search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற வாலிபர் கைது
    X

    கைது செய்யப்பட்ட பிரபு.

    திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற வாலிபர் கைது

    • கள்ளக்காதலியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வாலிபரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள மாலப்பட்டி அன்னை காமாட்சி நகரைச் சேர்ந்த முருகேசன் மனைவி செல்வராணி (வயது 45). கணவர் இறந்து விட்டதால் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவருக்கு தனபால் (25), சண்முகசுந்தரம் (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தனபாலுக்கு திருமணமாகி கோவையில் தனியாக வசித்து வருகிறார். சண்முக சுந்தரம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்நிலையில் செல்வ ராணிக்கும் குமரன் திருநகரைச் சேர்ந்த பிரபு (44) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் ஒன்றாகவே வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபரம் செல்வராணியின் மகன்களுக்கு தெரிய வரவே அவர்கள் கண்டித்துள்ளனர்.

    இதனால் பிரபுவின் தொடர்பை செல்வராணி துண்டிக்க நினைத்தார். அதன்படி அவருடன் பேசுவதை குறைத்து வந்துள்ளார். கடந்த 2-ந் தேதி இருவரும் ஒரே இடத்துக்கு வேலைக்கு சென்றனர். அப்போது பிரபு தனது காதலிக்கு உணவு வாங்கி வந்துள்ளார். அதனை செல்வராணி சாப்பிட மறுத்தார். ஏன் என்று கேட்டபோது இனிமேல் எனக்கு எதுவும் வாங்கித் தர வேண்டாம். என்னுடன் பேசவும் வேண்டாம் என்று உறுதியாக கூறியுள்ளார்.

    இதனால் வேதனை யடைந்த பிரபு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது செல்வராணி அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் தனது வீட்டுக்கு வந்து விட்டார். இதனால் பிரபுவும் வீட்டுக்கு வந்து நீ என்னுடன் பேசாவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

    அதற்கு செல்வராணி அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. இனிமேல் என் மகன்கள் சொல்வதை த்தான் நான் கேட்பேன் என்று கூறியுள்ளார். இத னால் ஆத்திரமடைந்த பிரபு நானே சாகப்போகிறேன். நீ மட்டும் எதற்காக உயிரோடு இருக்க வேண்டும் எனக்கூறி அருகில் இருந்த குளவிக் கல்லை அவரது தலையில் போட்டார்.

    இதில் சம்பவ இடத்திலேயே செல்வராணி பரிதாபமாக உயிரிழந்தார். விஷம் குடித்து ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பிரபு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெ க்டர் அருள்நாராயணன் தலைமையிலான போலீசார் பிரபுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×