என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் அண்ணனை வெட்டி சாய்த்த வாலிபர் பரபரப்பு தகவல்கள்
- திருமணத்திற்கு மறுத்த காதலியின் அண்ணனை வெட்டி கொன்றதாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
- போலீசார் அவரை கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஜோதி(27). வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர் தனது தங்கை திருமணத்திற்காக சொந்த ஊர் வந்தார். அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது ஜோதி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். இந்தநிலையில் அதேபகுதியை சேர்ந்த பிரபாகரன்(30) என்பவர் ஜோதியை கொலை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் பிரபாகரனை மடக்கிபிடித்து கைது செய்தனர். போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
ஜோதியின் தங்கையும், தேங்காய் வெட்டும் தொழிலாளியான நானும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனைதொடர்ந்து ஜோதி தனது தங்கைக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வருகிற 5-ந்தேதி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது.
இந்த நிலையில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த ஜோதியை சந்தித்து பேசினேன். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்து வெட்டி கொலை செய்தேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவத்தால் திருமணம் நின்றுவிட்டது. இதனால் இருவீட்டாரும் கடும் சோகத்தில் உள்ளனர்.