என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம்"

    • பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து உள்ளது.
    • கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பால், தயிர் விற்பனை விலையை சொற்ப அளவில் மட்டும் குறைந்திருந்தனர்.

    சென்னை:

    தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பால் கொள்முதலில் எந்த ஒரு விலை உயர்வோ, பால் உற்பத்தியில் பாதிப்போ, தட்டுப்பாடோ இல்லாத சூழலில் தமிழகத்தின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா, பால், தயிர் விற்பனை விலையை நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அந்நிறுவனம் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து உள்ளது.

    அதன்படி நிறை கொழுப்பு பால் 500 மி.லி. பாக்கெட் ரூ.36-ல் இருந்து 37 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.65-ல் இருந்து 67 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மி.லி. பாக்கெட் ரூ.31-ல் இருந்து 32 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.58-ல் இருந்து 60 ஆகவும், 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30-ல் இருந்து 32 ஆகவும், 500 கிராம் தயிர் ரூ.37-ல் இருந்து 38 ஆகவும், 1 கிலோ தயிர் ரூ.66-ல் இருந்து 68 ஆகவும் உயர்த்துவதாகவும் தெரிவித்துள்ளது.

    இது பொதுமக்கள் தலையில் பெரும்பாரத்தை சுமத்தும் செயலாகும் என்பதோடு, இந்த பால், தயிர் விற்பனை விலை உயர்வானது மற்ற தனியார் பால் நிறுவனங்களையும் விற்பனை விலையை உயர்த்த தூண்டுவது போல் ஆரோக்யா நிறுவனத்தின் செயல்பாடுகள் அமைந்து உள்ளது கண்டிக்கத்தக்கதாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பால், தயிர் விற்பனை விலையை சொற்ப அளவில் மட்டும் குறைந்திருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஓராண்டில் பால் கொள்முதல் விலை, மூலப்பொருட்கள், வாகன எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலைகளில் மட்டுமல்ல பால் முகவர்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்திட பால், தயிர் விற்பனைக்கான கமிஷன் தொகையிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாத சூழலில் ஆரோக்யா நிறுவனம் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்துவது என்பது ஏற்புடையதல்ல என்பதால் இந்த விற்பனை விலை உயர்வை ஆரோக்யா நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பால் பொருட்களுக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது.
    • சாமானிய மக்களை பாதிக்கும் பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் கே.எம்.கமாலுதீன் விடுத்துள்ள அறிக்கையில்,

    கடந்த மாதம் நடைபெற்ற 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பால் பொருட்களை 5 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வருவது என ஒன்றிய அரசு முடிவெடுத்தபோது அத்தியாவசிய பால் பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வரக்கூடாது அவ்வாறு கொண்டு வரும்பட்சத்தில் அவற்றின் விற்பனை விலை கடுமையாக உயரும், அதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில் பால் பொருட்களுக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரி நாளை (18-ந்தேதி) முதல் அமலுக்கு வருவதையொட்டி அன்றைய தினமே தயிரின் விலையை அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

    எனவே சாமானிய மக்களை பாதிக்கும் பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×