என் மலர்
இந்தியா

'GST 2.0': ரூ.100 பொருளின் விலை ரூ.45 ஆயிடுச்சு என பேசிய பாஜக எம்.பி. - நெட்டிசன்கள் கிண்டல்
- ஜிஎஸ்டி வரி குறைப்பினால் பொருட்களின் விலை 50% குறைத்துள்ளதாக பாஜக எம்.பி. ரவி கிஷன் கூறினார்
- இது 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியின் பரிசு.
ஜிஎஸ்டி 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை அமலுக்கு வந்துள்ளது.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், "ஜிஎஸ்டி வரி குறைப்பினால் பொருட்களின் விலை 50%க்கும் மேல் குறைத்துள்ளதாக பாஜக எம்.பி. ரவி கிஷன் கூறியது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளானது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி கிஷன், "ஜிஎஸ்டி வரி குறைப்பினால் 1 ரூபாய் பொருளின் விலை 40-45 பைசாவாகவும், 100 ரூபாய் பொருளின் விலை 45 ஆகவும் இருக்கும். இது 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியின் பரிசு என்று தெரிவித்தார்.
பாஜக எம்.பி. ரவி கிஷன் பேசிய இந்த இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்துள்ளார். அவரது பதிவில், "ரவி கிஷனுக்கு நிதியமைச்சரிடமிருந்து விரைவில் அழைப்பு வரும். பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பொய் கூறி உலக சாதனை படைத்தது வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.






