என் மலர்
நீங்கள் தேடியது "Ravi Kishan"
- ஜிஎஸ்டி வரி குறைப்பினால் பொருட்களின் விலை 50% குறைத்துள்ளதாக பாஜக எம்.பி. ரவி கிஷன் கூறினார்
- இது 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியின் பரிசு.
ஜிஎஸ்டி 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை அமலுக்கு வந்துள்ளது.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், "ஜிஎஸ்டி வரி குறைப்பினால் பொருட்களின் விலை 50%க்கும் மேல் குறைத்துள்ளதாக பாஜக எம்.பி. ரவி கிஷன் கூறியது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளானது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி கிஷன், "ஜிஎஸ்டி வரி குறைப்பினால் 1 ரூபாய் பொருளின் விலை 40-45 பைசாவாகவும், 100 ரூபாய் பொருளின் விலை 45 ஆகவும் இருக்கும். இது 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியின் பரிசு என்று தெரிவித்தார்.
பாஜக எம்.பி. ரவி கிஷன் பேசிய இந்த இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்துள்ளார். அவரது பதிவில், "ரவி கிஷனுக்கு நிதியமைச்சரிடமிருந்து விரைவில் அழைப்பு வரும். பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பொய் கூறி உலக சாதனை படைத்தது வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.
- அக்னிபாத் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
- ரவி கிஷன் தனது மகள் குறித்த செய்திகளை ட்விட்டரில் பதிவிட்டு வருபவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
பாஜக எம்.பி ரவி கிஷானின் மகள் இஷிதா சுக்லா (21). இவர் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார். பிரபலத்தின் மகளாக இருந்தாலும் வித்தியாசமான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்காக எம்.பி ரவி கிஷானுக்கும், அவரது மகள் இஷிதா சுக்லாவிற்கும் சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அக்னிபாத் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப காலத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கிடையே, ஜூன் 16ம் தேதி அன்று, அக்னிபாத் திட்டத்தின் மூலம் ஆட்சேர்ப்பு செய்வதற்கான வயது வரம்பை 21 ஆண்டுகளில் இருந்து 23 ஆண்டுகளாக மத்திய அரசு நீட்டித்தது.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், ஏராளமான இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக எம்.பி ரவி கிஷானின் மகள் இஷிதா சுக்லாவும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார்.
ரவி கிஷான் தனது மகள் குறித்த செய்திகளை ட்விட்டரில் பதிவிட்டு வருபவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்த மாத தொடக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் லைட் காலாட்படையின் (JAKLI) முதல் பிரிவு அக்னிவீரர்களுக்கு ஸ்ரீநகரில் நடந்த விழாவில் சான்றளிக்கப்பட்டது.

பா.ஜனதா சார்பில் மேலும் 7 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 7 பேரும் உத்தரபிரதேச மாநிலத்துக்கான வேட்பாளர்கள் ஆவர்.
இவர்களில், பிரபல போஜ்புரி மொழி சினிமா நடிகர் ரவிகிஷன், கோரக்பூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இது, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கைவசம் இருந்த தொகுதியாகும். பிரவீன் நிஷாத், சாந்த் கபீர் நகரில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியின் பா.ஜனதா எம்.பி.யாக இருந்த சரத் திரிபாதி, அதே கட்சி எம்.எல்.ஏ.வை ஷூவால் அடித்து சர்ச்சையில் சிக்கியதால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மந்திரி முகுத் பிகாரி, அம்பேத்கர் நகர் தொகுதியில் களம் இறங்குகிறார். இத்துடன் சேர்த்து இதுவரை மொத்தம் 420 வேட்பாளர்களை பா.ஜனதா அறிவித்துள்ளது. #BJP #BhojpuriFilm #RaviKishan







