search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "learning ability"

    • மத்திய கல்வி அமைச்சகத்தால், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக தேசிய சாதனை ஆய்வு தேர்வு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
    • தேர்வு நடத்தி விபரங்களை சேகரிக்க, வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்: 

    3, 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக, எஸ்இஏஎஸ் எனும் திறனறிவு தேர்வு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நாளை (3ந் தேதி) நடத்தப்படுகிறது.

    மத்திய கல்வி அமைச்சகத்தால், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக தேசிய சாதனை ஆய்வு தேர்வு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த, 2022ல் தேர்வு நடந்த நிலையில், நடப்பாண்டுக்கான (2023) தேர்வு 3, 5, 8மற்றும்9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (3ந் தேதி) நடத்தப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் நடக்கவுள்ள தேர்வுக்கான ஒருங்கிணைப்பாளராக முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடத்தி விபரங்களை சேகரிக்க, வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    • இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்.
    • ‘உடற்பயிற்சியை தொடருவது அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்கிறது.

    வயது அதிகரித்தாலும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழவும் ஆசைப்படுகிறார்கள். உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கட்டமைக்க மேற்கொள்ள வேண்டிய பழக்கவழக்கங்களில் உடற்பயிற்சி அத்தியாவசியமானது. உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் நாள்பட்ட நோய்களை தடுக்கும் வல்லமையும் பெற்றது.

    ''உடற்பயிற்சியை தொடருவது அதிகப்படியான மன அழுத்தத்தை குறைக்கிறது என்று நோயாளிகள் அடிக்கடி கூற கேட்டிருக்கிறேன். உடற்பயிற்சி செய்யும்போது மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோனின் செயல்பாடு குறைகிறது. கார்டிசோல் ஹார்மோன் அதிகமானால் இனிப்பு பதார்த்தங்களையும், கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகளையும் சாப்பிட தோன்றும். இன்சுலினின் செயல்பாட்டில் மாற்றம் நிகழும். உடலில் கொழுப்பும் அதிகம் சேரும்'' என்கிறார், அமெரிக்க மருத்துவரும், எழுத்தாளருமான டாக்டர் மார்க் ஹைமன். உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தவறாமல் தினமும் பின்பற்றுவதால் உடலில் நிகழும் மாற்றங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

    இன்சுலின் உணர்திறன்:

    உடற்பயிற்சி செய்யும்போது செல்கள் மற்றும் தசைகளின் செயல்பாடுகள் சீராக நடைபெறும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் இன்சுலின் செயல்பாடும் சுமூகமாக நடைபெற வழிவகுக்கும். அப்படி இன்சுலின் உணர்திறன் சமநிலையில் பராமரிக்கப்படும்போது உடல் பருமன், தொப்பை பிரச்சினையும் எட்டிப்பார்க்காது.

    மூளை ஆரோக்கியம்:

    உடற்பயிற்சியை தொடர்ந்து வந்தால் மூளை சிறப்பாக செயல்படும். நினைவாற்றல், கற்றல் திறன், கவனிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும். உடற்பயிற்சி செய்யும் போது மூளை மேலும் மீள்தன்மை அடையும். அதனால் மனநிலை மேம்படும். உடல் ஆற்றலும் அதிகரிக்கும். உடலிலும், மனதிலும் அழுத்தத்தை குறைக்கவும் வழிவகை செய்யும். மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாத்து மனச்சோர்வு, அல்சைமர் போன்ற மன நலம் சார்ந்த பிரச்சினைகளை விலக்கி வைக்கவும் உதவும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்ற வைத்து முதுமை பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை திறம்பட சமாளிக்க வித்திடும்.

    நாள்பட்ட நோய்கள்:

    உடற்பயிற்சி பல வழிகளில் உடலுக்கு நன்மை சேர்க்கிறது. இதயத்தை பாதுகாக்கிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய், வகை ௨ நீரிழிவு, பக்கவாதம், மார்பக மற்றும் பிற புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன.

    நச்சு நீக்கம்:

    உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் முடியும். கடுமையான உடற்பயிற்சி முறைகளை பின்பற்றும்போது வியர்வை வெளியேறும். அதன் மூலம் நச்சுக்களும் வெளியேறிவிடும். தினசரி உடற்பயிற்சி செய்யும்போது அதிக வியர்வை வெளிப்படவில்லை என்றால் நீராவி பிடிக்கும் பழக்கத்தை பின்பற்றலாம். அதன் மூலம் சருமத்தில் படிந்திருக்கும் நச்சுக்கள், அழுக்குகள் வெளியேறிவிடும்.

    கடினமான உடற்பயிற்சி முறைகளை பின்பற்றமுடியாதவர்கள் இந்த வழக்கத்தை பின்பற்றலாம். மென்மையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் நன்மை பயக்கும். அது ரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கவும், நிணநீர் மண்டலத்தில் உருவாகும் அனைத்து நச்சு திரவங்களைவெளியேற்றவும் உதவி புரியும்.

    • தனி மனித ஒழுக்கம், கற்றல் திறனை மேம்படுத்த உதவும் என ராமநாதபுரம் கலெக்டர் பேசினார்.
    • அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாணவ நல அமைப்பு சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி கூட்ட ரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வி துறையின் மூலம் இணைந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவி களுக்கான மாணவ நல அமைப்பு சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு மாணவ நல அமைப்பு சங்கத்திற்கான இலச்சினை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மாணவ-மாணவிகளை ஒருங்கிணைத்து ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் அவர்களின் அறிவுத்திறனை மேம்பாடுத்துவதற்காக மாணவ நல அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள 293 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ- மாணவிகளை முறையே அந்தந்த வகுப்பில் உள்ள மாணவ- மாணவிகளை 4வகையாக பிரித்து அவர்கள் எளிதில் அறியும் வண்ணம் சிவப்பு, மஞ்சள், பச்சை, ஊதா குழு பிரித்து அவர்களின் செயல்பாடு கள் குறித்து கண்காணிக்கப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதில் மாணவ-மாணவிகளை குழு தலைவராக நியமித்து அவர்களும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள் வார்கள். இக்குழுவில் உள்ள மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும்.

    ஒரு மாணவனின் அன்றாட செயல்பாடு என்பது இக்குழு தொடங்கியதற்கு பின் நல்ல மாற்றத்தை கண்டு அவர்களுடைய வளர்ச்சி ஏற்ற தக்கதாக அமையும். அதுபோல் ஒவ்வொரு நாளும் வகுப்பில் அவர்களுடைய தனிமனித ஒழுக்கம் மற்றும் வகுப்பில் பாட முறைகளை கவனித்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக பாதுகாத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன் நாள்தோறும் புத்தகங்கள் வாசிப்பு திறனை மேம் படுத்துதல், விளையாட்டில் ஆர்வமுள்ள விளை யாட்டுகளை தேர்வு செய்து அதில் பங்கேற்று திறமையே மேம்படுத்துதல். இலக்கிய போட்டிகளில் பங்கேற்றல் என கல்வியுடன் சேர்த்து அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்று திறனை மேம்படுத்துதலே இந்த அமைப்பின் சிறப்பு தன்மையாகும்.

    மேலும் கல்வியில் பின் தங்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளை வழங்கவும் இத்திட்டம் பயனுள்ளதாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ஆசிரியர் பயிற்சி மைய பேராசிரியர் டேவிட், முகவை சங்கமம் செயலாளர் வான்தமிழ் இளம் பரிதி, மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×