search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivaji"

    • ஒரு பாடலை முதலில் பாடிவிட்டு அதற்கேற்ற மாதிரி வாயசைத்து நடிக்க வைப்பது பழக்கம்.
    • டி.எம்.எஸ். பாடும் போது இது சிவாஜி பாட்டு, இது எம்.ஜி.ஆர். பாடல் என்று நம்மால் சொல்லிவிட முடிகிறது.

    டி.எம்.சவுந்திரராஜன், "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" பாடலுக்காக மூச்சிரைப்புடன் கூடிய குரலுக்காக, ஒலிப்பதிவுக் கூடத்தை சுற்றிவிட்டு வந்து மூச்சிரைத்துக் கொண்டே பாடியதைப் பற்றி பார்த்தோம்.

    டி.எம்.சவுந்திரராஜன் தான் பாட வேண்டுமென எம்.எஸ்.வி. பிடிவாதமாக நின்ற பாடலும் ஒன்று உண்டு!

    'கௌரவம்' என்ற திரைப்படம். 'வியட்நாம் வீடு' சுந்தரம் இயக்கி சிவாஜி கணேசன் இரு வேடங்களில் நடித்த படம்! படத் தலைப்பைப் பார்த்தாலே கதை புரியும். பாரிஸ்டர் பட்டம் வாங்கிய பெரியப்பா சிவாஜிக்கு வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட, வளர்த்த மகனின் (சிவாஜி) வெற்றியையும் விட, தன் கவுரவம் தான் முக்கியம் என நினைப்பவர். ஒரு கொலை வழக்கில் நேருக்கு நேர் எதிராக வழக்கில் வாதாட வேண்டிய சூழ்நிலை வருகிறது. எதிராக வழக்காடப் போகிறேன் என்று மகன் சொன்னவுடனே அவரை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி விடுகிறார் பெரியப்பா சிவாஜி, மிகவும் உணர்ச்சி மயமான சூழலில் வரும் பாடல் தான்,

    "பாலூட்டி வளர்த்தக் கிளி,

    பழம் கொடுத்து

    பார்த்தக் கிளி, நான் வளர்த்தப்

    பச்சைக்கிளி

    நாளை வரும் கச்சேரிக்கு" என்ற பாடல்!!

    கவியரசரின் வரிகள் பாரிஸ்டரின் ஒட்டுமொத்த வாழ்க்கை வரலாற்றையும், குணத்தையும் சொல்லிவிடும்! அதுதான் கவியரசருக்குக் கைவந்த கலை ஆனதே!


    இந்த பாடல் அசரீரி குரலாக வரவுள்ளதாக சொல்லப்பட்டு, இந்த பாடலை எம்.எஸ். வி. தன் குரலில் பாடி பதிவு ஆனது. பாடலை கேட்டுப் பார்த்த சிவாஜி, அசரீரி குரலாக வருவதை விட வாயசைத்துப் பாடினால் தான் நன்றாகயிருக்கும் என்று சொல்லி வாயசைத்து நடித்து விட்டார். படத்திற்கு ரி.ரிகார்டிங் இசை அமைப்பதற்கு முன் பார்த்த எம்.எஸ்.வி., "அசரீரி இல்லாமல் சிவாஜி அண்ணன் நேரடியாக பாடுவதாக காட்சி இருக்கும் இதற்கு என் குரல் வேண்டாம். டி.எம்.எஸ். தான் பின்னணி பாட வைக்க வேண்டும். இல்லைன்னா பொருத்தமா இருக்காது" என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார்.

    வெளியூர் போயிருந்த டி.எம்.எஸ். வந்தவுடன், இந்த பாடலை கற்றுக் கொடுத்து சிவாஜி நடித்ததையும் போட்டுக் காட்டி டி.எம்.எஸ். சை பாட வைத்தார் எம்.எஸ்.வி.

