என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uttar Pradesh government"

    • சாதிய பெருமிதம் என்பது தேச விரோதம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது.
    • சாதிய அடையாளங்களை நீக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சாதிய பெருமிதம் என்பது தேச விரோதம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது. ஆகவே சாதிய அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

    அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மாநில அரசு இதற்கான பல்வறு விதிமுறைகளை பிறப்பித்துள்ளது.

    அதாவது உத்தரபிரதேசத்தில் சாதி சார்ந்த ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதிப் பெயர், சாதிய கோஷங்களை வாகனத்தில் ஒட்டினால் அபராதம். விதிக்கப்படும் என்றும் சாதிய அடையாளங்களை பெருமைப்படுத்தும் பலகைகளை கிராமங்களின் பொதுவெளியில் இருந்து அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    காவல்துறையின் நோட்டிஸ் போர்டு மற்றும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சாதி பெயரை குறிப்பிடாமல் சம்பந்தப்பட்ட நபரின் அப்பா பெயரை அடையாளத்திற்கு குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் சாதிய வன்கொமை வழக்குகளில் மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
    • விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.

    இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.

    இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.

    பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.

    இந்நிலையில், எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

    நாய்க்கடி தொடர்பாக புதிய விதிகளை உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ளது. அதில், முதல்முறை ஒரு நாய் மனிதரை கடிக்கும்போது, அது 10 நாட்களுக்கு விலங்குகள் மையத்தில் அடைக்கப்படும். பின் கருத்தடை செய்யப்பட்டு விடுவிக்கப்படும் என்றும் இரண்டாவது முறையாக அதே நாய் யாரையாவது கடித்தால், அது ஆயுட்காலம் முழுவதும் விலங்குகள் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

    நாய் தூண்டுதலின் அடிப்படையில் மனிதர்களை கடித்ததா? அல்ல எந்தவித தூண்டுதலும் இல்லாமல் கடித்ததா? என்பதை கண்டறிய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அக்குழுவில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு விலங்கு நடத்தை நிபுணர் மற்றும் ஒரு நகராட்சி பிரதிநிதி ஆகியோர் இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யாராவது நாயைத் தாக்கத் தூண்டுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், நாயை தத்தெடுப்பவர்கள், அதை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வதாக ஒரு பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நாட்டிலேயே உத்தரபிரதேச மாநிலத்தில் தான் அதிக தொகுதிகள். அங்கு 80 தொகுதிகள் இருப்பதால், நாட்டை ஆளத்துடிக்கும் கட்சிகளின் அதீத பார்வை அந்த மாநிலத்தின் மீது எப்போதுமே விழுகிறது. #ParliamentElection #Election2019
    மோடி அரசின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் நிறைவு பெற இருக்கும் நிலையில், வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிக்கை மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்த பொதுத்தேர்தலை சந்திக்க ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டி வரவேற்க தொடங்கி உள்ளன. நாட்டு மக்களும் பாராளுமன்ற தேர்தலை விவாதத்துக்கு உட்படுத்தி வருகிறார்கள்.

    நாட்டிலேயே உத்தரபிரதேச மாநிலத்தில் தான் அதிக தொகுதிகள். அங்கு 80 தொகுதிகள் இருப்பதால், நாட்டை ஆளத்துடிக்கும் கட்சிகளின் அதீத பார்வை அந்த மாநிலத்தின் மீது எப்போதுமே விழுகிறது. அந்த வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி தொடர்பாக அந்த மாநிலத்தில் ஒரு தெளிவான முடிவு எட்டி இருக்கிறது. இரு துருவங்களாக செயல்பட்டு வந்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி கரம் கோர்த்து விட்டன. இதனால் காங்கிரஸ் தனித்து விடப்பட, கடந்த தேர்தலில் 71 தொகுதிகளை அள்ளி ஆட்சி மகுடம் சூட்டிக்கொண்ட பா.ஜனதாவும் பதறி போய் நிற்கிறது.

    தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், தேவேகவுடா பாணியில் பிரதமர் பதவியை கைப்பற்றுவது அல்லது பெரும்பான்மை பலம் இன்றி யார் ஆட்சியமைத்தாலும் அவர்கள் மீது சவாரி செய்வது தான் மாநில கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் திட்டம்.

    இந்த மாநிலத்தை குறிவைத்து காங்கிரசில் திடீரென பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டு விட்டதை போல வேறு என்ன அதிசயம் நடக்கபோகிறது என்பது எல்லாம் போகப்போக தெரியும்.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 2-வது பெரிய மாநிலம் மராட்டியம். இங்கு 48 தொகுதிகள் உள்ளன. இதனால் இந்த மாநிலத்தையும் தேசிய கட்சிகள் குறிவைக்கின்றன.

