search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் கஞ்சா, போதை காளான் விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    கோப்பு படம்

    கொடைக்கானலில் கஞ்சா, போதை காளான் விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

    • வாலிபர் ஒருவர் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா, போதைக்காளான் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை நடைபெற்று வருகிறது. போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து இவற்றை கண்காணித்தபோதும் விற்பனையை தடுக்க முடியவில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை காளான் தேடி சென்ற வாலிபர்கள் 3 நாட்களாக வனப்பகுதியில் மயங்கி கிடந்தனர். மேலும் கஞ்சா, போதை காளான் விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து சென்று வியாபாரிகளை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற நாகராஜ் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா, போதைக்காளான் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் இவர் மீது எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார்.

    குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். அதன்படி சதீஷ் என்ற நாகராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×