search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CPR"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாம்பு பைப்லைனுக்குள் புகுந்து கொண்டதால் மக்கள், அதனுள் நீரை செலுத்தினர்
    • பாம்பின் வாய் மீது தன் வாயை வைத்து அதுல் பலமாக ஊதினார்

    மத்திய பிரதேச மாநிலத்தின் நர்மதா நதிக்கரையை அடுத்து உள்ள நகரம் நர்மதாபுரம்.

    நர்மதாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் ஒரு பாம்பு நுழைந்தது. அது அப்பகுதியில் உள்ள பைப்லைன் ஒன்றில் நுழைந்து விட்டதால், அதனை விரட்ட அங்குள்ள குடியிருப்புவாசிகள் முயன்றனர். ஆனால், உள்ளே சென்ற பாம்பு வெளியே வராததால், பூச்சிகொல்லி மருந்தை நீரில் கலந்து அந்த பைப்லைனில் உள்ளே செலுத்தினர்.

    இதில் மயங்கிய அந்த பாம்பு உள்ளேயே சுருண்டு கிடந்தது. இதை கண்டு செய்வதறியாது திகைத்த மக்கள் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதுல் சர்மா (Atul Sharma) எனும் கான்ஸ்டபிள் அங்கு விரைந்து வந்தார். அவர் அந்த பாம்பின் நிலையை சிறிது நேரம் கூர்ந்து கவனித்தார்.

    பிறகு மெதுவாக அதை கையில் பிடித்து அதன் வாயில் தன் வாயை வைத்து வேகமாக ஊதினார். அவ்வப்போது நீரையும் அதன் மேல் தெளித்தார். சுற்றி நின்று அவரது நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கும் போதே அந்த பாம்பு மெதுவாக நகர ஆரம்பித்தது. விஷத்தன்மையற்றதாக கூறப்படும் அந்த பாம்பு, சிறிது நேரத்தில் அங்கிருந்து ஊர்ந்து சென்றது.

    இதை கண்ட அப்பகுதி மக்கள் அதுல் சர்மாவை மிகவும் பாராட்டினர்.

    இது குறித்து பேசும் போது, இந்த வித்தையை "டிஸ்கவரி" சேனலை பார்த்து கற்று கொண்டதாகவும், இது போல் எண்ணற்ற பாம்புகளை தாம் காப்பாற்றியுள்ளதாகவும், அதுல் தெரிவித்தார்.

    அதுல் இவ்வாறு கூறினாலும், கால்நடை மருத்துவர்கள் அவர் கடைபிடித்த "சிபிஆர்" (Cardiopulmonary Resucitation) எனப்படும் இந்த முறையில் பாம்பை உயிர் பெற செய்ய முடியாது என்றும் இச்சம்பவத்தில் அப்பாம்பிற்கு தானாகவே நினைவு திரும்பியிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2007ல் வெளிவந்த "சிவாஜி" திரைப்படத்தில் இந்த சிகிச்சை முறையை கையாண்டு நடிகர் ரகுவரன் உயிர் மீட்கும் காட்சிகள் பிரபலமாக பேசப்பட்டது. சில நாட்களுக்கு முன் ஒரு குரங்கு இதே முறையில் காப்பாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

    தற்போது அதுலின் இந்த நடவடிக்கை அங்குள்ளவர்களால் படமாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×