    ஒரு பாடலை முதலில் பாடிவிட்டு அதற்கேற்ற மாதிரி வாயசைத்து நடிக்க வைப்பது பழக்கம். ஆனால் காட்சி எடுத்து விட்ட பிறகு அதற்கேற்ற மாதிரி பாடல் பாட வைப்பது மிக சவாலானது. ஒவ்வொரு சொல்லும் எடுக்குமிடமும், முடிக்குமிடமும் காட்சிக்குப் பொருத்த வேண்டும். பாடல் சம்பந்தப்பட்ட சிவாஜி, எம்.எஸ்.வி., டி.எம்.எஸ். எல்லோருமே தொழில் பக்தி உடையவர்கள். அவர்கள் அர்ப்பணிப்போடு செய்ததால் தான் அப்பாடல் சிறப்பாக வந்தது.

    மேலும், இதுபோன்ற பாடல்கள் என்றால் டி.எம்.எஸ். தான் என்ற முத்திரை இருக்கும்போது, எம்.எஸ்.வி. பிடிவாதம் பிடித்ததில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது?

    'தெய்வமகன்' படத்தில் வரும் "தெய்வமே, தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே", 'ஞான ஒலி' படத்தில் வரும் "தேவனே என்னைப் பாருங்கள்", "தங்கப் பதக்கம்" படத்தின் "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி", அவ்வளவு ஏன் 1978ல் வந்த 'பைலட் பிரேம் நாத்' படத்தில் வந்த "ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப்?" என்றப் பாடல் வரையிலும் கூட சிவாஜிக்கு டி.எம்.எஸ். கம்பீரமாகவும் கனகச்சிதமாகவும் பாடி முத்திரை பதித்தார் என்பதில் மாற்றுக் கருத்தே நமக்கு இல்லை. இந்தப் பாடல்களை கேட்டாலே சிவாஜி படப் பாடல்கள் என்று படத்தை பார்க்காமலே சொல்லி விடலாம்.

    1959ல் வந்த 'தங்கப் பதுமை' படத்தில் 'இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே' என்ற உற்சாகப் பாடலை டி.எம்.எஸ்.சை பாட வைக்கிறார் எம்.எஸ். வி. இதில் அவரின் குரல் அதிர்வு குறைந்து ஸ்படிகத் தெளிவு குரலில் பாட வைக்கிறார். 'பாகப்பிரிவினை' படத்திலும் 'ஏன் பிறந்தாய் மகனே', 'தாழையாம் பூ முடிச்சு' என்ற பாடலும் குழைவாகவும் தணிந்த குரலிலும் பாட வைக்கிறார். பின்னர் வந்த எல்லா பாடல்களிலும் அதே தொனியில் பாடுகிறார் டி.எம்.எஸ். பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு பட பாடல்கள் சிவாஜிக்கான தொனியில் பொருந்தி பெரும் வரவேற்புப் பெற்றன.

    எம்ஜிஆருக்கு 1957ல் 'மகாதேவி' 'சேவை செய்வதே ஆனந்தம்' பாடலை பாட வைக்கிறார். 1960ல் 'மன்னாதி மன்னன்' படம். அதில் 'கனிய கனிய மழலை பேசும் கண்மணி' என்ற பாடலில் குழைந்து பாட வைத்திருப்பார். அதிர்வு குரலை எம்.ஜி.ஆருக்கும் தவிர்த்து விட்டு, ஸ்படிக தெளிவுக்குரலை கொண்டு வந்துவிட்டார். இந்தப் படத்திலிருந்து எம்.ஜி.ஆருக்கு பாடும் பாடல்களின் தொனி மாறிவிடுகிறது.

    டி.எம். சவுந்தரராஜனிடம் ஒரு பழக்கம் உண்டு. பாடுவதற்கு முன்னால் எந்த நடிகர் பாடுகிறார் என கேட்டுத் தெரிந்துக் கொண்டு அவரவர் குரலுக்கேற்றபடி தன் குரலை மாற்றிக் கொண்டு பாடுவார். அதனால் டி.எம்.எஸ். பாடும் போது இது சிவாஜி பாட்டு, இது எம்.ஜி.ஆர். பாடல் என்று நம்மால் சொல்லிவிட முடிகிறது.