    இந்த மாநிலத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளும், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என மாநில கட்சிகளும் கோலோச்சி வருகின்றன.



    கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலின் போது, பா.ஜனதா- சிவசேனா கூட்டணி 42 இடங்களில் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதில் பா.ஜனதா 23 தொகுதிகளை கைப்பற்றி மோடி அரியணை ஏற மராட்டியம் உதவியது.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 6 இடங்களில் மட்டுமே தடம் பதித்தது.

    நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி, தொகுதி உடன்பாடு ஆகியவற்றில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முந்திக்கொண்டுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தையும் முடிந்து விட்டது. இருகட்சிகளும் சரிபாதி தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினிலும் சில தொகுதிகளை சிறிய கட்சிகளுக்கு விட்டு கொடுத்து மகா கூட்டணிக்கும் ஆயத்தமாகி வருகிறது.

    ஆனால் நீண்ட கால நட்பு கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா இடையே கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை. மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா தலைமையிலான அரசில் அங்கம் வகித்து கொண்டு இருக்கும் சிவசேனா, பா.ஜனதாவுடன் கூட்டணிக்கு போக்கு காட்டி வருகிறது.

    அவர்கள் (காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்) கூடி விட்டார்கள், இதனால் நாமும் கூட்டணி அமைத்தே ஆக வேண்டும், இல்லாவிட்டால் தேர்தல் முடிவு எதிர் அணிக்கு சாதகமாகி விடும் என்று பா.ஜனதா கூவி கூவி பார்க்கிறது. சிவசேனாவோ டிமிக்கி கொடுத்து வருகிறது.

    காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்ட நிலையில், பா.ஜனதாவும், சிவசேனாவும் கூட்டணி வைத்தே போட்டியிடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். மராட்டியத்தை பொறுத்தவரை நாங்கள் தான் பெரிய அண்ணன். எனவே எங்களுடன் கூட்டணி பேச பா.ஜனதா தான் முன்வர வேண்டும் என்று சிவசேனா அதிரடியாக அறிவித்து உள்ளது.

    இதுஒருபுறம் இருக்க அரசில் அங்கம் வகித்து கொண்டே மோடிக்கு எதிராக பேசுவதையும் சிவசேனா நிறுத்தி கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியோ பா.ஜனதா அரசு மீது ரபேல் ஊழல் குற்றச்சாட்டு சுமத்த, அதைபோலவே மத்திய அரசின் பயிர்காப்பீட்டு திட்டத்திலும் மகா ஊழல் நடந்து இருப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மக்கள் மத்தியில் பேசி வருகிறார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அவ்வப்போது புகழ்ந்து வந்த சிவசேனா, புதிதாக அரசியலுக்கு வந்த பிரியங்கா காந்தியையும் வரவேற்க தயங்கவில்லை. இதற்காக காங்கிரசுடன் அக்கட்சி கூட்டணி சேரப்போவதும் இல்லை. தேர்தல் கூட்டணி குறித்த சிவசேனாவின் நிலைப்பாடு புதிராக தான் உள்ளது.

    போகப்போகத் தான் தெரியும், பாராளுமன்ற தேர்தலில் நாற்பத்து எட்டு தொகுதிகளை கொண்டுள்ள மராட்டியம் மத்தியில் ஆட்சியமைக்க யாருக்கு உதவும் என்று!.#ParliamentElection #Election2019
    உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் கைப்பை மற்றும் இதர பிளாஸ்டிக் உபயோகப் பொருட்களுக்கு ஜூலை 15 முதல் தடை விதித்து யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார். #UPbansplastic
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முன்னர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெற்றபோது, 40 மைக்ரான்களுக்கு அதிகமான கனத்திலான  பிளாஸ்டிக் கைப்பை மற்றும் இதர பிளாஸ்டிக் உபயோகப் பொருட்களை தயாரிக்கவும், விற்கவும்  தடை விதித்து கடந்த 2015-ம் ஆண்டில் உத்தரவிடப்பட்டது.

    எனினும், இந்த உத்தரவு அங்கு பரிபூரணமாக கடைபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் கைப்பை மற்றும் இதர பிளாஸ்டிக் உபயோகப் பொருட்களுக்கு ஜூலை 15 முதல் தடை விதித்து யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.



    இதுதொடர்பாக, இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டுள்ள பதிவில், ’ஜூலை 15-ம் தேதியில் இருந்து பிளாஸ்டிக் கப்புகள், டம்ளர்கள் ஆகியவற்றை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை அமல்படுத்துவதற்கு பொதுமக்களாகிய நீங்கள் நல்லமுறையில் ஒத்துழைக்க வேண்டும்’ என கேட்டு கொண்டுள்ளார். #UPbansplastic  
    ×