என் மலர்
நீங்கள் தேடியது "லஸ்ட் ஸ்டோரீஸ் 2"
- தமிழ், தெலுங்கு சினிமாவில் இருபது ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா பாட்டியா,
- இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் இருபது ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா பாட்டியா, தன் தொடக்க காலத்திலிருந்து ஒப்பந்தங்களில் 'நோ-கிஸ்' என்ற விதிமுறையை கடைபிடித்து வந்தவர். அதாவது அவர் நடிக்கும் எந்த படங்களிலும் முத்த காட்சிகள் இடம் பெற்றிருக்காது. அப்படி இருந்தாலும் அவர் நடிக்க மாட்டேன் என்ற ஒப்பந்துத்துடன் தான் படத்தில் கமிட்டாவார்.
ஆனால், கடந்த 2023 ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸின் லஸ்ட் ஸ்டோரிஸ் வலைத் தொடர் மூலம் அந்த விதிமுறையை முறித்தார்.. அதில் அவர் முத்த மற்றும் நெருக்கமான காட்சிகளில் ஈடுப்பட்டிருப்பார்.
அதை தொடர்ந்து வந்த சில வெப் தொடர்களிலும் தொடர்ச்சியாக செக்ஸியான காட்சிகளில் நடித்தார். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
சமீபத்தில், ஹிந்தி நிகழ்ச்சி லல்லன்டாப் பேசிய தமன்னா, "நான் நடிகையாக சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டதால், சவாலான கதாபாத்திரங்களை, வலுவான படங்களை தவறவிட்டேன் என்ற உணர்வு வந்தது. அந்த காரணத்தால் தான் எனக்கு நான் விதித்துக் கொண்ட 'நோ-கிஸ்'கண்டிஷனை உடைக்க முடிவு செய்தேன்" என்று கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது இப்படிப்பட்ட செக்ஸி மற்றும் அந்தரங்க காட்சிகள் அனைத்தும் 100% போலியானவை, முழுவதும் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை படப்பிடிப்பில் intimacy coach இருப்பார், அவர் நடிகர்களுக்கு எந்த இடங்களைத் தொடக்கூடாது என முன்கூட்டியே விளக்குவார். அவர் கூறியது படி தான் நடிப்போம், நாங்கள் அனைத்தையும் படக்குழுவினர் இடையே ஒரு நடனம் ஆடுவது போல் பயிற்சியாளர் சொன்ன ஸ்டெப்சை பின்பற்றுவோம்" என்று தமன்னா கூறினார்.
இப்போது, தமன்னா தனது ரசிகர்களிடம் "கதையின் தேவைக்கேற்ப, நம்பகத்தன்மையுடன் நடித்தால் தான் உண்மையான நடிகை என நினைக்கிறேன்" எனும் வலுவான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- தமன்னா நடித்த அரண்மனை-4 படம் பெரிய வெற்றியை பெற்று ரூ.100 கோடி வசூலையும் குவித்தது.
- லஸ்ட் ஸ்டோரீஸ்-2 படத்தின் விருந்தில் தமன்னாவிடம் காதலை கேட்டேன்.
தமிழ், இந்தி, தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா நடித்த அரண்மனை-4 படம் பெரிய வெற்றியை பெற்று ரூ.100 கோடி வசூலையும் குவித்தது.
தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ்-2 என்ற வெப் தொடரில் நடித்த போது சக நடிகரான விஜய்வர்மாவுடன் காதல் உருவானது. இந்த தொடரில் படுக்கையறை காட்சிகளில் இருவரும் நெருக்கமாக நடித்திருந்தனர்.

தொடர்ந்து தமன்னாவும், விஜய் வர்மாகவும் பல்வேறு இடங்களில் டேட்டிங் செய்து வந்த நிலையில் கடந்த மாதம் தங்கள் காதலை உறுதி செய்தனர். தமன்னாவுடனான காதல் பற்றி விஜய் வர்மா கூறியதாவது:-

காமக்கதைகளுக்கு பிறகு எங்கள் உறவு தொடங்கியது. முதலில் நாங்கள் சக நடிகராக சந்தித்தோம். லஸ்ட் ஸ்டோரீஸ்-2 படத்தின் விருந்தில் தமன்னாவிடம் காதலை கேட்டேன். 2005-ம் ஆண்டு நான் ஐதராபாத்தில் இருந்து வெளியேறி மும்பை வந்தேன். தமன்னா மும்பையில் இருந்து ஐதராபாத் வந்தார். ஐதராபாத்தில் நிலை நிறுத்திய மும்பை பெண். நான் ஐதராபாத் பையன். தமன்னா தமிழ், தெலுங்கு சரளமாக பேசுகிறார் என்றார். திருமணம் குறித்து தமன்னா கூறும்போது, "திருமணம் ஒரு பெரிய பொறுப்பு. அது ஒரு விருந்து அல்ல" என கூறினார்.






