என் மலர்
நீங்கள் தேடியது "Tamannaah Bhatia"
- Do You Wanna Partner தொடரில் தமன்னா மற்றும் டையனா பெண்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாலிவுட் நடிகைகள் தமன்னா பாடியா மற்றும் டையனா பெண்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும், அமேசான் பிரைம் வீடியோவின் புதிய வெப் சீரிஸ் "Do You Wanna Partner" ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெப் தொடர், கரண் ஜோஹர், அதார் பூனாவாலா மற்றும் அபூர்வ மேத்தா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. மேலும் சோமன் மிஸ்ரா மற்றும் ஆர்சித் குமார் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
இந்த சீரிஸ் உலகளாவிய ரீதியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஸ்ட்ரீம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது ஒரு ஹிந்தி காமெடி டிராமா, இரு பெண் நண்பர்கள் – ஆண் ஆதிக்கம் செலுத்தும் பீர் தயாரிக்கும் மதுபான துறையில் தங்களுக்கே உரிய ஸ்டார்ட்அப்பை உருவாக்க முயலும் பயணத்தை மையமாகக் கொண்டது.
இத்தொடரை உருவாக்கியவர்கள் கோங்கோபாத்யாய் & நிஷாந்த் நாயக் மற்றும் இயக்கியவர் காலின் டி'குன்ஹா
முக்கிய நடிகர்களானஜாவேத் ஜாஃப்ரி, நகுல் மேத்தா, நீரஜ் கபி, ஷ்வேதா திவாரி, சுஃபி மோட்டிவாலா, ரன்விஜய் சிங்கா இதில் நடித்துள்ளனர்.
இரண்டு பெண் நண்பிகளின் சுவாரஸ்யமான தொழில் பயணத்தை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளுடன் கலந்த "Do You Wanna Partner" சீரிஸ், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
- மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா நியமனம்
- 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெயிட் 2 மற்றும் ஒடேலா 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமன்னா கடைசியாக தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
இந்நிலையில் பிரபல சோப் நிறுவனமான மைசூர் சேண்டல் நடிகை தமன்னாவை அவர்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதற்கு இதை கன்னட மக்கள் கடும் எதிர்த்து தெரிவித்து, " ஏன் கன்னட திரையுலகில் திறமைக்கு பஞ்சமா?உள்ளூர் நடிகையை நியமிக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அம்மாநில அமைச்சர் எம்.பி பாட்டில் " சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே இந்த முடிவு" என தெரிவித்தார்.
இந்நிலையில், மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடித்த நடிகை தமன்னாவுக்கு 2 வருடங்களுக்கு ரூ.6.20 கோடியை ஊதியமாக வழங்கியுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் சுனில் குமார் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது.
மேலும், கடந்த 2 ஆண்டுகளில் மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்திற்காக மட்டும் 48 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
- தமிழ், தெலுங்கு சினிமாவில் இருபது ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா பாட்டியா,
- இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் இருபது ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா பாட்டியா, தன் தொடக்க காலத்திலிருந்து ஒப்பந்தங்களில் 'நோ-கிஸ்' என்ற விதிமுறையை கடைபிடித்து வந்தவர். அதாவது அவர் நடிக்கும் எந்த படங்களிலும் முத்த காட்சிகள் இடம் பெற்றிருக்காது. அப்படி இருந்தாலும் அவர் நடிக்க மாட்டேன் என்ற ஒப்பந்துத்துடன் தான் படத்தில் கமிட்டாவார்.
ஆனால், கடந்த 2023 ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸின் லஸ்ட் ஸ்டோரிஸ் வலைத் தொடர் மூலம் அந்த விதிமுறையை முறித்தார்.. அதில் அவர் முத்த மற்றும் நெருக்கமான காட்சிகளில் ஈடுப்பட்டிருப்பார்.
அதை தொடர்ந்து வந்த சில வெப் தொடர்களிலும் தொடர்ச்சியாக செக்ஸியான காட்சிகளில் நடித்தார். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
சமீபத்தில், ஹிந்தி நிகழ்ச்சி லல்லன்டாப் பேசிய தமன்னா, "நான் நடிகையாக சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டதால், சவாலான கதாபாத்திரங்களை, வலுவான படங்களை தவறவிட்டேன் என்ற உணர்வு வந்தது. அந்த காரணத்தால் தான் எனக்கு நான் விதித்துக் கொண்ட 'நோ-கிஸ்'கண்டிஷனை உடைக்க முடிவு செய்தேன்" என்று கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது இப்படிப்பட்ட செக்ஸி மற்றும் அந்தரங்க காட்சிகள் அனைத்தும் 100% போலியானவை, முழுவதும் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை படப்பிடிப்பில் intimacy coach இருப்பார், அவர் நடிகர்களுக்கு எந்த இடங்களைத் தொடக்கூடாது என முன்கூட்டியே விளக்குவார். அவர் கூறியது படி தான் நடிப்போம், நாங்கள் அனைத்தையும் படக்குழுவினர் இடையே ஒரு நடனம் ஆடுவது போல் பயிற்சியாளர் சொன்ன ஸ்டெப்சை பின்பற்றுவோம்" என்று தமன்னா கூறினார்.
