என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகன் கைது
- குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி பணம் கேட்டு தனது தாயிடம் தகராறு செய்து வந்தார்.
- கோடாரியை எடுத்து எனக்கு பணம் தராத நீ உயிருடன் இருக்க வேண்டாம் எனக்கூறி சரமாரியாக வெட்டினார்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதிலட்சுமி. மகன்கள் விருமாண்டி, மருதுபாண்டி, சிவபாண்டி.
இதில் 2-வது மகனான மருதுபாண்டி வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி பணம் கேட்டு தனது தாயிடம் தகராறு செய்து வந்தார். நேற்று காலை மருதுபாண்டி குடிபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது ஜோதிலட்சுமி மதுகுடிக்காமல் வேலைக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருதுபாண்டி தனது தாயிடம் மேலும் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் தர மறுத்ததுடன் குடிபோதையில் வந்ததையும் கண்டித்துள்ளார். அருகில் இருந்த கோடாரியை எடுத்து எனக்கு பணம் தராத நீ உயிருடன் இருக்க வேண்டாம் எனக்கூறி சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ஜோதிலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்றுதிரண்டு அவரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மருதுபாண்டியை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்