search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private Milk"

    • தயிர் ஒரு கிலோவுக்கு 8 ரூபாயும் விற்பனை விலையை குறைப்பதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    • தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மற்ற முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் உற்பத்தி மற்றும் விற்பனையை இன்று முதல் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக 3.5 சதவீதம் கொழுப்பு சத்து உள்ள ஆவின் டிலைட் பாலினை அதே விற்பனை விலைக்கு விநியோகம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தமிழகத்தின் முன்னணி தனியார் பால் நிறுவனமான (ஆரோக்யா) ஹட்சன் இன்று முதல் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள அவ்வகை பாலுக்கு லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் ஒரு கிலோவுக்கு 8 ரூபாயும் விற்பனை விலையை குறைப்பதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    தமிழகத்தில் பால் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் பாலுக்கான கொள்முதல் விலை கணிசமாக குறைந்துள்ளதாகவும், அதன் பலனை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் இந்த விற்பனை விலை குறைப்பை அமல்படுத்த இருப்பதாகவும் வருகின்ற தகவலை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் வரவேற்கிறது.

    அதே சமயம் இந்த தருணத்தில் தமிழகத்தில் பால் உற்பத்தி குறைந்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தவறான தகவலை தெரிவித்து வருவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சுட்டிக் காட்ட விரும்புகிறது.

    மேலும் ஹட்சன் நிறுவனத்தின் நிலைப்படுத்தப்பட்ட 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள பால் மற்றும் தயிர் விற்பனை விலை குறைப்பை தொடர்ந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மற்ற முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகள் உற்பத்தி, விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டால் வேறு வழியின்றி பொதுமக்கள் தனியாருக்கு செல்ல இது ஏதுவாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×