    ஒரு போட்டியில் டி.எம். சவுந்தரராஜன் சொன்னார், சிவாஜிக்கு நாபி கமலத்திலிருந்துப் பாடுவேன். எம்.ஜி.ஆருக்கு மூக்குத் தொண்டையிலிருந்து குரலெடுத்துப் பாடுவேன்."

    'பாமா விஜயம்' என்ற படத்தில் 'வரவு எட்டணா செலவு பத்தணா' என்ற பாடலில் அப்பா குரலும் மகன்கள் குரல்களும் டி.எம்.எஸ். தான்! பாடும் விதத்தில் வித்தியாசம் காட்டியிருப்பார்.


    'சாந்தி' படத்தில் 'யார் அந்த நிலவு' என்ற பாடல் பற்றி பார்ப்போம். அந்தக் காலத்தில் ஆங்கிலேயப் பாப் பாடகரான கிளிப் ரிச்ர்ட் என்பரின் ரசிகர் சிவாஜி. தனக்கும் அது போல் ஒரு பாடல் பாட வேண்டும் என ஆசைப்பட்டார். 'அவர் பாடல் மாதிரி எனக்கு ஒரு டியூன் போட்டு தரணும்' என்று எம். எஸ். வியிடம் கேட்க, அவரும் சரியென சொல்லிவிட்டார். கவியரசரை வைத்து பாடல் எழுதி அட்டகாசமான ஒரு ட்யூன் போட்டு டி.எம்.எஸ்ஸை பாட வைத்து ஒலிப்பதிவும் செய்தாகிவிட்டது. படப்பிடிப்புக்கு முன் சிவாஜிக்கு பாட்டு போட்டுக் காட்டப்பட்டது. பாட்டை கேட்ட சிவாஜி படப்பிடிப்பை இரண்டு நாட்கள் தள்ளி வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.

    இரண்டு நாள் கழித்து போய் சிவாஜியைக் கேட்டபோது," இன்னும் இரண்டு நாள் தள்ளி வையுங்கள்" என்று சொல்கிறார். இயக்குனர் பீம்சிங், என்ன பாட்டுப் பிடிக்கலையா? வேறு ட்யூன் போட சொல்லவா? என்கிறார்.

    'நான், விசுவை கேட்ட மாதிரி பிரமாதமான டியூன் போட்டு விட்டார். கவியரசர் என்னமா எழுதியிருக்கார்! டி.எம்.எஸ். என்னம்மா பாடிட்டார். இவர்கள் மூன்று பேரைதாண்டி நான் இந்தக் காட்சியில தெரியணும்னா நான் எப்படியெல்லாம் நடிக்கணும்னு யோசிச்சேன். அதனால் தான் நேரம் எடுத்துக் கொண்டேன்", என்றார் சிவாஜி. நடிப்புக்கென்றே பிறந்தவரின் தொழில் பக்தி!!

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்


    அந்தக் காட்சியில் சிவாஜி ஊதி தள்ளி விட்டார். உண்மையிலேயே ஒயிலாக சிகரெட் பிடித்தபடி பாடும் அழகு புதுமையாக இருக்கும்!

    'பாவ மன்னிப்பு' என்ற படம். ஏ.வி.மெய்யப்ப செட்டியார் இந்தப் படத்துக்கு இசையமைக்கும் படி விஸ்வநாதன்- ராமமூர்த்தியை அழைக்கிறார். மொத்தம் எட்டு பாடல்கள். ஒன்று கிராமியம், ஒன்று மேற்கத்தியம், ஒன்று இந்துஸ்தானி, மெலடி என்று பல விதங்களில் பாடல்கள் தந்து விட்டார்கள். மெய்யப்ப செட்டியார், என் விருப்பத்துக்கு ஒரு பாடல் தாருங்கள் என்று சொல்லி வந்த பாடல் தான் "சாய வேட்டி தலையிலேக் கட்டி" என்ற பாடல்!

