search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sankar"

    • கமல் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

    கமல்ஹாசன் விக்ரம் படத்துக்கு பிறகு தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச்234' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கமல் ஜோடியாக நடிக்க திரிஷா பெயர் அடிபட்டது. ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் திரிஷா நடித்து இருந்தார். எனவே திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.


    மணிரத்னம் - கமல்
    மணிரத்னம் - கமல்

    இந்நிலையில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசனுடன் நயன்தாரா நடிப்பது உறுதியானல் இதன் மூலம் நயன்தாரா முதல் முறையாக கமலுடன் இணைவார். 


    கமல் - நயன்தாரா
    கமல் - நயன்தாரா

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.
    • இவ்விழாவில் ரஜினி மற்றும் கமல் சிற்ப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

    மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.


    பொன்னியின் செல்வன்

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் சங்கர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது, "முதன் முதலாக மணிரத்னம் சார் 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கப் போகிறார் என்று கூறியதும் மிகவும் ஆர்வமாக இருந்தது.

    மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனா அருமையாக இருக்கிறதே என்று நினைத்தேன். படம் எப்ப வரும் என்று மிகவும் எதிர்பார்த்து இருந்தேன். இறுதியில் விரைவில் வரவுள்ளது. தமிழ் சினிமா ரசிகனா, மணிரத்னம் சார் ரசிகனா 'பொன்னியின் செல்வன்' பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்" என்று கூறினார்.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'இந்தியன்-2'.
    • இந்தியன் 2 படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவுள்ளது.

    கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் சங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர்.

    இயக்குனர் சங்கர், நடிகர் ராம் சரண் நடிப்பில் புதிய படம் ஒன்றை தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு "ஆர்.சி.15" என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து சமீபத்தில் 'இந்தியன்-2' படப்பிடிப்பு மீண்டும் பூஜையுடன் தொடங்கியது.


    ஆர்.சி.15 - இந்தியன் 2

    இந்நிலையில், இயக்குனர் சங்கர் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "ஆர்.சி.15 மற்றும் இந்தியன் 2 படப்பிடிப்பு ஒரே நேரத்தில் நடைபெறும். ஆர்.சி.15 படத்தின் அடுத்த கட்டப்படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் 'இந்தியன் 2'.
    • இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கவுள்ளது.

    இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் இயக்கப் போவதாக ஷங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது.

    பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. 'விக்ரம்' பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்' என தெரிவித்திருந்தார். சமீபத்தில் இப்படத்தில் மீண்டும் நடிப்பதை நடிகை காஜல் அகர்வால் உறுதிப்படுத்தினார்.


    இந்தியன் 2

    இந்நிலையில், இன்று (17-08-2022) இயக்குனர் சங்கர் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நடிகர் கமல்ஹாசன், ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அதில், "'இந்தியன்' என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் சங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    இந்தியன் 2

    இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் சங்கர், "நிச்சயமாக 'இந்தியரே'. என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து மிக்க நன்றி கமல்ஹாசன் சார்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்து வரும் படம் ‘ராம் சரண் 15’.
    • கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் -2 திரைப்படத்தை சங்கர் இயக்கவுள்ளார்.

    நடிகர் அர்ஜூன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ஜெண்டில் மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சங்கர். தொடர்ந்து இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது நடிகர் ராம் சரண் நடிப்பில் 'ராம் சரண் 15' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார்.

    இந்த படத்தின் நிறைவிற்கு பிறகு இயக்குனர் சங்கர், கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் -2 திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சங்கர் கனவு படத்தின் ஹீரோக்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


    ஹிரித்திக் ரோஷன் - ராம் சரண்

    அதாவது, நீருக்கடியில் அறிவியல் கலந்த ஒரு படத்தை இயக்குவது என்பது சங்கரின் கனவு. அதன்படி, இயக்குனர் சங்கர் தனது கனவு படத்தை ரூ.1000 கோடி பட்ஜெட்டில் இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் இந்த படத்தில் ஹிரித்திக் ரோஷன் மற்றும் ராம் சரண் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் இப்படம் சர்வதேச அளவில் இந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய பெயரை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் சிவாஜி.
    • இப்படம் 2007-ஆம் ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது.

    இயக்குனர் சங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா சரண், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2007-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் 'சிவாஜி'. இந்த படம் அந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

    ஏ.வி.எம் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்த 'சிவாஜி' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக ஏ.வி.எம். புரொடக்‌ஷன் கடந்த 13-ஆம் தேதி முதல் சமூக வலைதளப்பக்கத்தில் 'சிவாஜி' திரைப்படத்தின் சுவாரஸ்யமான பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது.

     இந்நிலையில், 15 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக இயக்குனர் சங்கர் இன்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். மேலும், சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×