search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "diaper"

    • கைக்குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயம்.
    • டென்ஷன் இல்லாமல் பயணம் செய்வதை வாடிக்கையாக்கிகொள்ள வேண்டும்.

    வீட்டில் இருக்கும்போதே கைக்குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயம், அப்படி இருக்கையில் பயணத்தின்போது இன்னும் சவாலாகவே இருக்கும். ரெயில், பேருந்து, கார் என எதில் பயணம் செய்தாலும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது? அவர்களுக்காக அவசியம் எடுத்துச் செல்லவேண்டிய பொருட்கள் என்னென்ன? என்பது பற்றிய எளிய வழிகாட்டுதல் இங்கே...

    கைக்குழந்தையுடன் பயணம் செல்லும்போது எதை கொண்டு செல்ல வேண்டும். எதை விட்டுச்செல்லவேண்டும் என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும். அதனால் எப்போது பயணம் மேற்கொண்டாலும் பொறுமை மிக அவசியம். குழந்தைகளுடனான பயணத்தின்பொது அவசர அவசரமாக கிளம்பாமல் அவர்களுக்குத் தேவையானதை மறக்காமல் எடுத்து வைத்தும் கொண்டு முடிந்த அளவு டென்ஷன் இல்லாமல் பயணம் செய்வதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும்.

    முதலில் குழந்தைகளுக்கு என்று தனியாக ஒரு பை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பையில் பால் பாட்டில், தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு நீங்கள் பால் கொடுப்பதற்கு வசதியாக ஒரு துண்டும், குழந்தைக்கு ஒரு துண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வெந்நீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், சிறிய மற்றும் பெரிய அளவிலான கைக்குட்டைகள், பொம்மைகள், தொப்பி, குடை, டயப்பர் போன்ற அத்தியாவசிய பொருட்களை மறக்காமல் எடுத்து வைப்பது அவசியம். கைக்குழந்தை அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழிக்கக்கூடும் என்பதால் சுத்தம் செய்ய தேவையான பேபி வைப்ஸ் போன்றவற்றையும் கட்டாயம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இது தவிர, வழக்கமான ரெடிமேட் அல்லது துணி டயப்பர்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    சிறியதாக ஒரு மருந்து பெட்டி தயார் செய்து, அதில காய்ச்சல், இருமல், சளி, வாந்தி, பேதியை குறைக்கும் மாத்திரைகளை எப்போதும் போட்டு வைத்திருக்க வேண்டும். சில நேரங்களில் அது உங்களுக்கும் கூட உதவும்.

    சீரற்ற வானிலை மாற்றத்தை சமாளிக்கவும். நம் ஆரோக்கியத்தை காக்கவும், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற சத்துள்ள பழங்களை ஜூஸ் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளலாம். எதிர்பார்க்காத நேரங்களில் குழந்தைகள் அழுகிற நிலைமை உருவாகும். ஆகையால் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டும் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

    கைக்குழந்தையுடன் பயணம் செய்யும்போது எப்போது வேண்டுமானாலும் உதவி தேவைப்படலாம். எனவே, செல்போனை முழுமையாக சார்ஜ் போட்டு வைத்திருக்க வேண்டும். கார், ரெயில் போன்றவற்றில் பயணம் செய்யும்போது மழலையர் பாடல்களை குழந்தைகளுக்கு பாடி காட்டலாம். அதை குழந்தைகளும், விரும்புவார்கள்.

    இதைத்தொடர்ந்து செய்ய உங்களுக்கு இனிமையான குரல் வேண்டும் என்பதில்லை உங்கள் குரலைக் கேப்பது தான் குழந்தையின் விருப்பம், ஆகவே இதுபோன்ற சில விஷயங்கனை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு கைக்குழந்தைகளுடன் உங்களது பயணத்தை இனிதாக தொடரலாம்.