    மெய்யப்ப செட்டியார் இந்தப் படத்தை வைத்து பொதுமக்களின் ரசனையை கணிக்க எண்ணினார். அதனால் ஒரு போட்டியை அறிவித்தார். பாடல்களை பிடித்த வகையில் வரிசைப்படுத்த வேண்டும் என்பதுதான். அந்தப் போட்டியில் கடிதங்கள் மூட்டை மூட்டையாக குவிந்ததாம். பெரும்பாலோர் "சாய வேட்டி தலையில் கட்டி" என்ற பாடலை கடைசியாக பட்டியலிட்டு இருந்தார்களாம். பொதுமக்களின் ரசனை உணர்ந்து அதற்கு ஏற்ற பாடல்கள் வழங்குவதில் மெல்லிசை மன்னர்கள். இவர்களின் திறனை தெரிந்து கொண்டார், மெய்யப்ப செட்டியார்.

    "அத்தான் என்னத்தான்" என்ற பாடலை கேட்ட லதா மங்கஷ்கர், "இப்படிப்பட்ட பாடல் எனக்கு கிடைத்தால் நான் பம்பாயிலிருந்து சென்னை வந்து பாடித்தந்து விட்டு போகத்தயார்" என்று சொன்னாராம்.

    "அத்தான் என்னத்தான்" பாடல் பற்றி பி.சுசீலா நினைவு கூறுவது அதைவிட சுவாரசியமானது.

    நாளைக்கு, "ஒரு பாடல் ஒலிப்பதிவு இருக்குமா வந்திருங்க" என்று எம்.எஸ்.வி. சொல்ல,

    "எனக்கு, குரல் சரியில்லை, ஜலதோஷம் மாதிரி இருக்கு. லேசான காய்ச்சல்" என்று பி.சுசிலா சொல்ல,

    "அப்படியா, இந்தப் பாட்டுக்கு அந்த குரல் தான் வேண்டும். நீங்க வந்து பாடுங்க" என்று சொன்னாராம் எம்.எஸ்.வி. அந்த பாடல் இன்னும் நமது காதுகளில் ரிங்கரித்துக் கொண்டே இருக்கிறது!!

    வடக்கத்திய திரையுலகத்தினர் பலரும் எம்.எஸ்.வியின் இசையமைப்பை கவனித்து வந்தனர். குறிப்பாக நவ்ஷத் அலி என்ற இசை அமைப்பாளர்.

    கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் எம்.எஸ்.வி. வேலைக்கு சேர்ந்ததிலிருந்தே நவ்ஷத் அலி இசையின் மீது ஈர்ப்பாக இருந்தார். அவரது இசையில் வந்த இந்தி பாடல்களை கேட்டு விடுவார். அவரது உள்ளம் கவர்ந்த இசையமைப்பாளரை தனது குரு இடத்தில் வைத்து மதித்தது மட்டுமல்லாமல், எப்படியோ நவுஷத்தின் முகவரியை வாங்கி விட்டார். அவருடைய ஒவ்வொரு படப் பாடல்களைப் பற்றியும் நுட்பமாக ரசித்து அதைப் பாராட்டி யாரையாவது உருது தெரிந்தவர்களை பிடித்து கடிதங்கள் எழுத வைத்து அனுப்புவாராம். அப்படி ஒரு மகா ரசிகன் எம்.எஸ்.வி.

    நவ்ஷத் அலியும் இவரது நுட்பமான ரசனையை கவனித்து நன்றி தெரிவித்து தவறாமல் பதில் கடிதம் எழுதுவாராம்.

    கோப்பெருஞ்சோழன் பிசிராந்தயார் நட்பு போல பார்க்காமலே ஒருவரயோருவர் நட்பும் மதிப்பும் பாராட்டிய அன்பு, அவர்களுக்கு இடையே இருந்த அன்பு! கற்றோரை கற்றோரே காமுருவர் என்பது போல ஒரு ஆகச் சிறந்த கலைஞனை இன்னொரு ஆகச் சிறந்த கலைஞன் இனம் கண்டு கொண்டு, அதனால் வந்த அன்பு, பாசம்!!