இப்போது, தமன்னா தனது ரசிகர்களிடம் "கதையின் தேவைக்கேற்ப, நம்பகத்தன்மையுடன் நடித்தால் தான் உண்மையான நடிகை என நினைக்கிறேன்" எனும் வலுவான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்."
- இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயிலர் 2 முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்றது.
படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா இணைந்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் தமன்னா "காவாலா" என்ற பாடலுக்கு சிறப்பு நடனமாடிருப்பார். அப்பாடல் மிகப்பெரிய வைரலானது. அதேப்போல் ஜெயிலர் 2 படத்திலும் சிறப்பு கேமியோ ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
- மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா நியமனம்
- 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெயிட் 2 மற்றும் ஒடேலா 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமன்னா கடைசியாக தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
இந்நிலையில் பிரபல சோப் நிறுவனமான மைசூர் சேண்டல் நடிகை தமன்னாவை அவர்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதற்கு இதை கன்னட மக்கள் கடும் எதிர்த்து தெரிவித்து, " ஏன் கன்னட திரையுலகில் திறமைக்கு பஞ்சமா?உள்ளூர் நடிகையை நியமிக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அம்மாநில அமைச்சர் எம்.பி பாட்டில் " சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே இந்த முடிவு" என தெரிவித்தார்.
இந்நிலையில், கர்நாடக அரசின் மைசூர் சாண்டல் சோப் பிராண்ட் அம்பாசிடராக ரூ.6.2 கோடிக்கு நடிகை தமன்னா நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் எம்.பியும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திவ்யா ஸ்பந்தனா தனது இன்சாட்க்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "ஒரு பொருள் தரமானதாக இருந்தால் அது தானாகவே விற்பனையாகும். மைசூர் சாண்டல் சோப்பு வளமான பாரம்பரியம் மற்றும் நிலையான தரத்தை கொண்டது.
இந்த சோப்பு ஏற்கனவே வாடிக்கையாளர் மத்தியில் பெரும் புகழையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. ஒரு பொருளை சந்தைப்படுத்த எண்ணிலடங்கா வழிகள் உள்ளன. ஒவ்வொரு கன்னடரும் மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடர் தான்" என்று பதிவிட்டுள்ளார்.
- . இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெயிட் 2 மற்றும் ஒடேலா 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- பிரபல சோப் நிறுவனமான மைசூர் சேண்டல் நடிகை தமன்னாவை அவர்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தனர்.
தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெயிட் 2 மற்றும் ஒடேலா 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமன்னா கடைசியாக தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

இந்நிலையில் பிரபல சோப் நிறுவனமான மைசூர் சேண்டல் நடிகை தமன்னாவை அவர்களது விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு தமன்னாவிற்கு 6.2 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இதை கன்னட மக்கள் எதிர்த்து " ஏன் கன்னட திரையுலகில் திறமைக்கு பஞ்சமா?உள்ளூர் நடிகையை நியமிக்காதது ஏன்?" என கேள்வி கேட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக அம்மாநில அமைச்சர் எம்.பி பாட்டில் " சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே இந்த முடிவு" என கூறியுள்ளார்.
- தமன்னா தற்போது ஒடேலா 2 என்ற படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தமன்னா தற்போது ஒடேலா 2 என்ற படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திரைப்படத்தின் 4 நாள் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் 8.88 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் இன்னும் அதிக வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- மும்பையில் உள்ள பாபுல்நாத் சிவன் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.
- இப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார்.
தமன்னா தற்போது ஒடேலா 2 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ஒடேலா 2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது . இப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரெய்லரில் இடம் பெற்றுள்ள ''நாம் நிற்பதற்கு தேவை பூமிமாதா, நாம் வாழ்வதற்கு தேவை கோமாதா; இதில் நீங்கள் வாழ கோமாதாவை கொல்ல வேண்டும் என்றில்லை, அதன் சிறுநீரை விற்றுகூட வாழலாம்" என்ற வசனம் பேசுபொருளாகியுள்ளது.
ஒடேலா 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு மும்பையில் உள்ள பாபுல்நாத் சிவன் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம் செய்தார்.
- இப்படி சீரிசாக மாறும் என நினைக்கவே இல்லை.
- இந்தப் படத்தை செய்யலாம் என நான் நினைத்ததே இல்லை.
அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்கியுள்ள படம் அரண்மனை 4. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சுந்தர் சி, "அரண்மனை இப்போது நான்காம் பாகத்துடன் வந்துள்ளேன், முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி சீரிசாக மாறும் என நினைக்கவே இல்லை. அரண்மனை 3 படத்திற்கு கிடைத்த வெற்றி தான் இப்படம் உருவாக காரணம்."

"எப்போதும் நான் பணத்திற்காக இந்தப் படத்தை செய்யலாம் என நான் நினைத்ததே இல்லை. ஒரு நல்ல கதை, ஐடியா கிடைத்ததால் மட்டும் தான் படத்தை துவக்கினேன். இப்படத்திற்கும் ஒரு அட்டகாசமான ஐடியா கிடைத்தது."
"நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் வட இந்தியாவைப் பிடித்த அளவு, அசாம் பக்கம் பிரம்மபுத்திராவை தாண்டிப் போகவில்லை. அது ஏன் எனக் கேட்டு ஆராய்ந்தால், பாக் எனும் ஆவிகளின் சக்தி பற்றிய சுவாரஸ்யமான விஷயம் சிக்கியது. அதை வைத்து, மிக சுவாரஸ்யமான கதையை அரண்மனை 4 இல் செய்துள்ளோம்," என்று தெரிவித்தார்.
அரண்மனை படத்தின் நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திரக்கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் சுந்தர் சி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, கே.ஜி.எஃப். ராம், VTV கணேஷ், சேசு, ஜேபி, டெல்லி கணேஷ், சந்தோஷ் குமார், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி உட்பட பலர் நடித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருகிறார்.
- ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை தமன்னா வித்தியாசமான ஆடை அணிந்து வந்தார்.
பிரபல நடிகை தமன்னா, தற்பொழுது அதிக அளவில் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை அவர் காதலித்து வருகிறார்.

ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள இந்த காதல் ஜோடி, அண்மையில் தான், தங்களது இருதலை காதல் குறித்து அறிவித்தனர். அதன்பிறகு அவ்வப்பொழுது இந்த ஜோடி வெளிநாட்டிற்கு டேட்டிங் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தமன்னாவிற்கும், விஜய் வர்மாவிற்கும் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் தொடர்ச்சியாக நடிகை தமன்னா திரைப்படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் சுந்தர் சி-யின் அரண்மனை திரைப்படத்தின் நான்காம் பாகத்தில் அவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த சூழலில் வித்தியாசமான ஆடை அணிந்து மணமகளைப் போல் காட்சி அளித்தார் நடிகை தமன்னா.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு என கவர்ச்சி நடிகைகள் தனியாக இருந்தனர்.
- ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சமந்தா இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய திரை உலகில் ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு என கவர்ச்சி நடிகைகள் தனியாக இருந்தனர். தமிழ் திரை உலகில் அனுராதா, டிஸ்கோ சாந்தி, சில்க் சுமிதா மேலும் சில நடிகைகள் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
வருடங்கள் செல்ல செல்ல கதாநாயகிகளே ஒரு பாடலுக்கு நடனம் ஆடத் தொடங்கியதால் கவர்ச்சி நடிகைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு, ஒரு பாடலுக்கு என்று தனியாக நடனமாடும் நடிகைகளே திரை உலகில் இப்போது இல்லை.
அந்த வகையில் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிரபல கதாநாயகிகளே ஒரு பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். இதற்காக அவர்கள் கோடிக்கணக்கில் சம்பளத்தை பெற்று வருகின்றனர். திரை உலகில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சமந்தா இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு நடிகைகள் வாங்கும் சம்பளம் வருமாறு:-
சமந்தா:- ரூ 5 கோடி.
தீபிகா படுகோனே:-ரூ.2 முதல் ரூ.3 கோடி.
கத்ரீனா கைப்:- ரூ.2 முதல் ரூ.3 கோடி
தமன்னா:- ரூ.3 கோடி
மலைக்கா அரோரா:-ரூ.1முதல் ரூ.1.5 கோடி.
சன்னி லியோன்:- ரூ.1 முதல் ரூ. 1.5 கோடி.
இவ்வாறு ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகைகளின் சம்பள விபரம் வெளியாகி உள்ளது.
- ஃபேர்பிளே செயலிக்கான விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார்.
- அமலாக்கத்துறை இயக்குநரகம் நடிகை தமன்னாவுக்கு 2 ஆவது முறையாக சம்மன் அனுப்பியது.
ஐபிஎல் போட்டிகளை ஃபேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பிய வழக்கில், அச்செயலியின் விளம்பர தூதரான நடிகை தமன்னாவிடம் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ஃபேர்பிளே என்பது மகாதேவ் ஆன்லைன் கேமிங் செயலியின் துணை செயலியாகும். இது கிரிக்கெட் போன்ற பல்வேறு நேரடி விளையாட்டுகளில் சட்டவிரோதமாக பெட்டிங் செய்வதற்கான செயலியாகும். மகாதேவ் ஆன்லைன் செயலியை துபாயைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் உருவாக்கினர்.
இந்த செயலி மீது கடந்தாண்டு பண மோசடி வழக்குப் பதியப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ஓராண்டாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஃபேர்பிளே செயலிக்கான விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை தமன்னா கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை ஃபேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பு செய்ய உதவியதால், தங்கள் நிறுவனத்திற்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாகாம் நிறுவனம் புகார் அளித்தது.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நடிகை தமன்னாவுக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர்.
இந்நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் அமலாக்கத்துறை இயக்குநரகம் நடிகை தமன்னாவுக்கு 2 ஆவது முறையாக சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து இன்று மதியம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜரான தமன்னாவிடம் அதிகாரிகள் 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். ஆனாலும் விசாரணை விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