    டயாபர் தேர்வு என்பது சின்ன விஷயமாக தோன்றினாலும், உங்கள் குழந்தையை மிக வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் டயாபரையே சார்ந்திருக்கிறது.














    குழந்தை பிறந்தது முதல் மழலையர் பள்ளி முடித்து, அதன்பின் ஒரு 6 வயது வளரும் வரையிலும் கூட சிறுநீர், மலம் கழிக்க பழக்கப்படுத்துவது பெற்றோரைப் பொறுத்தவரை சற்று சவாலான விஷயம். அதிலும், அடுத்து வர இருக்கும் மழை மற்றும் குளிர்காலங்களில் புதிதாய் குழந்தை பிறந்திருக்கும் தாய்மார்களுக்கோ சற்று கூடுதல் டென்ஷன்.

    தங்கள் வேலையும், தூக்கமும் கெடாமல் இருப்பதற்காகவே பல மணி நேரம் தாங்கும் டிஸ்போசபிள் டயாபரை அம்மாக்கள் உபயோகிக்கத் தொடங்கிவிட்டார்கள். குழந்தை ஈரத்திலேயே ஊறி அலர ஆரம்பித்த பிறகுதான் அதை மாற்றுகிறார்கள். இதனால், எப்போதும் குழந்தை ஈரப்பதத்தோடு இருப்பதால் டயாபரில் கலந்துள்ள ரசாயனம் குழந்தையின் தோலில் பட்டு, புண்களை ஏற்படுத்திவிடுகிறது.

    அம்மாவிற்கு சௌகரியம்தான் இருந்தாலும், குழந்தையின் ஆரோக்கியம் முக்கிமாயிற்றே. தனித்துவமான உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ள உங்களுக்காக டயாபர் தேர்வு செய்வதில் சில டிப்ஸ்கள் இதோ...

    உங்கள் குழந்தையின் வயது மற்றும் எடைக்கேற்ற டயாபரை தேர்ந்தெடுக்கும்போது, அது சரியாகப் பொருந்துவதால் சிறுநீர் கசிவை ஏற்படுத்தாது. இதனால் உங்கள் குழந்தை சௌகரியமாக உணரும்.

    அடிக்கடி சிறுநீர், மலம் கழிக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கான டயாபரை தேர்ந்தெடுக்கும்போது நனையாமல் இருப்பதும், ஈரப்பதமில்லாததாகவும் இருப்பது முக்கியம்.

    குழந்தை கால்களை அசைக்கும்போது இடுப்பு மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் உராய்வு ஏற்படும். குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது என்பதால், சொரசொரப்பான டயாபர்கள் உரசி, அந்த இடங்களில் சிவந்து, தடித்துக் கொண்டு, சிலநேரங்களில் தோலே உரிந்தும் போய்விடும்.

    இதனால் எரிச்சல், வலி உண்டாகும். அதிலும் உங்கள் குழந்தையின் தோல் மிகவும் சென்சிடிவானது என்றால் நிலைமை மேலும் மோசமாகும். இதற்கு உடலோடு பொருந்தக்கூடிய, மெல்லிய பருத்தித் துணியினாலான டயாபர்கள்தான் சிறந்தவை. அவை உராய்வை ஏற்படுத்தாது.

    அதிலும், வெயில் காலங்களில் குழந்தையின் தொடை இடுக்குகளில் வியர்வை அதிகம் சுரந்து உராய்வின் போது கிருமித்தொற்றை ஏற்படுத்தக்கூடும். எந்த பருவத்திற்குமே உராய்வை ஏற்படுத்தாத மென்மையான பருத்தித் துணி சிறந்ததாக இருக்கும்.

    பயணங்களிலும், டே கேரில் விடும்போதும் டிஸ்போசபல் டயாபரை உபயோகிப்பது எளிதாக இருக்கும் என்பதால் அப்போது மட்டும் உபயோகிக்கலாம். இருந்தாலும் குழந்தையின் உடல்நலம் கருதி, பெற்றோர்கள் கூடியவரை காட்டன் துணியால் ஆன டயாபரையேஉபயோகிப்பது நல்லது.