    இவர்களின் நட்பை தென்னிய திரையுலகமும், வட இந்திய திரையுலகமும் ஒன்று சேர்த்து கண்டு ரசித்த நெகிழ்வும் நடந்தது. அது என்ன? அடுத்த தொடரில் பார்ப்போம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாம்பு பைப்லைனுக்குள் புகுந்து கொண்டதால் மக்கள், அதனுள் நீரை செலுத்தினர்
    • பாம்பின் வாய் மீது தன் வாயை வைத்து அதுல் பலமாக ஊதினார்

    மத்திய பிரதேச மாநிலத்தின் நர்மதா நதிக்கரையை அடுத்து உள்ள நகரம் நர்மதாபுரம்.

    நர்மதாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் ஒரு பாம்பு நுழைந்தது. அது அப்பகுதியில் உள்ள பைப்லைன் ஒன்றில் நுழைந்து விட்டதால், அதனை விரட்ட அங்குள்ள குடியிருப்புவாசிகள் முயன்றனர். ஆனால், உள்ளே சென்ற பாம்பு வெளியே வராததால், பூச்சிகொல்லி மருந்தை நீரில் கலந்து அந்த பைப்லைனில் உள்ளே செலுத்தினர்.

    இதில் மயங்கிய அந்த பாம்பு உள்ளேயே சுருண்டு கிடந்தது. இதை கண்டு செய்வதறியாது திகைத்த மக்கள் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதுல் சர்மா (Atul Sharma) எனும் கான்ஸ்டபிள் அங்கு விரைந்து வந்தார். அவர் அந்த பாம்பின் நிலையை சிறிது நேரம் கூர்ந்து கவனித்தார்.

    பிறகு மெதுவாக அதை கையில் பிடித்து அதன் வாயில் தன் வாயை வைத்து வேகமாக ஊதினார். அவ்வப்போது நீரையும் அதன் மேல் தெளித்தார். சுற்றி நின்று அவரது நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கும் போதே அந்த பாம்பு மெதுவாக நகர ஆரம்பித்தது. விஷத்தன்மையற்றதாக கூறப்படும் அந்த பாம்பு, சிறிது நேரத்தில் அங்கிருந்து ஊர்ந்து சென்றது.

    இதை கண்ட அப்பகுதி மக்கள் அதுல் சர்மாவை மிகவும் பாராட்டினர்.

    இது குறித்து பேசும் போது, இந்த வித்தையை "டிஸ்கவரி" சேனலை பார்த்து கற்று கொண்டதாகவும், இது போல் எண்ணற்ற பாம்புகளை தாம் காப்பாற்றியுள்ளதாகவும், அதுல் தெரிவித்தார்.

    அதுல் இவ்வாறு கூறினாலும், கால்நடை மருத்துவர்கள் அவர் கடைபிடித்த "சிபிஆர்" (Cardiopulmonary Resucitation) எனப்படும் இந்த முறையில் பாம்பை உயிர் பெற செய்ய முடியாது என்றும் இச்சம்பவத்தில் அப்பாம்பிற்கு தானாகவே நினைவு திரும்பியிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2007ல் வெளிவந்த "சிவாஜி" திரைப்படத்தில் இந்த சிகிச்சை முறையை கையாண்டு நடிகர் ரகுவரன் உயிர் மீட்கும் காட்சிகள் பிரபலமாக பேசப்பட்டது. சில நாட்களுக்கு முன் ஒரு குரங்கு இதே முறையில் காப்பாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

    தற்போது அதுலின் இந்த நடவடிக்கை அங்குள்ளவர்களால் படமாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் சிவாஜி.
    • இப்படம் 2007-ஆம் ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.

    இயக்குனர் சங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா சரண், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2007-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் 'சிவாஜி'. இந்த படம் அந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

    ஏ.வி.எம் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்த 'சிவாஜி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக ஏ.வி.எம். புரொடக்‌ஷன் கடந்த 13-ஆம் தேதி முதல் சமூக வலைதளப்பக்கத்தில் 'சிவாஜி' திரைப்படத்தின் சுவாரஸ்யமான பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது.

