரியர்கள் அதிகளவில் மதுபானங்களை வாங்கி வைத்து வருகின்றனர். சிலர் வெளிமாநிலங்களில் இருந்து மது மொத்தமாக வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கஞ்சா, ரேசன் அரிசி ஆகியவற்றை கடத்தி வருகின்றனர்.
போலீசார் இவற்றை கண்காணிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைரோடு உள்ளிட்ட முக்கிய ரெயில்நிலையங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிளாட்பாரம், ரெயில்களில் சோதனை நடத்தப்பட்டு பயணிகளின் உடமைகளையும் சோதித்தபின்னரே அனுப்பு கின்றனர்.
பழனி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனையிட்டனர்.
இதில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த மூக்கையா(35) என்பவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மது கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.