    உங்கள் சௌகரியத்தை மட்டும் பார்க்காமல் உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியையும், சுகத்தையும் தரக்கூடிய சுத்தமான, ஆரோக்கியமான டயாபர்களை தேர்ந்தெடுங்கள். ஏனென்றால் உங்கள் குழந்தைக்கு தரக்கூடிய அனைத்துமே மிகச்சரியானதாக இருக்க வேண்டும்.
    குழந்தைகளுக்கு அதிக நேரம் டயப்பர் போடுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக, கோடைக்காலத்தில் கண்டிப்பாக டயப்பரை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
    குழந்தைகளுக்கு டயப்பரை குறைவான நேரமே பயன்படுத்த வேண்டும். அதுவும் துணி டயப்பர் பயன்படுத்துவதே நல்லது. அதிகபட்சம் மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்குமேல் பயன்படுத்தக்கூடாது. அதிக நேரம் பயன்படுத்துவதால் சிறுநீர், மலம் ஏற்படுத்தும் ஈரப்பதத்தால் குழந்தையின் சருமத்தில் `டயப்பர் டெர்மடிடிஸ்’ (Diaper Dermatitis) எனப்படும் தோல் அலர்ஜி ஏற்படும். இதனால் குழந்தைகளின் பின்புறமும், தொடைப்பகுதிகளும் சிவந்து போகும். அரிப்பும் ஏற்படும், எனவே, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை டயப்பரை மாற்ற வேண்டும்.

    கோடைக்காலத்தில் அதிகநேரம் டயப்பர் பயன்படுத்தினால், அதிகப்படியான வியர்வை, சிறுநீர், மலம் காரணமாக தோல் அரிப்பு, பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும். சருமம் சிவந்தோ, தடித்தோ காணப்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது. தொற்றுகள் ஏற்பட்டுவிட்டால், குளிர்ந்த நீரை துணியில் நனைத்து அப்பகுதிகளில் அடிக்கடி ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஆடைகள் அணிவிக்காமல் காற்றோட்டமாக விடவேண்டும்.

    `டயப்பர் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அப்படிப் பயன்படுத்துவதாக இருந்தால், அரை மணிநேரத்துக்கு ஒருமுறை குழந்தை சிறுநீர், மலம் கழித்திருக்கிறதா? என்பதைச் சோதித்துப்பார்க்க வேண்டும். சிறுநீர் அல்லது மலம் கழித்திருந்தால், உடனடியாக டயப்பரைக் கழற்றி, அந்தப் பகுதிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டால், வேறு நிறுவன டயப்பர்களை மாற்றிப் பயன்படுத்துவது நல்லது



    * குழந்தைகளுக்கு 2 வயது வரை மட்டும் டயப்பர் பயன்படுத்தலாம். கழிவறைகளைப் பயன்படுத்த 2 வயதிலிருந்தே பழக்கப்படுத்த வேண்டும்.

    * வெளியூருக்குச் செல்லும்போது மட்டும் டயப்பர் பயன்படுத்துவது நல்லது.

    * இரவு முழுவதும் ஒரே டயப்பரை பயன்படுத்தக்கூடாது. 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

    * ஒருமுறை பயன்படுத்தி கழற்றிய டயப்பரை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

    * டயப்பரை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

    * குழந்தைகள் விளையாடும் இடங்களில் பழைய டயப்பர்களை வீசாதீர்கள்.

     * இறுக்கமானதாக இல்லாமல், தளர்வான டயப்பர்களைப் பயன்படுத்த வேண்டும்.

    * டயப்பர் அணியாத நேரங்களில், குழந்தையின் உடலை துடைத்து காற்றாட வைத்திருங்கள். 
    ×