     இந்நிலையில், 15 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக இயக்குனர் சங்கர் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். மேலும், சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சிவாஜியின் பேரனும் நடிகருமான விக்ரம் பிரபு, சிவாஜியுடன் என்னை ஒப்பிடாதீர்கள் என்று கூறியிருக்கிறார். #VikramPrabhu #Sivaji
    60 வயது மாநிறம் படத்தின் வெற்றிக்கு பிறகு அதிரடி போலீசாக விக்ரம் பிரபு நடிக்கும் படம் துப்பாக்கி முனை. இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார்.

    கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இந்த படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கி உள்ளார். பொதுவாகவே வாரிசாக சினிமாவுக்குள் நுழைபவர்களுக்கு சினிமாவில் அழுத்தம் அதிகமாக இருக்கும்.

    சிவாஜி குடும்பத்தில் இருந்து வந்திருப்பதால் விக்ரம் பிரபுவுக்கு அதிகமாகவே இருக்கிறதாம். இதுபற்றி அவர் கூறும்போது, ‘எனக்கான பாதையை நானே உருவாக்கிக் கொண்டு இருக்கிறேன். அதுவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. 



    ஏன்னா, எது பண்ணாலும் இப்போலாம் கம்பேர் பண்றாங்க. ‘துப்பாக்கி முனை’ படத்துக்கும் ‘தங்கப்பதக்கம்‘ படத்துக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கான்னு என்கிட்டயே கேட்குறாங்க. சிவாஜியோட நடிப்பை யாராலும் கொண்டு வரமுடியாது. அவர் வேற, நான் வேற’ என்று கூறி இருக்கிறார்.
    சிவாஜி, வாணி ஸ்ரீ, பாலாஜி, சிஐடி சகுந்தலா நடிப்பில் வெளியான ‘வசந்த மாளிகை’ திரைப்படம் மீண்டும் புதிய பரிமாணத்தில் வெளியாக இருக்கிறது. #Sivaji #VasanthaMaligai
    சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் ‘வசந்த மாளிகை’ திரைப்படம். பாலாஜி, சி.ஐ.டி.சகுந்தலா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடிய படமிது.

    இதில் கே.வி.மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய, மயக்கம் என்ன..., கலைமகள் கைபொருளே..., இரண்டு மனம் வேண்டும்..., ஏன் ஏன் ஏன்... ஆகிய பாடல்களை டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் பாடி இன்றளவும் சூப்பர் ஹிட்டாக வலம் வந்து கொண்டே இருக்கிறது.



    இந்த படத்தை அன்று டி.ராமாநாயுடு தயாரிக்க பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். இப்படம் வி.சி.குகநாதன் மேற்பார்வையில் டிஜிட்டல், ஒலி, ஒளி அமைப்புகளை சீராக்கி, கலர் சரிபார்த்து, புதிய பரிமாணத்தில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக திரையரங்குகளில் வெளியிட உள்ளது.
    சிவாஜியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு, நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் நன்றி தெரிவித்து உள்ளனர். #SivajiGanesan
    எங்கள் குடும்பத்தின் கோரிக்கை என்பதைவிட தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இது. தமிழர்களின் வீடுகளில் ஒரு அப்பாவாக, ஒரு தாத்தாவாக, ஒரு அண்ணனாக குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்துகொண்டு இருக்க கூடியவர் எங்கள் தந்தை.

    அந்த வகையில் தமிழக ரசிகர்கள் சார்பாக இந்த அறிவிப்புக்கு முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர், செய்தித்துறை அமைச்சர் கட்ம்பூர்ராஜு உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார் பிரபு.

    தமிழ் சினிமாவின் அடையாளங்களில் முக்கியமானவர் சிவாஜி அவர்கள். காலத்தால் அவரது புகழ் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இதற்காக முயற்சி எடுத்த தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், செய்தித்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று விஷால் கூறியுள்ளார்.
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ் சினிமாவில் நடிப்பின் களஞ்சியமாக போற்றப்பட்டு வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.



    மேலும், பழம்பெரும் அரசியல்வாதியான ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளான செப்டம்பர் 16-ம் தேதியும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    ராமசாமி படையாச்சி, தமிழகத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் என்பதும், திண்டிவனம் மக்களவை தொகுதியில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #TNAssembly
    ×