search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிமுறை"

    • இந்த பாடலை தினமும் பக்தியுடன் பாடி வந்தால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
    • அதிவீரராம பாண்டியர் என்பவரால் இந்த பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டது.

    கடன் தொல்லை தீர அகத்தியர் பாடல்

    செல்வம்பெருகவும், கடன் தொல்லை தீரவும் உதவும் வகையில் பாடல் ஒன்றை அகத்திய முனிவர் எழுதி இருக்கிறார்.

    இந்த பாடலை தினமும் பக்தியுடன் பாடி வந்தால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

    இதை தனது பாடலிலேயே அகத்தியர் குறிப்பிட்டுள்ளார். கி.பி. 1564 முதல் 1604ம் ஆண்டு வரை தென்பாண்டி நாட்டை ஆண்ட அதிவீரராம பாண்டியர் என்பவரால் இந்த பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

    சிறப்புமிக்க அந்தப்பாடல் வருமாறு:

    மூவுலகும் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த

    பூவை உறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித்

    தேவர் உலகினும் விளங்கும் புகழ்கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும்

    பாவை இருதாள் தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சுகின்றான்.

    கொழுதியிசை அளிமுரலும் தாமரையென் பொகுட்டிலுறை கொள்கைபோல மழையுறழுந் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே!

    முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே! கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங்

    கழிபெருங்காதலில் தொழுவோர் வினைதீர அருள் கொழிக்குங் கமலக்கண்ணாய்!

    கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய

    விமலைபசுங் கழை குழைக்கும் வேனிலான் தனையீன்ற விந்தை தூய

    அழுதகும்ப மலர்க் கரத்தாய் பாற்கடலுள் அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்

    திமிரகன்றிட வொளிருஞ் செஞ்சுடரே என வணக்கம் செய்வான் மன்னோ

    மடற்கமல நறும்பொகுட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன்

    கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாங் காவல் பூண்டான் யடைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும் துடைத்தனன் நின்பெருங்கீர்த்தி எம்மனோரால எடுத்துச் சொல்லற் பாற்றோ

    மல்லல் நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும்

    கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சியோடும்

    வெல் படையில் பகை துரந்து வெஞ்சமரில் வாகை புனை வீரர் தாமும்

    அல்லிமலர் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள் நோக்கம் அடைந்துளாரே!

    செங்கமலப் பொலந்தாதில் திகழ்தொளிரும் எழில் மேனித் திருவே வேலை அங்கண்உல கிருள் துலக்கும் அலர்கதிராய் வெண் மதியாய் அமரர்க்கூட்டும் பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங் கானில் யருப்பில் மண்ணில் எங்குளை நீ அவணன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்பதம்மா!

    • பத்மபுராணம் கூறுகிறது விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று
    • வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி,பச்சை நிறமுடைய பரீதி தேவி

    விஷ்ணுபரிவார சக்திகளில் ஸ்ரீ மஹாலட்சுமி

    பத்மபுராணம் கூறுகிறது விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று புதிதாக இருக்கிறதல்லவா?

    அதில் இரு பரிவார சக்திகள் சற்று வித்தியாசமாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    தகதகக்கும் தங்க நிறம் உடைய ஸ்ரீ தேவி, வெள்ளை நிறமுடைய பூமிதேவி.

    வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி,பச்சை நிறமுடைய பரீதி தேவி,

    சிவப்பு நிறமுடைய கீர்த்தி தேவி, நிறமற்று ஸ்படிகம் போல ஊடுருவும் கண்ணாடித் தன்மையுள்ள சாந்தி தேவி,

    மஞ்சள் நிறமுடைய துஷ்டி தேவி,பச்சை நிறமுடைய புஷ்டி தேவி,

    என்பவர்களே அந்த விஷ்ணுசக்திகள்.

    இவர்கள் எண்மரும் நான்கு திருக்கரங்கள் கொண்டு அவற்றில் மேல் இரு திருக்க்கரங்களில் இரு தாமரை மலர்களும்,

    கீழே வலது கரம் அபயகாஸ்தமாகவும் இடது கரம் வரத காஸ்தமாகவும் அபிநயம் புரியும்படி பரிவார சக்திகளாக அமைந்திருப்பார்கள்.

    • கந்தன் என்பவர் இறால் வளர்ப்பில் முறையான மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார்.
    • தொழில் முனைவோர், இறால் வளர்ப்போர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு மீன்வள பல்கலைக்கழகத்தில் இறால் வளர்ப்பு சிறந்த எதிர்காலத்திற்கான வழிமுறை கருத்தரங்கம் நடைபெற்றது.

    இதற்கு கல்லூரி முதல்வர் பாலசுந்தரி தலைமை வகித்தார்.

    இதில் சீர்காழி ராஜீவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மைய இயக்குனர் கந்தன் இறால் வளர்ப்பில் முறையான மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார்.

    கருத்தரங்கில் கடலோர நீர் வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்ப இயக்குனர் அந்தோணி சேவியர் சுரேஷ், தொழில்நுட்ப உதவி மேலாளர் குமரவேல், பண்ணை பொது மேலாளர் கோவிந்தராஜ், விஞ்ஞானிகள் குமரன், ரவிசங்கர், சலீம், கல்லூரி பேராசிரியர்கள் ஜாக்குலின் பெரேரா, சந்தோஷ்குமார், இறால் பண்ணை வளர்ப்போர் சங்கத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் மற்றும் பல்கலைக்கழக மாணவ- மாணவிகள், மேலாண்மை அறிவியல் மையத்தினர், தொழில் முனைவோர் மற்றும் இறால் வளர்ப்போர் கலந்து கொண்டனர்.

    ×